Friday, January 7, 2011

கோமாதாவின் பெருமை தெரியுமா?

கோமாதாவின் பெருமை தெரியுமா?


இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.

• பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்

• கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்

• சிரம் - சிவபெருமான்

• நெற்றி நடுவில் - சிவசக்தி

• மூக்கு நுனியில் - குமரக் கடவுள்

• மூக்கினுள் - வித்தியாதரர்

• இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்

• இரு கண்கள் - சந்திரர், சூரியர்

• பற்கள் - வாயு தேவர்

• ஒளியுள்ள நாவில் - வருண பகவான்

• ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்

• மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்

• உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்

• கழுத்தில் - இந்திரன்

• முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்

• மார்பில் - சாத்திய தேவர்கள்

• நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு

• முழந்தாள்களில் - மருத்துவர்

• குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்

• குளம்பின் நடுவில் - கந்தவர்கள்

• குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்

• முதுகில் - உருத்திரர்

• சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்

• அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்

• யோனியில் - ஏழு மாதர்கள்

• குதத்தில் - இலக்குமி தேவி

• வாயில் - சர்ப்பரசர்கள்

• வாலின் முடியில் - ஆத்திகன்

• மூத்திரத்தில் - ஆகாய கங்கை

• சாணத்தில் - யமுனை நதி

• ரோமங்களில் - மகாமுனிவர்கள்

• வயிற்றில் - பூமாதேவி

• மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்

• சடாத்களியில் - காருக பத்தியம்

• இதயத்தில் - ஆசுவனீயம்

• முகத்தில் - தட்சிணாக்கினி

• எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்

• எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

No comments:

Post a Comment