Monday, February 28, 2011

பிறந்த உடன் மாமன்/தந்தையை விழுங்கி விட்டது என்று கூறுவதில் உண்மை உள்ளதா?

பிறந்த உடன் மாமன்/தந்தையை விழுங்கி விட்டது என்று கூறுவதில் உண்மை உள்ளதா?

இப்படிக் கூறுவதில் அடிப்படை உண்மை இல்லாமல் இல்லை. பாலாரிஷ்டதோஷம் போன்ற நூல்களில் இதற்கென்று சில அத்தியாயங்கள் உள்ளது. பிறந்தவுடன் தாயை இழக்கும் ஜாதகம், தந்தையை இழக்கும் ஜாதகம், உறவினர்களை அழிக்கும் ஜாதகம், தாய்மாமனுக்கு ஆகாத ஜாதகங்கள் என பலவகை ஜாதகங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
சித்திரையில், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு சூரியன் பலவீனமாகி, 9வது இடத்தில் ராகு/கேது/சனி ஆகியவற்றில் ஏதாவது இருந்தால், அந்தக் குழந்தையால் அதன் தந்தைக்கு கண்டம் ஏற்படும். மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் தந்தை வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கலாம்.
இதுபோன்ற கண்டங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முற்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அதனை முதலில் குடும்பத்துப் பெரியவர்களிடம் (பேரன், பேத்தி எடுத்த மூத்தவர்களிடம்) கொடுத்து ஆசீர்வாதம் பெறச் செய்வர். இதன் காரணமாக அந்தக் குழந்தையின் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை.
இதேபோல் சந்திர கிரகணத்தில் பிறந்த குழந்தைக்கு, ஏழரைச் சனி/ அஷ்டமச் சனி இருந்து தாய் ஸ்தானம் வலுவாக இல்லாமல் இருந்தால் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
குழந்தையின் தோஷத்தால் மட்டும் தந்தை, தாய், உறவினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அவரவர் ஜாதகத்திலும் அந்தக் காலகட்டத்தில் ஆயுள் குறைவான தசா புக்தி நடக்கலாம். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்திருந்தால் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடுவார் என ஜோதிடம் கூறுகிறது.
இதுபோன்ற ஜாதக அமைப்பை உடைய தம்பதியர், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதன் மூலம் கண்டத்தில் இருந்து தப்ப முடியும். இதை ஏற்றுக்கொள்ளாமல் விவாதம் செய்யும் தம்பதிகளிடம் ஜாதக அமைப்பின் காரணமாக ஏற்படும் நிகழ்வுகளையும் தெளிவாக விளக்கிக் கூறுவோம்.
ஒரு சில தம்பதிகள் ஒரு குழந்தை போதும் என்ற மனநிலையுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு முதல் குழந்தையின் தசாபுக்தி வளர்ச்சியளிக்கும் வகையில் இருக்காது. இதனால் மேலும் ஒரு குழந்தை இருப்பது நல்லது என்று அறிவுரை கூறுவோம்.மேலும் ஒரு சில தம்பதிகள் முதல் குழந்தை இருந்தாலும், மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுவர். இதில் முதல் குழந்தையின் ஜாதகத்தில் சகோதர ஸ்தானம் வலுவில்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் 2வது குழந்தைக்கு முயற்சிக்காமல் இருப்பது நல்லது.
ஏனெனில் முதல் குழந்தையின் ஜாதகத்தில், மனவளம் குன்றிய அல்லது ஊனமுற்ற சகோதர/சகோதரி இருப்பதற்கான கிரக அமைப்பு காணப்படும். அதனால் 2வது குழந்தையை தவிர்த்து விட வலியுறுத்துவோம்.
வாரி வழங்கும் குழந்தைகளின் அமைப்பு: ஒரு சில தம்பதிகளுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அறிவு, அழகு, லட்சுமிகடாட்சம் பொருந்திய குழந்தைகள் பிறப்பதுண்டு.
நல்ல யோகமான தசாபுக்தியில் ஒரு குழந்தை பிறக்கும் போது அது வெள்ளிதட்டில் உணவு உண்டு, சகல சம்பத்துகளையும் கொண்டு வாழும் தன்மை பெற்றிருக்கும். எனவே, அந்த வசதிகளை குழந்தைக்கு அளிக்கக் கூடிய அளவுக்கு பெற்றோரின் வாழ்வில் திடீர் ஏற்றம் ஏற்படும். தொழில் சிறக்கும், செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது என்று கூறுவது உண்மையா?

குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது என்று கூறுவது உண்மையா?

ஜோதிடத்தில் மட்டுமின்றி சில சித்தர்களும் இதைப் பற்றிக் கூறுகையில், குழந்தை இல்லாதவர்களுக்கு “விட்டகுறை, தொட்டகுறை முடிந்து விட்டது; அவர்களுக்கு கொள்வினை, கொடுப்பினை” கிடையாது.
இதில் விட்டகுறை, தொட்டகுறை என்று கூறுவதை ரத்த சம்பந்தமான உறவுகளாகப் பார்க்கக் கூடாது. ஒருசிலரை ஏமாற்றி சொத்துக்களை அபகரிப்பது, குறுக்கு வழியில் சம்பாதிப்பது போன்றவையும் விட்டகுறை, தொட்டகுறைதான். எனவே, குழந்தையில்லை என்பதற்காக இந்த ஜென்மத்தில் எந்த அராஜகமும் செய்து கொண்டிருக்கக் கூடாது. இதுபோன்ற பாவங்களைச் செய்தால் அதனை அனுபவிக்க அவர்கள் மறுஜென்மம் எடுத்தாக வேண்டும்.
பந்தங்கள் இல்லாமல் இருக்கும் சில தம்பதிகள், வசதி வாய்ப்பு இருந்தாலும், எந்த அலட்டலும் இல்லாமல், எளிமையாக வாழ்க்கை நடத்தும் தம்பதிகளுக்கே முக்தி கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஒரு சில தம்பதிகள் தங்களுக்கு குழந்தை இல்லை என்றாலும் அதிகளவில் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, எளியவர்களுக்கு வழங்காமல், தேவைக்கும் அதிகமான ஆடம்பரத்துடன் வாழ்வார்கள்.
எனவே, குழந்தை இல்லை என்ற ஒரு தகுதியை வைத்து மட்டும் அவர்களுக்கு அடுத்த ஜென்மம் இல்லை என்று கூற முடியாது. குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த பிறவி உண்டாகும். இதில் ஒரு சில தம்பதிகளுக்கு மட்டுமே குழந்தை பாக்கியம் இல்லாமலும் போய், முக்தியும் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கு மோட்ச ஸ்தானம் (12ஆம் இடம்) நன்றாக இருப்பதே அதற்கு காரணம்.

அத்திக்காயின் சிறப்புகள் என்ன?

அத்திக்காயின் சிறப்புகள் என்ன?

கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும் என்பது அத்திக்காய் பற்றிய பழமொழி. அத்திக் காய்க்கு உள்ள துவர்ப்பு சக்தி காரணமாக சித்த வைத்தியத்தில் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
உணவுப் பொருட்களில் வாழைப்பூ உள்ளிட்ட சில பொருட்கள் தவிர துவர்ப்பு சுவையுள்ள பதார்த்தங்களை சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஆனால் துவர்ப்பு சுவைக்கு ரத்த சுத்திகரிப்பு, நரம்புகளை சிறப்பாக இயங்க வைப்பது உள்ளிட்ட சக்தி உள்ளது. அத்திக்காயை பொறியல் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் அளிக்கும்.
அதர்வண வேதத்தில் அத்திக்காய் அப்பத்தை யாகத்தில் இடும் போது அதீத பலன் கிடைக்கும். அத்திக்காயை மாமிசத்திற்கு இணையான, மிக வலிமையான பொருளாக அதர்வண வேதம் கூறுகிறது. இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயை சாப்பிடுவதன் மூலம் நலம் பெறலாம்.
வீடுகளில் தோஷம் ஏற்பட்டாலும், வீட்டின் பின்புறம் தென்திசையில் அத்திக்காய் மரத்தை வளர்த்தால் பலனளிக்கும். தியானம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசனங்களை (அமரும் பலகை) அத்தி மரத்தில் செய்வதன் மூலம் தியானத்தின் சக்தியும், மன ஒருமுகத்தன்மையும் அதிகரிக்கும். அத்தி மரத்திற்கு அந்த சக்தி உள்ளது.
தினசரி சாப்பிட முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது அத்திகாயை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு ஏற்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அத்திமரம்.
பழங்காலத்தில் தாயம் விளையாடப் பயன்படும் பலகைகள், தாயக்கட்டைகளை அத்தி மரத்தில் செய்ததாக நூல்கள் கூறுகின்றன. மேலும் அதனை தெய்வப் பொருளாகவும் அதனைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முருகனுடைய அம்சமாகவும் அத்தி மரம் கருதப்படுகிறது.
சங்க காலத்தில் ஆயுதப் பிரயோகத்திலும் அத்தி மரம் இடம்பெற்றுள்ளது. அத்தி மரத்தில் குத்திப் பார்க்க வேண்டும் என்பது போன்ற பழமொழிகளும் பிரசித்தம். போர்ப் பயிற்சி பெறும் மாணவர்களின் அம்பு எய்யும் திறன், வாள்வீசும் திறன் ஆகியவற்றை அறியை அத்தி மரம் பயன்படுத்தப்பட்டதாகவும் சான்றுகள் இருக்கின்றன. அத்தி மிக உறுதியான மரம் என்பதால் இது போன்ற பயிற்சிகளுக்கும் உதவியது.

கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளை தொட்டு வணங்கலாமா?

கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளை தொட்டு வணங்கலாமா?

கோயில் என்பதை மரியாதைக்குரிய இடமாக கருதுகிறோம். பொதுவாக மரியாதைக்கு உரிய மனிதர்களையே நாம் தொட்டுப் பேசுவது கிடையாது. ஒரு சில அடி தூரம் தள்ளி நின்று பவ்யமாகவே பேசுவோம்.
மரியாதைக்குரிய மனிதர்களுக்கு இவ்வளவு மதிப்பளிக்கும் நாம், இறைவனைத் தொட்டு வணங்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே, தெய்வச் சிலைகளை தொடாமல் வணங்குவதே சிறந்தது.
இதற்காக சிலைகளைத் தொட்டால் பாவம், தீட்டு என்பது போல் காரணம் கற்பித்துக் கொள்ளக் கூடாது. மரியாதை நிமித்தமாகவே சிலைகளை தொடாமல் வணங்க வேண்டும் என்று கூறுகிறேன். இறைவன் மேன்மை பொருந்தியவர் என்பதையும், அவரைத் தொடும் தகுதி நமக்கு இல்லை என்பதாலும், தொடாமல் தள்ளி நின்று வணங்குவது நல்லது.

