Thursday, January 6, 2011

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம்


பித்ரு தோஷம் என்பது ஜாதகங்களில் பித்ருகாரகன் சூரிய பகவான் பெற்றிருக்கும் ராசி, பெற்றிருக்கும் சாரம், விரோதம் பெற்ற கிரகச் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவைகளால் அறியப்படுகிறது. சிலருக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், சூரிய பகவான், அவரின் அதிதேவதையான சிவபெருமான், சனி பகவான் ஆகியோரை வழிபட்டு வர தோஷங்கள் விலகும் என்று உறுதியாக நம்பலாம்.

மேலும் இதற்கு பிராயச் சித்தமாக ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து வந்தால் தோஷத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதும் உண்மையே. இதை குடும்பத் தலைவர் செய்ய வேண்டும் என்பது வழக்கம்.

நீங்கள் கூறியிருப்பது போல் சில நேரங்களில் குடும்பத் தலைவர் சங்கல்பம் செய்து கொள்ள முடியாமல் போகும். அக்காலகட்டத்தில் அவரின் மகன் தன் பெயரில் சங்கல்பம் செய்துகொண்டு, பிண்டம் போடும்போது தந்தை இருப்பதால் ஒரு பிண்டத்தைக் குறைத்துப் போட்டுச் செய்துவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது.

உங்கள் மகனை வைத்து இத்தகைய முறையில் நீங்கள் தாராளமாக திலஹோமம் செய்யலாம். இதனால் பாவம் ஒன்றும் வந்துவிடாது. இந்த திலஹோமத்தை செய்ய முடியாதவர்கள் பிரதி தினமும், இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமைகளிலாவது தவறாமல் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வர, பித்ரு தோஷங்கள் நீங்கிவிடும்.

அமாவாசை போன்ற பித்ரு பூஜை நாட்களில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரை போன்ற உணவுகளைப் படைத்து வருவதாலும், தினமும் காக்கைக்கு அன்னமிட்டு வருவதாலும் பித்ரு தோஷம் நீங்குவது உறுதி. இது நம் பெரியோர் கண்ட உண்மை. அதனால் பெரியோர்களின் உதவியுடன் உங்கள் மகளை உங்கள் மருமகனுடன் இணைத்து வைக்கவும். தம்பதிகளை இணைத்து வைத்தால் எவருக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.

2 comments:

  1. பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.



    தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

    இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.




    பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது


    21 தலைமுறைக்கு கயா,காசி யில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்




    A.SUBRAMANIAM.JOTHIDA VALLUNAR

    MOBILE-9910738463/96505720/011-27307584

    ReplyDelete
  2. எங்கள் மகள் தம்பதிகளுக்கு கல்யாணம் ஆகி 12 வருடங்கள் ஆகியும் புத்ரபாக்யம் கிடைக்க வில்லை. திலஹோமம் பண்ண வேண்டுமேயானால் ராமேஸ்வரம் தவிர வேறு இடங்களில் பண்ணலாமா?
    கும்பகோணத்தில் அல்லது வேறு இடங்களில் பண்ணலாமா என்று தெரியப்படுத்தவும்.

    ReplyDelete