இறைவனை அடைவதற்கு தேவையான கீதை கூறும் 26 நற்குணங்கள்
1. அச்சமின்மை, பயமின்மை
2. உள்ளத்தூய்மை
3. விருத்திமார்க்கம், ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்.
4. ஈகை, தர்மம், தானம், அறம்
5. தன்னடக்கம், புறக்கரணங்களை அடக்குதல்.
6. வேள்வி, யாகம், யக்ஞம் செய்தல்.
7. வேதக்கல்வி, சாஸ்திரங்களை ஓதும் முறை.
8. தவம், தபஸ் என்று அழைக்கப்படுகிறது.
9. நேர்மை, ஆர்ஜவம்.
10. அகிம்சை - கொல்லாமை.
11. வாய்மை.
12. சினம் - கோபத்தில் நில்லாமை.
13. துறவு - பற்றினை நீக்கும் தியாகம்.
14. சாந்தம் - பூரண நிம்மதி.
15. குற்றம் கூறாமை.
16. ஜீவதயை.
17. பிறர் பொருளை நயவாமை.
18. நாணம் வெட்கமடைவது.
19. மன உறுதி.
20. தேஜஸ்.
21. மென்மை, நளினமாகக் கையாளுதல்.
22. பிறர் குற்றம் பொறுத்தல்.
23. தளராமை விடாமுயற்சி.
24. சுத்தம்.
25. துரோகமின்மை.
26. தற்பெருமை கொள்ளாமை - செருக்கு.
குறிப்பு: மேற் கூறிய 26 நற்குணங்களில் எது ஒன்று உங்களிடம் இல்லையோ, அதை, உங்கள் உள்ளக் கோயிலில் உள்ள இறைவனிடம் இடைவிடாது மந்திரம் கூறி, மானசீக பூஜை செய்து, நற்குணங்களை ஒவ்வொன்றாக கேட்டு பெறவேண்டும்.
பகவானை நினைத்து முன்னேற நினைக்கும் சாதகர், மிதமாய் உண்டு, மிதமாய் உறங்கி, அனுதினமும் இறை நினைப்போடு கடமைகளை செய்து வர வேண்டும். இப்படிச் செய்தால் அவருடைய துக்கங்கள் அகலும், ஆசையென்ற காற்றால் அனைக்கப்படாத தீபமாகவாழ்வார்.மனதில்சஞ்சலம்,தடுமாற்றம்இல்லாதவரே
அமைதிபடைத்தவர்
Super .... Bro...
ReplyDelete