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்? இயல்பு நிலையில் ஏற்படும் மாற்றத்தையே ஜோதிட ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் கிரகணம் எனக் கூறுகிறோம். கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது.
இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கிரகண நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் போது சூரியன் அல்லது சந்திரனின் நேர்மறைக் கதிர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.
இதேபோல் சூரிய/சந்திர கிரகணங்களில் பிறப்பவர்கள் ஜோதிட ரீதியாக சில இன்னல்களைச் சந்திக்க வேண்டி வரும். இது ஒவ்வொரு ராசி/லக்னத்திற்கும் வேறுபடும். ஏனெனில் கிரகண நேரத்தில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் சூரியன்/சந்திரன், சாயா கிரகங்களான ராகு/கேதுவுடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும்.

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணமும், மகத்துவமும்

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணமும், மகத்துவமும் இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால், இளைப்பு, களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
இந்த பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால், ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால், அதனை கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
மகத்துவம்: இதேபோல் வனதேவதைகளுக்கு காணிக்கையாக கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள். மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளை ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

விதிப்படி நடக்கும் என்ற பழமொழி மனிதன் முயற்சிக்கு தடை ஏற்படுத்துகிறதா?

விதிப்படி நடக்கும் என்ற பழமொழி மனிதன் முயற்சிக்கு தடை ஏற்படுத்துகிறதா?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை உதிக்கும் போது விதிக்கப்பட்டது மற்றும் விதிப்படி நடக்கும் என்ற கூற்றும், விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூற்றும் பரவலாக கூறப்படுகிறது.
இதில் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற கூற்று ஜோதிடத்தில் வந்தது எப்படி என்பதை முதலில் பார்ப்போம். விதி என்றால் லக்னம் என்றும், மதி என்றால் ராசி (சந்திரன்). லக்னத்தால் ஏற்படும் பாதிப்புகளை, ராசி (சந்திரன் நின்ற நிலை) நன்றாக இருந்தால் தவிர்த்துவிட முடியும்.
சக்தி வாய்ந்த சில பரிகாரங்கள் மூலமாக தலைவிதியையும் மாற்றிவிட முடியும் என சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உதாரணமாக பூர்வ புண்ணிய ஸ்தானம் ஓரளவு நன்றாக இருந்து, சந்திரனின் நிலையும் நன்றாக இருந்தால் எல்லா விஷயத்திலும் வெற்றி பெறலாம்.
பொதுவாக நிறைய சங்கடங்களை ஒருவர் சந்திப்பதற்கு, அவரது பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இல்லாமல் இருப்பதே காரணம். இதுபோன்றவர்களுக்கு எப்படி பரிகாரம் செய்ய முடியும் என சிலர் கேள்வி எழுப்பலாம்.
ஒவ்வொரு ஆண்டிலும் புர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சில மாதங்கள் அல்லது சில நாட்கள் ஆட்சியோ, உச்சமோ (கோச்சாரத்தில்) அடையும். அந்தக் காலகட்டத்தை பரிகாரம் செய்வதற்கு ஏற்றதாக தேர்வு செய்து, அந்த ஜாதகருக்கு ஆகம விதிகளின்படி பரிகாரம் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.
அதனால் ஒருவரது ஜாதகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பரிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது அவை ஏமாற்றுத்தனமாக மாற்றப்பட்டுள்ளதால் மக்களுக்கு பரிகாரங்கள் மீதான மதிப்பு குறைந்து வருகிறது.எந்த கிரகம் சரியில்லாமல் இருக்கிறது என்பதைப் பார்த்து, அதற்கான மந்திரங்கள், கோயில்களைத் தேர்வு செய்து குறிப்பிட்ட காலகட்டத்தில் பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?

விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?

பூர்வ ஜென்மத் தொடர்பையே ‘விட்டகுறை தொட்டகுறை’ என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு விட்டு, அநாதையாக விட்டு விட்டதால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். இது தவறான அர்த்தம் கற்பிக்கிறது. தொட்டு வந்த துறை, விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தப் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தார் போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது/கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்டகுறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல. பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருள்.

அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா?

அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா? ஆழ்மனதில் (நனவிழி மனம்) உள்ள நிறைவேறாத ஆசைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் எண்ணங்களே கனவுகளாக வெளிப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜோதிட ரீதியாக அதிகாலை என்பது சுக்ரோதய காலகட்டம் என்று கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அதீத ஆற்றல் கிடைக்கும். அதிகாலை 3.40 முதல் சூரிய உதயம் வரையிலான காலத்தில் சுக்கிரனின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். இதனை பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவர். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தக் காரியத்தையும் துவக்கலாம்; அதற்கு நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்று முன்னோர்கள் கூறுவர்.
காமசூத்திர நூல்களிலும் இந்தக் காலகட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்த காலத்தில் உருவாகும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக, அறிவு நிறைந்தவர்களாக இருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.
கனவுகளைப் பொறுத்தவரை சுக்கிரன் ஆதிக்க காலமான பிரம்ம முகூர்த்தத்தில் காணக் கூடிய கனவுகள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல கனவு, கெட்ட கனவு என இரண்டுக்குமே இது பொருந்தும்.

ஒரு சில மனிதர்களை கடவுளுக்கு நிகராக வழிபடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

ஒரு சில மனிதர்களை கடவுளுக்கு நிகராக வழிபடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

ஒவ்வொரு மதத்திலும் குறிப்பிட்ட சில மகான்கள், சித்தர்கள் கடவுளாக மதிக்கப்பட்டுள்ளனர். மனிதப்பிறவி எடுத்து தங்களின் ஒழுக்கம், ஜீவகாருண்யம், இறைநெறி ஆகியவற்றால் தெய்வநிலையை அடைந்தவர்கள் பல‌‌ர் உ‌ண்டு. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், காஞ்சி மகா பெரியவர், அரவிந்தர், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் மனிதப்பிறவியில் இருந்து தெய்வநிலையை அடைந்தவர்கள்.அந்தவகையில்அவர்கள்
வணங்கத்தக்கவர்கள்.

திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்து பயிர்’ எனக் கூறுவதன் அர்த்தம் என்ன?

திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்து பயிர்’ எனக் கூறுவதன் அர்த்தம் என்ன?

திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும்.
ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும், பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக் கூடிய ஒன்று. கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.

ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.
பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.
ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.

குழந்தைகளுக்கு குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

குழந்தைகளுக்கு குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும். கடந்த காலங்களில்  ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்?

ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்?

பொதுவாக கருவில் இருக்கும் போதே (ஏறக்குறைய 100 நாட்களுக்குப் பின்னர்) குழந்தையின் ஜாதகம் பலன்தரத் துவங்கி விடும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஆனால் ஒரு சிலர், குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும் எனக் கூறுவது உண்டு. குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் இருந்தால், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான பாசப் பிணைப்பு குறைந்துவிடும் என்பதால் அப்படிக் கூறுகின்றனர்.
ஒரு சில பெற்றோர், கரு உருவாகும் சமயத்தில் சாதாரண நிலையில் இருந்தாலும், குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து விடுவர். எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார்.
பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக வீடு திரும்பினர். அவர்கள் முன்பு வசித்த வாடகை வீட்டிற்கு அல்ல... புதிதாக அவர்கள் கட்டிய சொந்த வீட்டிற்கு. இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒரு சில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும். ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேற்கூறியதற்கு நேர்மாறான பலன்கள் உருவாவதும் உண்டு.
பொதுவாக பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி, அந்தரம் இருக்கும் காலகட்டத்தில் உருவாகும் குழந்தைகள், மிகப்பெரிய யோகம் உள்ளதாகவும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கும். ஆனால், பெற்றோருக்கு ஜாதகம் சரியில்லாத நேரத்தில் உருவாகும் குழந்தைகள் நோயாளியாகவும், அதிர்ஷ்டமற்றதாகவும் இருக்கும் என நூல்கள் கூறுகின்றன
குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோரின் ஜாதகமே பெரும்பாலும் காரணமாகி விடுகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும் இதுவே காரணம்.

கலியுகம் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா?

கலியுகம் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா?
கலியுகம் மட்டுமின்றி பல்வேறு ஜோதிடத்தில் யுகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற 4 யுகங்கள் பற்றியும் பண்டைய ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.
இதில் கிருகயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் என்றும், திரேதாயுகத்திற்கு 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் என்றும், துவாபரயுகத்திற்கு 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள், தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் எனறும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகத்தில் 5,110 ஆண்டுகளே முடிந்துள்ளது.
மேற்கூறிய 4 யுகங்களிலும் கலியுகம் மிகச் சக்தி வாய்ந்தது. கலி என்றால் சனி. கலியுகம் என்றால் சனியுகம் என்றும் நம்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடந்து வரும் அசம்பாவிதங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பூமிப்பகுதியை கடல் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். அடுத்தடுத்து சுனாமி வரும்.
கலியுகத்தில் மக்களின் மனநிலை எப்படியெல்லாம் மாறும், மனசாட்சிக்கு இல்லாமல் ஒருவரை ஒருவர் அழித்து வாழ்வது என்பது பற்றி சில வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்?

புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்?

ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர். ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும் போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும். இதனை நீர் வலம் விடுதல் என்று கூறுவர்.
பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர்.
புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள், சில கெட்ட சக்திகள், கண் திருஷ்டி உள்ளிட்டவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.
இதேபோல் வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் கண் திருஷ்டி இருக்கும் என்பதால் அந்த குழந்தை முதன் முதலாக தந்தை வீட்டிற்கு வரும் போது ஆரத்தி எடுக்கின்றனர். இதனை கவுரவிக்கும் விதமாகவும் கருதலாம்.
ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் நீர், நெருப்பு (கற்பூரம்), இலை (வெற்றிலை) ஆகியவற்றுக்கு எந்த தீய சக்தியையும் விரட்டும் ஆற்றல் உண்டு. திலகம் இடும் பழக்கமும் சங்க காலம் முதலே இருந்து வந்தததும் குறிப்பிடத்தக்கது

மாலை நேரத்தில் பிறருக்கு பணம், நகை வழங்கக் கூடாது எனக் கூறுவது சரியா?

