Thursday, January 13, 2011

தைப் பொங்கல்

பொங்கலோ பொங்கல்
உழவர்கள் " சேற்றில் " கைவைத்தால்தான் நாம்

" சோற்றில் " கை வைக்க முடியும்.
யார் அவர்கள்? பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள். அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. இந்த தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
" தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!"- . இன்றைக்கு "அறிவியல் உலகம் " அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் "அன்றைய தமிழன் சந்திர, சூரிய போக்கை வைத்து காலத்தையே கணித்தவர்கள். கதிரவன் உத்ராயணப் பயணம் மேற் கொண்டு தனுசிலிருந்து மகர ராசியில் நுழையும் இயற்கை நிகழ்வினைத்தான் "தை" திரு நாளாக கொண்டாடுகிறோம். அந்தத் தை முதல் நாளுடனேயே தமிழ் புத்தாண்டு பிறக்கிறது."அதாவது, தை முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டுத் துவக்க நாளான முதல் நாளும் வருகிறது. ஆ ங்கில
ஆ ண்டு 2001. திருவள்ளுவர் ஆ ண்டு 2032. எனவே தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும் தமிழ்புத்தாண்டு பிறப்பையும் ஒருசேர கொண்டாடுகிற நிலைதனை பெற்றிருக்கிறோம். இது இந்துக்கள் பண்டிகை, கிறிஸ்தவர்கள் பண்டிகை அல்லது முஸ்லிம் பண்டிகை என்று செல்லாமல் தமிழர் திருநாள் என்கிறோம்.
இந்த தமிழர் திருநாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்ப்போமா?
தை பிறந்தால்...
நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சாரி, வானம்பார்த்து மழைக்கு கதறும் பூமியானாலும் சாரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் ' தை ' யில்தான். உழைப்பை அறுவடை செய்துசெல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா.
தை மாதம் கொண்டாடப்படுவதால்" தைத் திருநாள் " என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி கண்ணின் கருமணி போல பாதுகாக்கிற உழவனின் அந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால் தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும்; அதனால் தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர் செனத்தியோ புத்தாடைகள் வாங்குவதையோ உழவன் ஒத்திப் போட்டுக் கொள்வது வழக்கம்.
எல்லாத்துக்கும் " தை பிறந்தால் வழி பிறக்கும் " என்ற பழமொழியே அதனால்
ஏற்பட்டது தானே! போகிப் பொங்கல் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பொங்கல். " பழையன கழிதலும் புதியன புகுதலும் அந்நாளில்தான். வீட்டில் வேண்டாத பொருட்களை குப்பை கூளங்களோடு தீயிட்டுப் பொசுக்குவார்கள். சுண்ணாம்பு தீற்றப்பட்ட (வெள்ளையடிக்கப்பட்ட) வீடுகள் புத்தாடை அணிந்தது போல 'ஜம்'என்றிருக்கும். வாயிற்படிகளின் நுழைவு நெற்றியில் மாவிலை, மஞ்சள், மாரிக்கொளுந்து கோர்த்து கட்டுவார்கள். 'காப்புக் கட்டுதல்' என்பார்கள். மொத்ததில் உறைவிடம் நிறைவிடமாகக் காட்சி தரும். சிறுவர் முதல் பொ¢யவர் வரை தத்தம் அலுவல்களில் பம்பரமாக சுழன்று கொண்டிருப்பார்கள்.
மார்கழி மாத குளிரில் சிறுவர் முதல் பொரியோர் வரை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடி இறைவனை வழிபடுவார்கள். பீடைகள் ஒழிக்கப்பட்டு மங்கள வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நாள்தான் போகித் திருநாள். மறு நாள் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? ராகு,சனி பார்த்து நல்லநேரம் பஞ்சாங்கப்படி குறிப்பது பொரியவர்கள் கடைப்பிடிக்கும் பழக்கம்.
சூரியப் பொங்கல்
தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரியபகவானை போற்றி வணங்கி வழிபடும் பொங்கல் திரு நாளாக கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மெருகோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். பெண்கள் தான் அந்த விடியலின் விளிம்பில் என்ன சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு ( நான் 126 புள்ளி வச்சு இல்ல கோலம் போட்டேன் போன்ற பறைசாற்றல்களும் கூட இருக்கும். ) தேடிப்பிடித்து பசுஞ்சாணம் கொண்டுவந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாது சமர்த்தாக வைப்பார்கள்.