மாலை நேரத்தில் பிறருக்கு பணம், நகை வழங்கக் கூடாது எனக் கூறுவது சரியா?

அந்திவேளை, சந்திவேளையில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர். இதில் அந்திவேளை என்பது உச்சி வெயில் காலம்; சந்திவேளை என்பது பகலும், இரவும் சந்திக்கும் மாலை/காலை நேரம். பொதுவாக இரவும், பகலும் இணையக் கூடிய காலத்தில் உடலியல் கூற்றுப்படி பிராண வாயு வெளிப்படுத்தும் விதம், உள்வாங்கும் விதத்தில் இருக்கும் என்பதால் மனம் நிலையாக இருக்காது. எனவே அந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டால் இழப்புகள் ஏற்படும் என்ற காரணத்தை மனதில் கொண்டே முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்தனர். குறிப்பாக, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மண்ணெண்ணை விளக்குகளின் உதவியுடன் முன்னோர்கள் செயல்பட்டனர். எனவே இரவு நேரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வதல் பல சிக்கல் ஏற்பட்டது. எவ்வளவு கொடுத்தோம் என்பதிலும் உறுதியற்ற நிலை இருந்திருக்கலாம்.
தற்போது மின்சார வசதி உலகம் முழுவதும் இருந்தாலும், மாலை 5.45 முதல் 6.30 மணி வரையிலான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பது, பணம் கொடுப்பது, வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்ல பலனளிக்கும். இங்கே பணம் கொடுப்பது என்று நான் குறிப்பிட்டது ரூ.50, 100 கடனாக வழங்குவதை அல்ல. மாறாக பல ஆயிரங்களை முதலீடு செய்வதையும், கடனாக வழங்குவதையும், முன்பணமாக வழங்குவதையும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும் தவிர்க்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கூறியுள்ளேன். ஒரு சிலர் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை தவற விட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் எனக் கூறலாம். அதுபோன்ற சமயத்தில் இனிப்பு அல்லது வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அல்லது கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ளலாம்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு உரிய சிறப்புகள் என்ன?

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு உரிய சிறப்புகள் என்ன?

வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்று கூறுவது உண்டு. அந்த வகையில் மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது. தென்னிந்தியாவில் செவ்வாயோ வெறும் வாயோ என்ற வழக்கு உள்ளது. எனவே, அன்றைய தினம் தெய்வ வழிபாடு சிறந்தது எனக் கூறுவர். மேல்நோக்கு நாள், நல்ல நட்சத்திரம் இருந்து அமிர்தயோகமான செவ்வாய்க்கிழமையில் வீடு/மனை வாங்க முன்பணம் அளிப்பதுடன், ஒப்பந்தமும் போடலாம், வியாபாரம் துவங்கலாம், செங்கல் தொழில், கட்டிட கட்டுமானம் ஆகிய தொழில்கள் துவங்கவும் உகந்தது.
பொதுவாகவே, மருந்து உண்பதற்கும், ரத்த தானம் செய்வதற்கும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் செவ்வாய்க்கிழமை உகந்தது.
வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்று கூறுவர். அன்றைய தினம் இறைவனை வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். இறந்தவரை எழுப்புவிக்கும் சஞ்சீவி மந்திரம் அறிந்தவர் சுக்கிராச்சாரி என ஜோதிட கூறுகிறது. சூட்சும சக்தி உடையவராக சுக்கிரன் கருதப்படுகிறார்.
எனவே, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறைவனை வணங்கினால் காரிய சித்தி கிடைக்கும். தோஷக் குறைபாடுகளும் நிவர்த்தியாகும்.

எப்போது காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது ?

காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது?

மன்னர் காலத்திற்கு முன்பாகவே காலில் விழுந்து வணங்கும் முறை நடைமுறையில் இருந்ததாக பழங்கால நூல்கள் கூறுகின்றன. பெரியவர்களின் ஆசியை பெறுவதற்கும், இறைவன் அருளைப் பெறுவதற்கும் காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. வணங்கும் முறையில் பல வகை உண்டு. இரு கைகளையும் ஒன்று சேர்த்து தலைக்கு மேல் வைத்து இறைவனை வணங்குகிறோம். அதற்கு அடுத்தபடியாக மார்புக்கு நேராக கழுத்துக்கு கீழ் இரு கைகளையும் சேர்த்து சக மனிதர்களை வணங்குகிறோம்.
வயிற்றின் (நாபியில்) மேல் ஒரு கையை மட்டும் கைவைத்து குனிந்து வணங்குதல் என பல முறைகளில் வணங்குவதை கடைபிடிக்கிறோம். குரு, சித்தர்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். மண்ணோடு மண்ணாக தன்னை இணைத்துக் கொள்வதே இதன் பொருள்.
கோயில் கொடி மரத்திற்கு முன்பாக வணங்கும் போது அங்கம் அனைத்தும் தரையில்படும் விதமாக வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதில் கூட பல முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்?

ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்? ஒரு தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக கணவரின் ஜாதகத்திற்கே வலிமை அதிகம். ஆனால் குழந்தைகள் பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளின் ஜாதகமே பிரதானமாக வேலை செய்யும். இதில் ஆண்/பெண் என்ற பேதம் இல்லை.
பிள்ளைகள் பிறந்த பின்னர் தாய், தந்தையர் ஜாதகத்தை பார்த்துக் பலன் கூறினால் சரியாக வராது. மாறாக பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்தே அந்த குடும்பத்தின் நலனைப் பற்றி கணிக்க வேண்டும்.
ஒரு சில வீடுகளில் தந்தைக்கு மிகப்பெரிய யோக தசை நடக்கும், ஆனால் அவர் மகனுக்கு மிக மோசமான தசை நடந்து கொண்டிருக்கும். தந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தால், அவருக்கு வீடு வாங்கும் யோகம் இருக்கும். ஆனால் மகனின் ஜாதக அமைப்பு காரணமாக அவர் இருக்கும் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பார்.
எனவே, ஒரு குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வரை அந்தக் குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு வலிமை அதிகம். வாரிசுகள் வந்து விட்டால் அவர்களின் ஜாதகம்தான் குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுகளை முடிவு செய்யும். குறிப்பாக தலைப்பிள்ளையின் ஜாதகத்திற்கு வலிமை அதிகம்.

கோலம் போடுவது ஏன்?

கோலம் போடுவது ஏன்? 
 தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி எல்லாம் வருகிறார்கள் என்று ஐதீகம் இருக்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாகவும் ஒரு மங்களச் சின்னமாக தமிழர்கள் வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு இருக்கிறது. அதிலும் அந்த மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது. தானம், தர்மத்தையும் குறிக்கிறது. வரவேற்பு சரியில்லை அப்படி என்று சொல்வார்கள் இல்லையா, அது நன்றாக இருப்பதுதான் இந்த கோலமிடுதல்.

பாதரச லிங்கத்தை வீட்டில் வழிபடலாமா?

பாதரச லிங்கத்தை வீட்டில் வழிபடலாமா? ?
ரசவாதம் போன்றவற்றை சித்தர்கள் பிரமாண்டமாக செய்திருக்கிறார்கள். இதற்கு ரச மணி, ககன மணி என்ற பெயர்களும் உண்டு. வேறு மூலக்கூறுகளில் அதை கட்டுவார்கள். அதாவது கட்டு கட்டுவது என்று சொல்வார்கள். சில ககன மணி, ரச மணியிலேயே வீரமணி என்று வழிவகைகளெல்லாம் உண்டு. பூமியில் புதைத்து வைத்திருந்து பிறகு அதனைத் தோண்டி எடுத்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வருவதும் உண்டு. பாதரசத்திற்கென்று ஒரு தனி சக்தி உண்டு. பாதரசத்தோடு எதைச் சேர்த்தாலும் அதுவாக ஆகிவிடும். புதனும் அதுதான். புதன்தான் பாதரசத்திற்கு உரிய கிரகம். கிரக நிலைகொண்ட பாதரசத்தை வைத்துதான் லிங்கத்தை செய்கிறார்கள். இந்த லிங்கங்களில் முத்து போன்ற சிலவற்றையும் சேர்ப்பார்கள். எதற்காக அதைச் சேர்த்து உருவாக்குகிறோமோ, அந்தப் பணியை அது செய்து கொண்டிருக்கும். ஆயுள் விருத்திக்காக, கல்விக்காக, திருமண தோஷ நிவர்த்திக்காக இதுமாதிரியெல்லாம் செயல்படும்.
ஏவல் வேலையை வேகமாகச் செய்யக் கூடிய சக்தி பாதரசத்திற்கு உண்டு. ஏவல், பிரயோகம் என்று சொல்வோமே இதையெல்லாம் பாதரசம் துல்லியமாகச் செய்யும். இந்தப் பணியைச் செய்வதற்கு இந்தக் கட்டு, இதற்கான மூல மந்திரங்கள். இதுபோன்று சில முறைகளும் உண்டு. இதை சித்தர் புருஷர்கள் அதிகமாக செய்து கொண்டிருந்தார்கள். வனத்தில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வது, ஜெபம், தவம் செய்வது. அப்பொழுது காடு, மலையில் இருந்து பாதரசத்தை சேகரித்து அதில் லிங்கம் செய்து பிரதிஷ்டை செய்து வந்திருக்கிறார்கள்.
பாதரச லிங்கத்தை அபிஷேகம் செய்துவிட்டு அதை அருந்துவது என்பது உடலிற்கும், நரம்புகளுக்கும் நல்லது. இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. தற்பொழுது முறையாக அந்தக் கட்டோடு அவர்கள் செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அது முறையாக பதப்படுத்தப்பட்ட பாதரசத்தில் செய்யப்பட்ட லிங்கமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால்தான் அது நமக்கு உகந்த சக்தியை அது கொடுக்கும். மேலும், காம இச்சைகளில் குறைபாடு இருந்தாலும் அதை அது நீக்கும். மலட்டுத் தன்மையை நீக்கும் என்று சொல்லலாம். குறிப்பிட்ட தூரம் வரை அதற்கான ஆகர்ஷன சக்தியும் உண்டு.
சில சாதாரண குடும்பங்களில்கழுத்தில் ருத்திராட்சத்தை போட்டிருப்பார்கள். ஐந்து முகம், ஆறு முகம் கொண்ட ருத்திராட்சத்தை கயிற்றில் கோர்த்துக் கண்டம் இருக்கும் இடத்தில் இருக்கும்படி விடுவார்கள். அதற்கென்று சில மருத்துவ குணங்கள் உண்டு. இரத்த சுத்தி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்றெல்லாம் உண்டு. இதேபோல, பாதரசத்தில் இருக்கும் ரச மணி, ரச லிங்கங்கள் இதெற்கெல்லாம் தனி குணங்கள் உண்டு.
சிலரைப் பார்த்தால், அவர்களுடைய குழந்தைகளுக்கு சின்னதாக பாதரச மணியை கட்டி விட்டிருப்பார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். இதுபோன்று பதப்படுத்தப்பட்டு செய்யப்பட்ட லிங்கங்களை வணங்கினால் முழுமையான பலன் உண்டு.

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?


 குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா? குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம்.
குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.
எவ்வளவோ பேர் எங்கெங்கோ போய் வருகிறார்கள். காசிக்கு ஒருவர் போய்விட்டு வந்தார். அவருடைய கனவில் வந்து, ஏண்டா நான் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். மூன்று வருடமா என்னை வந்துப் பார்க்காமல் எவ்வளவோ செலவு செய்து கொண்டு அங்கெல்லாம் போய்விட்டு வருகிறாயா? என்னை நீ பார்க்காமல் போன பிறகு உனக்கு காசி போனால் பலன் கிடைக்குமா? என்று கனவில் வந்து கேட்டிருக்கிறது. பிறகு ஓடிப் போய் வணங்கினார்.
வசதி வாய்ப்பு இழந்தவர்களும் பெரிய கோபுரங்கள் உள்ள கோயில் தெய்வங்களை குலதெய்வம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அப்படியில்லை, முன்னோர்கள் கூடி கூடி வழிபட்ட அந்த இடத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. இன்றைக்கு நாம் சொல்லவில்லையா? காந்தி நின்ற இடம், வ.உ.சி. செக்கிழுத்த இடம் என்று எவ்வளவு பெருமையாகச் சொல்கிறோம். அதுபோல நம் முன்னோர்களும் நமக்குத் தலைவர்கள் மாதிரிதானே. அவர்கள் நின்று வழிபட்ட இடம். அவர்கள் பொங்கல் வைத்தது. அதெல்லாம் நாம் மதிக்க வேண்டாமா? அதனால் குலதெய்வத்திற்கு சக்தி உண்டு. குலதெய்வம் என்பது என்ன? தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்கூடியதுதான் குலதெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் வேண்டித்தான் கூப்பிட வேண்டும். இவர்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் நம்மிடம் வந்து நமக்கு நல்லது செய்யக்கூடிய தெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.

சிறப்பு வாய்ந்த வன்னி மரம்!

சிறப்பு வாய்ந்த வன்னி மரம்!

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.
வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்சட்டியில்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சட்டி என்றால் மண் பானை சட்டி என்று நினைத்துக் கொள்கிறோம். அது அப்படி கிடையாது. சஷ்டி திதி. அந்த சஷ்டி திதியைத்தான் தூயத் தமிழில் சட்டி திதி என்று சொல்வார்கள். இன்னமும் ஈழத் தமிழர்கள் சட்டி திதி என்றுதான் சொல்வார்கள். இங்குதான் சஷ்டி திதி என்று சொல்கிறோம்.
இந்த சட்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்றுமுன்னோர்கள்சொல்லிவைத்தார்கள்.

அத்தி மரத்தின் சிறப்பு! .

அத்தி மரத்தின்  சிறப்பு! .
ஜோதிடப்படி  அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம். இந்த அத்தி
மரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் இதுபோன்ற பழமொழி உண்டு. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது. கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும். இதுபோன்ற அமைப்புகள் உண்டு.
அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு. அதன்பிறகு, அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.

ஆலமரத்தின் முக்கியத்துவம்!

ஆலமரத்தின் முக்கியத்துவம்!

ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று சொல்வார்களே. பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட பெரிய மரங்களைத்தான் சொல்வார்கள். அதில் தழைப்பிற்கு உரிய மரம் ஆலமரம். தழைத்து ஓங்கி கிளை கோத்திரமாக வாழ்வது என்பது சொல்வார்களே.
அதன்பிறகு, ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலடியாரும், திருக்குறளும் படித்தால் வாழ்க்கை சிறக்கும். ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் - கருவேல மரம் என்று தனியாக இருக்கிறது. அந்த கருவேல மரப்பட்டையில் அவ்வளவு விசேஷம் இருக்கிறது. அதனால் கருவேல மரக்குச்சியிலும், ஆலமரக்குச்சியிலும் பல் தேய்த்தால் ஈறுகள் வலுவடையும். பல் தேய்க்கும் போது கெட்ட பித்த நீர்களெல்லாம் உமிழ் நீரோடு கலந்து வெளியே வந்துவிடும். அதனால்தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொன்னது.
அதுமட்டுமல்ல, மிகவும் புனிதமானது இந்த மரம். இந்துக்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், ஜைணர்கள் இந்த மூன்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் புனிதமான மரம். இதில் பல மகான்கள், சித்தர்களெல்லாம் அமர்ந்து தவநிலை அடைந்திருக்கிறார்கள். இந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தால் குளிர்சாதனத்தைவிட நன்றாக இருக்கும். அக்னி நட்சத்திரக் காலங்களில் கூட குளுகுளுவென்று இருக்கும். ஏனென்றால் அதனுடைய இலை அமைப்பில் அதிகமான குளோரோ·பில் அமைந்திருக்கிறது. பச்சையம் என்கிறோமே அது அதிகம். மேலும், சின்னதாக மெழுகுத் தன்மை அந்த இலையில் இருக்கும். அதனால் அது வெப்பம் அதிகமாகத் தாக்காத அளவிற்கு கட்டிக் காக்கிறது.
சரியாகப் படிக்காத பிள்ளைகளை ஆலமரத்தின் கீழ் உட்காரவைத்து படிக்க வைத்துப் பாருங்கள், பிறகு சொல்லுங்கள். மக்கு என்று சொல்பவர்களைக் கூட, ஆலமரத்தின் கீழ் போய் உட்கார்ந்தாலே ஒரு சாத்வீகமான எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும். எமோஷக், டென்ஷன், இரத்த அழுத்தம் போன்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அவர்களுக்கே தெரியாமல் தலை முடியிலிருந்து கால் பாதம் வரை ஒரு மசாஜ் நடந்து கொண்டிருக்கும். அது அவர்களுக்குத் தெரியாது.
மசாஜுக்குப் போனால் எப்படி உட்காருகிறோமே, அதே மாதிரி இங்கே சும்மா உட்கார வேண்டும். அப்படி உட்கார்ந்தால் தானாக மகிழ்ச்சி மலரும். அப்படியே படிப்படியாக டென்ஷன், எமோஷனெல்லாம் குறைவதை உணரலாம். மன அமைதியைக் கொடுக்கும். நினைவாற்றலைத் தரக்கூடியது. அந்த மரத்தின் காற்றை சுவாசித்தாலே நினைவாற்றல் பெருகும். அதனால்தான் மக்குப் பிள்ளைகளைக் கூட அங்கு உட்கார வைத்துப் பாருங்கள் அவன் நன்றாகப் படிப்பான். ஒருவிதமான பதற்றம் விலக ஆரம்பித்தாலே மூளை அனைத்தையும் பதியவைக்கத் தொடங்கும்.
இதுமட்டுமல்லாமல், மூலம் அந்தக் காற்றால் குணமாகிறது. ஏனென்றால், அந்தக் காற்றில் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய வெப்பத்தைக் குறைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. வெட்ட வெட்ட முத்தினால் குட்ட என்று சொல்வார்கள். உடம்பில் அதிகச் சூடு ஏற்பட்டால் அதனை வெட்டச் சூடு என்பார்கள். இந்த வெட்ட அதிகமானால் குட்ட. அதாவது, உஷ்ணம் அதிகமானால் குஷ்டம் வந்துவிடும். இந்த வெட்ட குட்ட இரண்டையுமே தணிக்கக் கூடிய நிழல், காற்று அதெல்லாம் உண்டு. அதற்கடுத்ததாக, என்னுடைய தாத்தா ஒரு தண்டம் வைத்திருப்பார். நெடுவழிப் பயணத்தின் போதெல்லாம் அதை கையில் எடுத்துக்கொள்வார். அவரிடம் 4 நாட்களாக ஜுரம் என்று சொல்வார்கள், அதில் 4 தட்டு தட்டுவார். இதேபோல, குழந்தை சரியாகத் தூங்கவேயில்லையென்றால் அதற்கு 4 தட்டு தட்டுவார். வேப்பிலையால் மந்திரித்துவிட்டு அந்த தண்டத்தால் 4 தட்டு தட்டுவார். அதன்பிறகு, காத்து கருப்பு என்று பயப்படுபவர்களுக்கு 4 தட்டு தட்டுவார்.ஏன் தாத்தா வரபவர்களையெல்லாம் அடித்துக் கொண்டிருக்கி‌றீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லப்பா, பழமையான ஆல மரத்தினுடைய கம்பு இது. அதில்தான் இதை செய்திருக்கிறேன். ஆலமரத்திற்கென்று சில குணங்கள் உண்டு. அதீத சக்திகள் உண்டு. அதனால் இதில் தட்டினால் சில மாற்றங்கள் உண்டாகும். தெய்வ நம்பிக்கையுடன் அதைச் செய்யும் போது குணப்படுத்தும் தன்மையை அது அதிகரிக்கும். இன்னமும் அந்த தண்டம் என்னுடைய அப்பாவிடம் இருக்கிறது. அதைத் தொடும்போதே ஒருவிதமான உணர்வு ஏற்படும். அதுபோன்ற குணங்கள் அதற்கு உண்டு. காது, மூக்குப் பிரச்சனைகளுக்கு ஆலம்பாலை பக்குபவப்படுத்தி பயன்படுத்தினால் அது நீங்கும். அடிப்பட்டு வீங்கிய இடத்தில் இந்தப் பாலைத் தடவினால் வீக்கம் வடிந்துவிடும். அதற்கடுத்து, இதன் இலையில் விந்தணுக்களை அதிகரிக்கக் கூடிய சக்தி இருக்கிறது. விந்தணுக்களின் உயிர்த்தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் உண்டு. ஆலமரப்பட்டையை உலர்த்தி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடம்பு பளபளப்பாக ஆகும். இதையெல்லாம் சித்த மருத்துவர்கள் தருவார்கள். ஆலம்பழத்திற்கு சிறுநீர் பாதை கிருமி பிரச்சனைகள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய அமைப்புகள் உண்டு. இதுமாதிரி தொட்டதனைத்தும் நமக்கு பயன்தரக்கூடியது. அப்படிப்பட்ட மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தால் நமக்கு எவ்வளவு நன்றாக இருக்கும்.