பின்னே இ தெல்லாம் ஏனோதானோவென செய்யமுடியாது இல்லையா ? வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் படர்ந்திருக்கிற பூசனிக்கொடியில் கதிரவனை வரவேற்க இதழ் விரிக்கலாமா என தயக்கத்திலிருக்கும் பூசணிப் பூக்களை, அதன் பட்டுப் பூவுடலில் முத்து முத்தாக நிற்கும் பளிங்குப் பனித்துளிகள் சிதறிவிடாமல், அவைகளுக்கு வலி தொரியாமல் மென்மையாகப் பறித்துக் கொண்டு வந்து சாண உருண்டைகளில் செருகி, சற்று எட்ட நின்று பெண்கள் அழகு பார்ப்பதும் கூட அந்தப் பொழுது புலராத வேளையில்தான்.
பச்சாரிசி மாவைக் கரைத்து, காவிக் கட்டியை கரைத்து வண்ணப் பொடிகளை சிறுசிறு வட்டில்களில் எடுத்துக் கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச் செருகிக் கொண்டு முன் அறை, சமையல் அறை, நடுக்கூடம் உள் அறை, மாடிப்படி, மொட்டை மாடி, முற்றம் என வீட்டில் ஒரு இடம் பாக்கியில்லாமல் உட்கார்ந்து, எழுந்து தன் கைத் திறமைகளை காட்டும் விடலைப் பெண்களுக்குத் தான் என்ன குதூகலம்!
மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாக பொழிகிறான். அதே போல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காக கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.
''பாரிதியே பொருள் யாவிற்கும் முதலே" என்கிற முறுக்குமீசைக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப்பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப் படுத்தி வணங்குதல் கடைப் பிடிக்கப்படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்கு துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ண்டில் நல்ல விளைச்சளைத் தரவும் வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.
சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கூட்டி ( கிராமங்களில் தான் பெரும்பாலும் அப்படி... நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் தான். ) மாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறி போல தோகையுடன் கூடிய கரும்புகளை நிறுத்தி இருப்பார்கள். அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு, கரும்புச் சாறில் செய்தவெல்லம் இட்டு, பாலூற்றி, பசு நெய் விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க... ஆ யிற்று பொங்கல் பொங்கி வழிய " பொங்கலோ பொங்கல் " என்ற உற்சாக குரல்கள் பீறிட பொங்கல் தயார். குடும்பமே கூடிநிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து, கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்குபூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல்செய்து வணங்குவார்கள். எண்சாண் உடம்பும் பூமிதனியில்பட விழுந்து பாரிதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்.
மாட்டுப் பொங்கல்
மூன்றாம் நாள் " மாட்டுப் பொங்கல் " உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பொரிக்க, (வீட்டுக்குவெளிச்சம் தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறுபூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராக இருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்புசெட் உட்பட அனைத்து கருவிகளையும் இ தேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலே' பொங்கல் மாட்டுப் பொங்கல் " என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோசித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் " மாட்டுப் பொங்கலாக " கொண்டடுகின்றனர். சிறுவர் முதல் பொரியோர் வரை விரும்பிச்சுவைக்கும் விதவிதமான கரும்புகள் தெருத் தெருவாக விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரமாயிற்றே!
காணும் பொங்கல்
நான்காவது நாளை காணும் பொங்கலாக அனுசாரிப்பார்கள். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பொரியோர் ஆ சி பெறுதல் இந் நாளில்தான். தெருக்களில் ஒலி பெருக்கிகள்காதை துளைக்கும். அந்த நற்பணி மன்றம், இந்த நல சங்கம், ரசிகர் மன்றங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரிஅடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். இரவில் இசை கச்சோரிகள், நாடகம் என்று ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடுசெய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இ ரவு விளக்கு வெளிச்சத்தில் நடை பெறுவதும் உண்டு.