Sunday, February 27, 2011

மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!


மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!
 மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: "அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.
அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.
ஒரு ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடிய செயல்தான் மரம் நடுதல். அதில் பயனுள்ள மரத்தை நடும்போது அவர்களுடைய புண்ணியம் இன்னமும் அதிகரிக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்று படிக்கிறோமே, இன்றைக்கும் அதையேதானே உலக நாடுகள் மரம் நடுவோம் என்று வலியுறுத்தி வருகின்றன.

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?






செய்திகள்
விளையாட்டு
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
இதர வாசிப்பு
சேவைக‌ள்
புகை‌ப்பட‌ங்க‌ள்

உலகச் செய்திகள்நாடும் நடப்பும்வ‌ணிக‌ம் உலக‌க்கோ‌ப்பை 2011கட்டுரைகள்ஆ‌ட்ட ‌நிலவர‌ம் சினிமாசுற்றுலாசிரி அருளுரைபுனிதப் பயணம்ஜோ‌திட‌ம் ‌சி‌த்‌திர‌க் கதைக‌ள்காதல் தேசம்மரு‌த்துவ‌ம் ஜாதக‌ம்செ‌ய்‌திக‌ள்‌விள‌ம்பர‌ங்க‌ள் செ‌ய்‌திகள்‌சிற‌ப்புக‌ள்‌சி‌னிமா



செய்திகள்உலகச் செய்திகள்நாடும் நடப்பும்வ‌ணிக‌ம்ச‌ந்தைசு‌ற்று‌ச்சூழ‌ல்நே‌ர்முக‌ம்தமிழகச் செய்திகள்தேசியச் செய்திகள் விளையாட்டுஉலக‌க்கோ‌ப்பை 2011கட்டுரைகள்ஆ‌ட்ட ‌நிலவர‌ம்விளையாட்டு20-20கிரிக்கெட்ஐ‌பிஎ‌ல் பொழுதுபோக்குசினிமாசுற்றுலாசிரிசின்னத்திரை புகை‌ப்பட‌ங்க‌ள்செ‌ய்‌திகள்‌சிற‌ப்புக‌ள்‌சி‌னிமா‌விளையா‌ட்டுகோ‌யி‌ல்க‌ள்கவ‌ர்‌ச்‌சி‌ப் பட‌‌‌ம்சு‌ற்றுலாகரு‌த்து‌ப்பட‌ம்‌ஆ‌ன்‌மிக‌ம் ஆன்மிகம்அருளுரைபுனிதப் பயணம்ஜோ‌திட‌ம்நம்பினால் நம்புங்கள் இதர வாசிப்பு‌சி‌த்‌திர‌க் கதைக‌ள்காதல் தேசம்மரு‌த்துவ‌ம்யோகாஇன்றைய மங்கைவெப்துனியா சிறப்புஎன்.ஆர்.ஐவெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008இலக்கியம்அறுசுவைகுழந்தைகள் உலகம் சேவைக‌ள்ஜாதக‌ம்செ‌ய்‌திக‌ள்‌விள‌ம்பர‌ங்க‌ள்‌‌மி‌ன்ன‌ஞ்ச‌ல்நா‌ட்கா‌ட்டிக‌ணி‌னி ‌விளையா‌ட்டுதேடவு‌ம்எனது வெ‌ப்து‌னியாகரு‌வி‌ப்ப‌ட்டி‌வீடு மனை வா‌ங்கந‌ட்புவா‌ழ்‌த்துக‌ள்தே‌ர்வு முடிவுக‌ள்நாட‌ல்‌வினாடி-‌வினா





ரா‌சி பல‌ன்
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
எ‌ண் ஜோ‌திட‌ம்
டார‌ட்
க‌ட்டுரைக‌ள்
ப‌ரிகார‌ங்க‌ள்
ஆலோசனை
பூ‌ர்‌வீக ஞான‌ம்
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
வா‌ஸ்து
‌பிரபல‌ங்க‌ள்

முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » பூ‌ர்‌வீக ஞான‌ம் » ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.
ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.
இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.
சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?

புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பிரகஸ்பதி, குரு மாறுகிறாரே அதனுடைய அம்சம் பசு. பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக. காரணம், பசு தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நல்ல பசும்பால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு சமமாக உள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு சிறந்த உணவாகவும் அது அமைகிறது.
அதனால்தான் பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.
தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் பசுஞ்சாணத்தை தெளித்து, மெழுகி செய்வார்கள். இன்னும் சிலர் பசுஞ்சாணத்தை உருட்டி அதன் மீது விளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும் பசுஞ்சாணத்தால் பிடித்து அதன் மீது அருகம்புல் செருகி மந்திரங்களை சொல்லும் போது உடனடியாக நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும்.
இதுபோல பசுவினுடைய அத்தனையும் நமக்கு எல்லா வகையிலும், எல்லா விதத்திலும் பயன்படுகிறது. பசுவிற்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எல்லா தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி உண்டு. இந்த மாதிரியான தெய்வ அமைப்பு பசுவிற்கு மட்டும் அமைந்துள்ளது. தற்பொழுது இவர்கள் ஜெர்சி பசுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. நம்ம நாட்டுப் பசு, அதற்கும் முன்பாக பார்த்தால் காராம்பசு.
என்னுடைய தாத்தா காலத்திலெல்லாம் காராம் பசுக்கள் நிறைய இருந்தது. காராம்பசுவினுடைய காம்புகளைப் பார்த்தால் சிறியதாக இருக்கும். ஆனால் கறக்க கறக்க பால் வரும். அந்தப் பால் பணங்கற்கண்டு பால் போன்று இருக்கும். அப்படியே குடிக்கலாம். அதற்கடுத்து, அதற்கு சில தெய்வீக அமைப்பெல்லாம் உண்டு.
அதாவது, புல் பூண்டுகளைக் கூட தேர்ந்தெடுத்துதான் மேயும். நாட்டுப் பசுவிற்கும், காராம்பசுவிற்குமே அதிக வித்தியாசம் உண்டு. நாட்டுப் பசு எல்லா புற்களையுமே மேயும், ஆனால் காராம் பசு சில வகையானப் புற்கள், சில வகையான இலைகள் மட்டும்தான் சாப்பிடும். மிகவும் சென்சிடிவானது. கோபத்துடன் தொட்டால் கூட சாப்பிடாது.
இந்த மாதிரியான தெய்வ லோக, தெய்வத் தன்மையுடைய பசுவெல்லாம் .

பசு எ‌ன்பது ‌விரு‌த்‌தி‌யி‌ன் ‌அ‌ம்ச‌ம்!

புதுமனை புகுவிழாவிற்கு பசுவை கொண்டு வருவது பற்றி ஒரு வாசக‌ர் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், அயல்நாடுகளில் எத்தனையோ மாடிக் கட்டடம் கட்டுகிறார்கள். அவர்களெல்லாம் பசு மாட்டை ஒன்றும் கூப்பிட்டுச் செல்வதில்லை. ஆனால் அந்தக் கட்டடங்கள் உறுதியாக இருக்கின்றனவே என்று கேட்டிருக்கிறார்.
கட்டடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பசுவை கொண்டு செல்வது கிடையாது. விருத்தி அம்சத்திற்காகத்தான் பசுவை நாம் கொண்டு செல்கிறோம். இந்தக் கட்டடம் 200 வருடம் இருந்தது, 300 வருடம் இருந்தது என்பது முக்கியம் கிடையாது. இப்பவும், சில இடங்களுக்கு, சில வீடுகளுக்கு இந்த வீட்டிற்கு வந்தோம், 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. தற்பொழுது குழந்தை பிறந்திருக்கிறது. அது அந்த வீட்டின் ராசி என்றெல்லாம் சொல்கிறார்கள். சிலரெல்லாம் வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்து குடியேறுகிறார்கள். ஆனால் அங்கு சென்ற பிறகு ஒவ்வொன்றாக இழக்கிறார்கள். சிலர் ஒவ்வொன்றாய் பெறுகிறார்கள். பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும். நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் நோயாளியாக இருப்பார்கள். பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து செளபாக்கியமும் பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் பசுவை கொண்டு செல்கிறோம்.

இந்திய மண் என்பது பரிகார பூமி. இன்றைக்கும் சொல்கிறார்கள், தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? சீனாவிற்குப் போ, படிப்பு சம்பந்தப்பட்டதற்கு அமெரிக்காவிற்குப் போ, ஆன்மீகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? இந்தியா போ என்று ஆன்மீகத்திற்கு இனம்காட்டக் கூடிய நாடாகத்தான் இந்த நாடு இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாட்டில் பசுவினுடைய பங்களிப்பு என்பது மிக அதிகம்.
எனக்குத் தெரிந்த வேற்று மத சாமியார் ஒருவர், எங்களுடைய வழக்கப்படி பசுவை வைத்தெல்லாம் செய்ய முடியாது. ஆனால் எனக்குப் பசு மீது பெரிய நம்பிக்கை உண்டு. அதை நான் யதார்த்தமாகவும் பார்த்திருக்கிறேன். ஒரு வேலையாகப் கிளம்பும் போது எதிராக பசு வந்தால் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அன்றைக்கு அது முடிந்துவிடும். ஆனால் எங்களுடைய மதத்தவர்களிடம் சொன்னால், என்னை மதத்தை விட்டே தள்ளி வைத்துவிடுவார்கள். அதனால், இப்பொழுது கிரகப் பிரவேசம் செய்யலாம் என்று இருக்கிறேன். பசுவை வரவழைத்தால் என்னை ஒதுக்கியே வைத்துவிடுவார்கள். வேறு எதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். பசு மடத்தில் பசு 10, 15 வருடமாக படுத்திருந்த ஒரு கல், பெரிய பாறையை எப்படியாவது கேட்டு வாங்கித் தருகிறேன். அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் ஒருவரிடத்தில் கேட்டு வாங்கி கொண்டு சென்று அதை வைத்துக்கொண்டு சிலவற்றை செய்து கொண்டிருக்கிறார். இப்படி பல சொல்ல முடியாத விஷயங்களெல்லாம் கூட, நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட சிலவற்றைப் பார்த்துவிட்டு இதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.
அதனால், பசு என்பது விருத்தி அம்சத்திற்கான அடையாளம். முழுமை, ஒரு பசு ஒரு வீட்டில் காலடி வைக்கிறதென்றால் ஒரு முழுமை பெறுகிறது. அங்கு ஒரு ஜீவ சக்தி உருவாகிறது. தானாக பசு வருவதும். வந்த இடத்தில் பசு தானாக கோமியம் இடுவது என்பதும், சாணமிடுவது என்பதும் பெரிய விஷயம். ஆனால், தற்பொழுது அதை வரவழைக்கிறோம். விருப்போ, வெறுப்போ ஏதாவது ஒரு வகையில் பசு வந்துவிட்டாவது செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கிரகப் பிரவேசத்தில் அதுபோல செய்கிறோம். உண்டு. அதனால் பசு வீட்டிற்குள் வந்துவிட்டுச் செல்வது என்பது நல்லது.

சாமி சிலைகள், விக்ரகங்களுக்கு, லிங்கங்களுக்கு பல்வேறாக அபிஷேகங்கள் செய்வதற்கான காரணம் என்ன?

சாமி சிலைகள், விக்ரகங்களுக்கு, லிங்கங்களுக்கு பல்வேறாக அபிஷேகங்கள் செய்வதற்கான காரணம் என்ன?

 சிற்பங்களை காலமெல்லாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்களில் ஆண், பெண், அலி என்று இருப்பது போலவே கற்களிலும் ஆண் கல், பெண் கல், அலி கல் என்றெல்லாம் உண்டு. அலி கல் அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது. பதுமை செய்வது போன்ற ஒரு சிலவற்றிற்கு மட்டுமே இந்த அலி கல்லைப் பயன்படுத்துவார்கள்.
ஆண் கல்தான் முக்கியமாக எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கற்களுக்கு செதுக்கி செதுக்கி உயிரூட்டம் கொடுக்கிறார்கள். இந்தக் கற்கள் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு வஸ்து. இதற்கு இயற்கையோடு இயற்கை, கல் என்பதும் இயற்கை, தர்பை என்பதும் இயற்கை. இந்த தர்பையால்தான் கும்பாபிஷேகத்தின் போது இறைவனுடைய சிற்பத்தைத் தீண்டுகிறோம். அதன்மூலம் அதற்கு ஒரு உயிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறோம்.
இதேபோல அபிஷேகங்கள் செய்யும் போதும் இறைவனுடைய அழைப்பு கூடுகிறது. பால் அபிஷேயம் என்றால் ஒரு அழைப்பு, தேன் அபிஷேகம் என்றால் ஒன்று, பஞ்சாமிர்தம் என்றால் ஒரு அழைப்பு என்று உண்டு.
பொதுவாக இறைவனை எவ்வாறு பார்க்கிறோம். சில நேரம் நண்பனாகப் பார்க்கிறோம், சில நேரத்தில் தாய், தந்தையாக நேசிக்கிறோம். அதனால்தான் நமக்குக் கிடைப்பதை இறைவனுக்கு கொடுத்துவிட்டு நாமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் எந்தெந்த பருவத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை வைத்து இயற்கையோடு இயற்கையாக வழிபடுகிறோம்.
ஆகையால், அபிஷேகங்களுக்கு தனி சக்தி உண்டு. அதனால் இறை ஆற்றல் கூடும்.

எதிர்காலத்தை அறிய சிறந்த வழி எது? ஜாதகமா? கை ரேகையா?

எதிர்காலத்தை அறிய சிறந்த வழி எது? ஜாதகமா? கை ரேகையா? 
 ஒரு சிலர் சாலையோரங்களில் இருக்கக் கூடிய ரேகை பார்ப்பவரிடம் சென்று உட்கார்ந்துவிடுகிறார்கள். மற்றொரு பக்கம் உங்களைப் போன்ற ஜோதிடர்கள் இருக்கிறார்கள். இதில் எது சிறந்தது ஜாதகமா? கை ரேகையா? ஒரு தொழிலோ, திருமணமோ, கல்வியோ இதுபோன்றவற்றிற்கு கட்டாயம் எந்த இடத்திற்கு வரவேண்டும்?
சரியான பிறந்த தேதி, நேரம் இதெல்லாம் இருந்து கணிக்கப்பட்டதாக இருந்தால் ஜாதகத்தை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும். ரேகைகளை எடுத்துக்கொண்டால், சுக்ரன் மேடு, புதன் மேடு இவற்றையெல்லாம் பார்த்து முடிவெடுப்போம். கை ரேகையைப் பொறுத்தவரையில் அவர்கள் எந்தவிதமான வேலையைச் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு அதிகாரியாகவே இருந்தாலும் அவர் ஜிம்முக்கு சென்றால் அவருடைய ரேகைகள் கூட அழிகின்றன. அல்லது ரேகை பின்னமாகிறது. அதனுடைய அமைப்புகள் மாறுபடுகிறது. ரேகையைப் பொறுத்தவரை அது நாடி ஜோதிடம் மாதிரி. அதாவது இரண்டு வருடத்தில் அது வந்துவிடும் என்று சொல்லலாம். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை தசாபுத்தி, அந்தரங் இதையெல்லாம் கணக்கிடுகிறோம்.
அந்தரங் என்றால்?
அந்தரங் என்றால் முக்தியிலேயே அது ஒரு பகுதி. தசா, புக்தி அதற்கடுத்த பகுதி அந்தரங். அதேபோல, விநாடியையே ஜோதிடத்தில் நாம் பிரிக்கிறோம். பிறகு பிறப்புக் கால கிரக அமைப்புகள், தற்கால கிரக அமைப்புகள் இதையெல்லாம் பார்க்கிறோம். குடும்பத்தில் இருக்கக்கூடிய அங்கத்தினருடைய ராசிகளை வைத்து முடிவெடுக்கிறோம். இதையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் முதலீடு செய்யலாம். வியாபாரத்தில் இறங்கலாம். ஏனென்றால், பல கோடி கணக்கில் பணத்தை போட்டு அவர்கள் இறங்கும் போது, நாளைக்கு அதில் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் ஒட்டுமொத்த குடும்பமே ரோட்டில் நிற்கக்கூடிய சூழல் எல்லாம் இருக்கிறது. அதனால் அவர்கள் மிகவும் பயந்து எல்லாவற்றையும் கேட்டுச் செய்கிறார்கள். இதுபோன்ற சவாலான விஷயங்களுக்கெல்லாம் ஜோதிடத்தைதான் அடிப்படையாக வைத்து முடிவெடுக்க வேண்டும்.
ரேகையில் என்னவென்றால், நல்ல சுக்ர திசை நடக்கிற ஒருவர் என்றால், அவருடைய கையில் சுக்ரன் மேடு உயரமாக இருக்கும். சுக்ரன் மேடு என்பது கட்டை விரலிற்கு கீழிருக்கும் பகுதி. சுக்ரன் நல்ல வலுவாக இருக்கிறார் என்றால், மற்ற மேடுகளைக் காட்டிலும் சுக்ரன் மேடு உயர்வாக இருக்கும். மேலும் சிறப்பான சுக்ர திசை என்றால் ரோஸ் நிறத்தில் அந்த மேடு மாறும். இதுமட்டுமல்லாமல், நல்ல குறியீடுகள் கவை, அம்பு, திரிசூலம் இதுபோன்ற ரேகைகள் உருவாகும்.
ஜாதகத்தில் மோசமாக சுக்ர திசை இருக்கிறதென்றால் சுக்ர மேட்டில் தீவு, குறுக்கு ரேகைகள், கரும்புள்ளி இதெல்லாம் உருவாகும். குறுக்கு ரேகை என்றால் சிலருக்கு ஒருவித பின்னல் போலவே இருக்கும். இதுபோன்றெல்லாம் வரக்கூடாது. இதுபோல சில விஷங்களுக்கு ரேகைகளையும் ஒப்பிடுகிறோம். ஏனென்றால், ஜாதகத்தில் ராசிக் கட்டத்தைப் பார்த்துவிட்டு நவாம்ச கட்டத்தையும் எடுக்கிறோம். இது எதற்கு என்றால் ரேகைகளுடைய அமைப்பு எப்படி இருக்கிறது என்பதற்காகப் பார்க்கிறோம்.

உடற்கூறுகளை எடுத்துக்கொண்டால் கை ரேகைக்கு சமமாகக் கூறமுடியாது. உடற்கூறுகளில் நோயின் தன்மை, தாக்கம், குணமாகும் காலம் இதெல்லாம் ரேகையில் துல்லியமாக இருக்கலாம். அது ஒரு வகையில் சிறப்பு. இது ஒரு வகையில் சிறப்பு. ஆனால் இது இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைந்தது.
பொதுவாகவே, குரு திசை நடக்கிறதென்றால் அவர்களுக்கு இயல்பாகவே சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். அந்த திசைக்கு என்ன உரியதோ அதை மேலோங்கச் செய்யும். அதேபோல கை ரேகையில் பார்த்தால் குரு மேடு உயர்ந்திருக்கும். குரு மேடு என்பது ஆள் காட்டி விரலிற்குக் கீழே இருப்பது. பொதுவாகவே குரு மேடு உயர்ந்து நின்றிருந்தாலே ஆசிரியராவார்கள். ஆலோசனை வழங்குதல், உளவியல் நிபுணராகுதல். பிறகு கவுன்சிலிங், சோர்ந்து வருபவர்களை, அதாவது மன உளைச்சலோடு வருபவர்களை, மனம் நலம் குன்றி வருபவர்களை வழி நடத்திச் செல்லுதல். குரு மேடு உயர்ந்திருப்பவர்கள் நிறைய பேரை HOD ஆக எல்லாம் பார்க்கிறோம்.
அடுத்து ஹைக்கூ என்று சொன்னால் புதன்தான். அறிவு வேறு நுண்ணறிவு வேறு. பகுத்தறிவு வேறு பட்டறிவு வேறு. சுண்டு விரலிற்குக் கீழ் இருப்பதுதான் புதன் மேடு. அதில் இரண்டு நேர் கோடுகள் போல் இருந்தால் ஒப்பிட்டுப் பார்த்துப் பேசுதல், அதாவது ஒப்பிடுதல். புதன் மேட்டில் இரண்டு நேர் கோடு‌க‌ள் இருந்தால், பிரச்சனைகளை அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் ஒப்பிட்டுப் பேசுதல். மேலும் புதன்தான் பிரசண்டேஷன். அதாவது நிறைய பேருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். அதை எடுத்துச் சொல்லும் விதம், வித்தை தெரியாது. அதை உருவாக்குவதுதான் புதன். பொதுவாக ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்து கூடவே சுக்ரனோ, சந்திரனோ சேர்ந்து இருந்தால் திரைத் துறையில் இயக்குனராக இருந்து பல கோடி மக்கள் பார்த்து பயனும்படி நல்ல விஷயங்களை காட்டக்கூடிய நல்ல இயக்குனர்களை பார்க்கிறோம்.
ஆகவே, சில விஷயத்தில் ஜோதிடத்தில்தான் துல்லியமான சில கணக்குகள் தெரியும். சில விஷயங்களுக்கு உடற்கூறுகள் போன்றவற்றிற்கு ரேகை சிறந்ததாக இருக்கும்.