ஜல்லிக் கட்டு
கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்தநாளில் நடத்தப்படும். கரக ட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் வற்றோடு வீர விளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெறும். சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பாரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப்பார்க்க அமொரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான்,மலேசியா, சிங்கப்பூர், ஆ ஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். லட்சக் கணக்கானவர்கள் திரண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள். இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்கா காளைகள் வீரர்களைப் படுமோசமாக காயப்படுத்திவிடும். இ தையெல்லாம் பொருட்படுத்தாமல் வீரசாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகைசூடுவார்கள். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம், காங்கேயம், ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன் படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள். தமிழகத்தில்மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் கண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தொரிவிக்கிறது.
(ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தொரிஞ்சா அந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கிவிடுவார்கள். மாடு முட்டி குடல் சா¢ஞ்சு செத்துப்போனா மக வாழாவெட்டியா போயிருவா என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம் )
" ரேக்ஸ்ரா ரேஸ் " எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் கூட பல இடங்களில் நடை பெறும். இ தற்கும் ஏராளாமான கூட்டம் கூடும். எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்¨க் பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.
சாவக்கட்டு
இது தவிர " சாவக் கட்டு" என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடை பெறுகிறது. கோழிச் சண்டை என்று சொன்னாலும் சேவல்களைத்தான் சண்டை போடவிடுவார்கள். சேவல்களை கோழிச் சண்டைக்காகவே வளர்ப்பார்கள். சேவல் கால் நகங்களை வெட்டி வெட்டி கூராக்கி வருவார்கள்.
முதிர்ச்சியடைந்ததும் அதை சண்டைக்கு பழக்குவார்கள். சேவலின்
கால்களில் ஒரு சாண் நீளமுள்ள கூரான கத்தியை கட்டிவிடுவார்கள். அவரவர் சேவல்களை களத்தில் எதிரும் புதிருமாக இறக்கிவிடுவார்கள். சேவல்கள் எகிறி எகிறி சண்டைபோட்டுக்கொள்ளும். சண்டையில் சேவல்களின் காலில் உள்ள கத்தியால் இரண்டுக்கும் காயம் ஏற்படலாம். ஆ னால் ஆ க்ரோசமான சண்டையில் எதாவது ஒரு சேவல் தலை சாய்ந்துவிடும். ஜெயித்த சேவலுக்குரியவர் தோற்ற சேவலை எடுத்துக் கொள்வார். இனால் எந்தச் சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுபவர்கள் கூட்டம்தான் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். இது சில இடங்களில் அடிதடி, கத்திகுத்து வரை போய் விடுவதும் உண்டு. இப்படி நடக்கும் இடங்களில் அடுத்த தடவை சாவக்கட்டு கிடையாது என போலீசார் தடை விதித்து விடுவதும் உண்டு. அவர்களுக்கு 'கடுக்காய்' கொடுத்துவிட்டு வேறு இடத்தில் ரகசியமாக சாவக்கட்டை நடத்துவார்கள். இது ஒரு சூதாட்டம் போல் நடப்பதால் பெரும்பாலும் கோழிச் சண்டை நடத்த போலீஸ் தடை இருக்கும். அதை எல்லாம் மீறி சாவக்கட்டு பொங்கல் திருநாளில் தமிழகத்தில் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளில் கிராமங்களில் கோழிக்குழம்பு மணக்கிறது என்றால் அது பெரும்பாலும் சாவக்கட்டில் சாவடிக்கப்பட்ட சாவல் குழம்பு மணமாகத்தானிருக்கும் என்றால் அது மிகையில்லை.
பொங்கல் என்பதும் நான்கு எழுத்து. பொங்கல் விழா நடக்கும் நாட்களும் நான்கு. தமிழகத்தின் பாரம்பரியமான கலை, கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுகளை பொங்கல் நாளில் புதுப்பித்து மகிழ்கின்றனர். பழமையான கிராமிய கலைகள் அழியாமல் பாதுகாக்கும் விழாக்களில் " பொங்கலுக்கும் பங்கு இருக்கிறது என்பது பெருமையான விசயம் தானே!
சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு தமிழர்திருவிழாவாக கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது தனினும் மகிழ்தன்றே'!!

No comments:

Post a Comment