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்?

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்?

பீடை என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. நமது உடலை நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம்.
தட்சணாயணம் அந்த மாதத்துடன் முடிகிறது. அதாவது சூரியனுடைய தென் பகுதி இயக்கம் அந்த மாதத்துடன் முடிகிறது. அந்த மாதத்தில் உடலுறவு என்றெல்லாம் இல்லாமல், அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதா‌ல், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் அந்த மாதத்தை அப்படி ஒதுக்கி வைத்தார்கள்.
லெளகீகங்களுக்காக எல்லாம் இல்லாமல், ஆன்மிக நிகழ்வுகளுக்காக என்று ஒதுக்கி வைத்தார்கள். தட்சணாயண மாதத்தில் அது முடியக்கூடிய மாதம். சூரியனுடைய தெற்கு இயக்கம் முடியக்கூடியது. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது.
அதனா‌ல் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.

பெண்களுக்கு ‌சிற‌ந்தது ஜனன ஜாதகமா அல்லது ருதுவான ஜாதகமா?


பெண்களுக்கு ‌சிற‌ந்தது ஜனன ஜாதகமா அல்லது ருதுவான ஜாதகமா?
பொதுவாக பெண்களுக்குப் பார்க்கும்போது பிறந்த ஜாதகமே சிறந்தது. ருதுவான ஜாதகம் என்பது பாதியில் துவங்கி பாதியில் நிற்கும் ஒரு விஷயம்.
பிறந்த ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசாபுத்தியில் தான் ஒரு பெண் ருதுவாகிறாள். அதாவது பிறந்த ஜாதகப்படி குரு திசையில் புதன் புத்தி நடக்கிறது என்றால் அதே மாதிரி ஏதோ ஒரு திசையில் புதன் புத்தி நடக்கும்போதுதான் ருதுவாகிறாள்.
அதாவது பிறந்த ஜாதகத்தின் அடிப்படையிலேயே ருதுவாகும் காலம் அல்லது உடலியல் மாற்றம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிறந்த ஜாதகத்தை வைத்து எப்போது அவர்கள் ருதுவடைவார்கள் என்பதை கணிக்கலாம்.
சில மாதவிலக்குப் பிரச்சினை உள்ள பெண்களைப் பார்க்கலாம். சிலருக்கு அதிக ரத்தப்போக்கு, ஒரு நாளில் நிற்பதையும் பிறந்த ஜாதகத்தில் பார்த்துவிடலாம். மாதவிலக்கு நிற்பதையும் ஜாதகத்தில் கணித்துவிடலாம்.
செவ்வாய் ரத்தத்திற்குரிய கிரகம். செவ்வாய் பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, பகை கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ பகை நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தாலோ மாதவிலக்கு கேள்விக்குரியாகும்.பூப்பெய்தாமலே போகும்படியான ஜாதகங்களும் உண்டு. அதற்கு அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி, செவ்வாய், உடலாதிபதி சந்திரன், சந்திரன் முன்னும் பின்னும் பாவ கிரகங்களால் சூழப்பட்டால் அதுதான் காரணம்.
மாதவிலக்கு ஒழுங்கின்மை காரணமாகத்தான் முரட்டுத்தனமான குழந்தைகள் பிறக்கின்றன. மாதவிலக்கு என்பது சீராக அமைய வேண்டும்.
நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களே மாதவிலக்கு எனப்படும். அந்த நாட்களில் இரும்பு சத்து மிக்க எள் உருண்டை, ஒழுக்கங்கஞ்சி போன்ற உணவுகளை அளிப்பார்கள். ஆனால் இப்போது அவ்வாறு அளிப்பதில்லை. அதனால்தான் பல கன்னிப் பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அவர்களது மகப்பேறு காலத்தில் பல சிக்கல்களையும் சந்திக்கிறார்கள். சிசேரியன் அளவிற்குப் போவதற்கும் இதுவே காரணம்.
பூப்பெய்தல், முன்கூட்டியே பூப்பெய்தல், பூப்பெய்தாமலே போவது எல்லாமே கிரகங்களின் அடிப்படையில்தான். இப்போது பெண்கள் மிகச் சிறிய வயதிலேயே பூப்பெய்தும் நிலை ஏற்படுகிறது. அதுவும் செவ்வாயின் மாற்றம் தான். அதுவும் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில்தான் பூப்பெய்தல் நிகழ்கிறது.
பூப்பெய்தல் என்பது பூ மலரும் நேரமாகும். அதாவது தாமரை மலரும் நேரம் அல்லது அல்லி மலரும் நேரம். தாமரை காலை வைகறையில் இருந்து 7 மணிக்குள் மலரும். அதற்குள் அல்லது அல்லி மலரும் நேரம் 5.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாகத்ததான் பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படும். அதை வைத்தே பூப்பெய்தல் என்று அழைக்கப்பட்டது.
ஆனால் பூப்பெய்தல் எந்த நாளில் வந்திருக்கிறார்கள், எந்த நட்சத்திரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஜனன ஜாதகமே சிறந்தது.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்.
அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.
சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும்.
அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

துளசி இலையை சாப்பிட்டால் தாம்பத்தியம் பாதிக்கும் என்பது?

துளசி இலையை சாப்பிட்டால் தாம்பத்தியம் பாதிக்கும் என்பது?

பிரசாதம் என்றால் கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். துளசியும் அதுபோலத்தான். கொஞ்சமாகச் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.துளசி இலை சளியை கரைக்கும், உடல் சூட்டை கட்டுப்படுத்தும், மந்ததைத் போக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும். நமது முன்னோர்கள் எல்லாம் ஆலயங்களில் எதைக் கொடுத்தாலும் பிரசாதம் என்று நாம் வாயில் போட்டுக் கொள்வோம் என்று தெரிந்துதான் இதுபோன்ற அரிய மூலிகைகளை பிரசாதமாகக் கொடுத்துள்ளனர்.
துளசி பெருமாளுக்கு உகந்தது. பச்சைக் கற்பூரத்தின் சுவை, நறுமணம் போன்றவைதான் துளசி இலையில் இருக்கும். பொதுவாக துளசியின் சாறை முகர்ந்தாலே மூக்கடைப்பு போன்றவை விலகும்.
துளசியின் மனம் பெருமாளுக்கு பிடித்தது. முக்கியமாக பார்த்தசாரதி பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துவது மிகவும் உகந்தது. ஏனெனில் அவர் ரணங்களுடன் இருந்தவர். அதுபோல சக்கரத்தாழ்வாருக்கும் துளசி மாலை சிறப்புதான். அவர் ஆயுதங்களுடன், அக்னி சொரூபமாக இருப்பவர். எனவே சாந்தப்படுத்தக் கூடிய சக்தி துளசிக்கு உண்டு.
அரச மர சுள்ளியை (அதாவது அரச மரத்தின் கிளையின் நுனிப்பகுதி நாளடைவில் காய்ந்து விழுவது) அதன் புகைக்கு நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உண்டு.
நரம்பு தளர்ச்சி நோய் உள்ளவர்கள் நெருப்பில் அரச மர சுள்ளியைப் போட்டு அதன் புகையை சுவாசித்தாலே போதும். நரம்பு தளர்ச்சி நீங்கும். அரச மரத்திற்கு மின் ஆற்றலும் உண்டு.

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது? எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
என்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் சிலரது ஜாதகங்களைப் பார்க்கும் போது லக்னாதிபதி கெட்டுப் போய் இருப்பார். எந்தவித யோக பலனும் இருக்காது. ஆனால் பூர்வ புண்ணியாதிபதி மட்டும் மிகச் சிறப்பாக இருப்பார். அதன் காரணமாக அவர்களின் வாழ்வில் பெரிய ஏற்றம் இல்லாவிடிலும் எந்தக் குறையும் இருக்காது.

உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். இன்றைக்கும் கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் படுக இன மக்கள் பாம்பை உடலின் மீது ஊர்ந்து செல்ல வைத்து தோஷ சாந்தி செய்கின்றனர்.
எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம்.

கொலைக் குற்றத்திற்கு நிகராகக் கருதப்படும் குற்றங்கள் எவை?

கொலைக் குற்றத்திற்கு நிகராகக் கருதப்படும் குற்றங்கள் எவை?

மனு நீதி சாஸ்திரத்தில் கொலைக்கு நிகரான பல குற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் பசு-கன்றுக் குட்டியைப் பிரித்தல், கன்று பால் கிடைக்காமல் செய்வது, பசுவைக் கொல்வது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு தீங்கு இழைப்பது, சிசுக்களுக்கு கள்ளிப்பால் கொடுப்பது, பிறர் மனைவியை கவர்தல் உள்ளிட்ட பாவங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை விட அதிக கஷ்டங்களை தரக்கூடியவை.

Saturday, February 26, 2011

போரின் போது எதிரிகளைக் கொல்லும் ராணுவ வீரருக்கு தோஷம்/பாவம் ஏற்படுமா?

போரின் போது எதிரிகளைக் கொல்லும் ராணுவ வீரருக்கு தோஷம்/பாவம் ஏற்படுமா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவம் உள்ளது. இதில் பணியாற்றும் வீரர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிகின்றனர். அப்போது பணி நிமித்தமாக சிலரைக் கொல்ல நேரிடுகிறது. இது போர் நியதிகளின்படி நியாமானது என்றாலும், ஒரு உயிரைக் கொன்ற வகையில் அவருக்கு பாவம்/தோஷம் ஏற்படுமா?
பதில்: எதிரிகளைக் கொல்லும் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் ராணுவ வீரர்கள். எனவே, அதனைப் பாவமாகக் கருத முடியாது. இதற்கு வேறு உதாரணம் கூற வேண்டுமென்றால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றும் அரசு ஊழியருக்கும் பாவம் சேராது.இவர்கள் அப்பாவிகளைக் கொல்வதில்லை. எனவே இவர்களுக்கு பாவம் அல்லது தோஷம் ஏற்படாது.

பல்லி விழும் பலன் உண்மையென்றால், அதற்கு அவ்வளவு சக்தி வந்தது எப்படி?

பல்லி விழும் பலன் உண்மையென்றால், அதற்கு அவ்வளவு சக்தி வந்தது எப்படி?

பல்லிக்கு ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இதுபோல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.
பறவைகளில் கிளி மிகவும் நுணுக்கமானது. ஆன்மிகத்தில் கிளி, கருடன், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பம்சம் உண்டு. அவை தெய்வங்களின் வாகனமாக கருதப்படுவதால் அவற்றையும் வழிபடுகிறோம். அந்த வகையில் பல்லிக்கும் சில சிறம்பங்கள் உண்டு.
எனவேதான் அதன் சத்தத்திற்கும், அது மேலே விழுவதால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்றபடி வரலாற்றுப் பதிவுகள் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் பண்டைய கால சமய நூல்களில் பல்லியை பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பல்லியை மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ அதனால் ஏற்படும் பாவம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது வணங்கத்தக்க உயிரினமாக கருதப்படுகிறது.
நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை

வள‌ர்‌பிறை‌யி‌ல் ம‌னித‌னி‌ன் செய‌ல்‌திற‌ன் அ‌திக‌ரி‌க்குமா?

வள‌ர்‌பிறை‌யி‌ல் ம‌னித‌னி‌ன் செய‌ல்‌திற‌ன் அ‌திக‌ரி‌க்குமா?

சுக்கிலபட்சம் என்கிற வளர்பிறையில் மனிதனுடைய மூளையின் செயல்பாடு உக்கிரமாக இருக்கும் என்றும், தேய்பிறையான கிருஷ்ண பட்சத்தில் அந்த மாதிரி இருக்காது . இது உண்மையா? எப்படி?
சந்திரனைத்தான் நாம் மனோகாரகன் என்று சொல்கிறோம். பெளர்ணமி அன்று சந்திரனுடைய ஒளிக்கற்றைகளில் புவியீர்ப்பு விசை அதிகரித்து கடல் அலைகள் இயல்பிற்கு அப்பாற்பட்டு பொங்கி எழுவதைப் பார்க்கிறோம். மேலும், பெளர்ணமி நிலவினுடைய தன்மை அதாவது தணிந்த நிலை, உள்ளத்தில் ஒருவிதமான கிளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது என்பதையும் பார்க்கிறோம்.
அமாவாசை முடிந்து பிரதமையில் இருந்து தொடங்கி பெளர்ணமி வரை இருக்கக்கூடிய வளர்பிறையில் செயல்பாடுகள் பொதுவாகவே அதிகரிக்கும். இதுவே தேய்பிறையில் குறையும். அதாவது 10 எண்ணங்களுக்கு 4 எண்ணங்கள் தோன்றும். கற்பனைத் திறன், கற்பனை விகிதம் வளர்பிறையில் அதிகரித்தும், தேய்பிறையில் குறைந்தும் காணப்படும். அப்படித்தான் அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரனுடைய ஒளிக்கற்றைக்கு இயல்பாகவே கற்பனை சக்தி அதிகம்.
அதனால்தான் சந்திரனைப் பாடாத கவிஞர்களே கிடையாது. சாதாரண புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, மரபுக்கவிதையில் இருந்து சங்ககாலப் புலவர்கள் வரைக்கும் சந்திரன்தான் கற்பனைக்கும், கவித்துவத்திற்கும் அடிப்படையாக இருந்திருக்கிறது. அதனால் வளர்பிறையில் உணர்வுகளும், செயல்பாடுகளும் அதிகமாக இருக்கும்.
தே‌ய்பிறையில் எண்ண‌ங்க‌ள் இருக்கிறது. செயல்பாடு இருக்கிறது. ஆனால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அமைப்பு இருக்கிறதே, அது வளர்பிறையில் 4 விதமான சிந்தனை வரும். அதனால் வளர்பிறையில் சிந்தனைத் திறன் அதிகரிப்பதும், தேய்பிறையில் சிந்தனைத் திறன் குறைவதும் என்று சொல்ல முடியாது. எண்ணங்கள், கற்பனைத் திறன் குறைவதும் என்பது இயல்புதான்.

சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா? இருக்கிறது என்றால் என்ன?

சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா? இருக்கிறது என்றால் என்ன?சர்ப தோஷம் என்பது என்னவென்றால் லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம். ராசிக்கும் இதுபோல் இருந்தால் அதுவும் சர்ப தோஷம். ராகு, கேது தவிர எல்லா கிரகங்களும் அடங்கிவிடுகிறதென்றால் அதற்குப் பெயர் கால சர்ப தோஷம்.




சர்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷயத்திற்கு சர்ப தோஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம்.
ஆனால், கால சர்ப தோஷத்திற்கு கால சர்ப தோஷத்தை சேர்க்கக்கூடாது. கால சர்ப தோஷம் என்பது என்னவென்றால், எல்லாவற்றையுமே காலம் கடத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, படிச்சாரு, வேலை கிடைக்கவில்லை. இல்லையென்றால் படித்ததற்கும், வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரியெல்லாம் கொண்டு போகும். இதேபோல, கூடுதலா 2 மார்க் வந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை எங்கேயோ போயிருக்கும், இல்லையென்றால் ஐஐடியில் சேர்ந்திருப்பார் என்றெல்லாம் கூறுகிறார்களே இதெல்லாம்தான் கால சர்ப தோஷம்.

அதாவது வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று கடைசி நேரத்தில் வெற்றியை குறைக்கக் கூடிய அம்சம் இந்த கால சர்ப தோஷத்திற்கு உண்டு. காலமெல்லாம் நினைத்து நினைத்து வருந்துவது என்று சொல்வார்களே, அதுதான் கால சர்ப தோஷம். இதேபோல எல்லாவற்றையுமே தாமதமாக்கும். படித்து முடித்தால் வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்தது பிறகு கல்யாணத்திற்கு எவ்வளவோ தேடினார்கள், கடைசியில் ஏதோ ஒன்று சிம்ப்பிளாக பார்த்து முடிக்க வேண்டியதா போய்விட்டது. சரி, குழந்தை அது அதைவிட தாமதம். பிறகு அதற்காக டாக்டர்களிடம் அலைந்து அதன்பிறகுதான் குழந்தை பிறந்தது. இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இப்படி கால, நேரத்தை விரயமாக்கி, காலத்தைக் கடத்தி தரக்கூடியது கால சர்ப தோஷம்.

இப்படி கால சர்ப தோஷத்தில் இருப்பவர்களுக்கு பிறக்கிற குழந்தைக்கும் கால சர்ப தோஷம் தொடரும். எனவே அந்தக் குழந்தையை வளர்க்கிற விதத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசப்பட வேண்டும். குழந்தையை நெருக்குதல் கொடுக்காமல், கடினமாக நடந்துகொள்ளாமல் இயல்பாக திட்டமிட்டு வளர்க்க வேண்டும். இதுமாதிரி கொண்டு வந்தால் கொஞ்சம் தவிர்க்கலாம். இல்லை, கொஞ்சம் அவர்கள் மாறிப் போகிறார்கள் என்றால், அவர்களை விட்டுத்தான் பிடிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு அவர்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்தால் அது கொஞ்சம் சிக்கலாகும். இதுபோன்று சில விஷயங்களெல்லாம் உண்டு. கால சர்ப தோஷ அமைப்பில் பிறந்த குழந்தைகளை பெருந்தன்மையாக கொண்டு செல்ல வேண்டும். அப்பதான் அவர்கள் நன்றாக இருப்பார்கள்.

அதைவிட்டு விட்டு, ஆரம்பத்திலேயே நீ டாக்டராக வேண்டும், எஞ்ஜினியர் ஆக வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் எதையும் விதைக்கக் கூடாது. நன்றாக படி, என்ன கிடைக்கிறது என்று பார்க்கலாம். அந்த நேரத்தில் என்ன விருப்பமாக இருக்கிறதோ அதில் சேர்ந்துகொள் என்று பேசி வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு டாக்டராக்குகிறேன் என்று சொல்லி வளர்த்துவிட்டு, கடைசியில் 2 மார்க் சிக்கல் வந்தால், அந்தக் குழந்தைக்கு அப்பா, அம்மாவோட எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை அந்தப் பையனுக்கு வளர ஆரம்பித்துவிடும். கால சர்ப தோஷத்தில் பிறப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதை சந்திக்கிற அளவிற்கு பிள்ளைகளை முன்னெச்சரிக்கையோடு வளர்க்க வேண்டுமே தவிர, இப்படித்தான் ஆக வேண்டும், இதுதான் நல்லது, மற்றதெல்லாம் நல்லதில்லை என்றெல்லாம் வளர்க்கக் கூடாது.
கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் எ‌ன்ன?

சர்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு காளஸ்திக்கு செல்கிறார்கள். இதுபோல கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு என்று தலம் ஏதாவது இருக்கிறதா?
கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிறது. அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. அந்த பைரவர் வாகனத்தோடு, நாயோடு இல்லாமல், அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் இருப்பார் கால பைரவர். அவரை வழிபட்டால் இந்த கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். பொதுவாக கால சர்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.

கால சர்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். 26இல் இருந்து 38 வயது வரை ஓரளவிற்கு பரவாயில்லை, ஒரு சிலதெல்லாம் கிளியராகும். ஆனால், 39இல் இருந்து 46 வயது வரை அதிகப்படியான உயர்வைத் தரும்.
எனவே கால சர்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது.

யோகம், கரணம் அதனுடைய அர்த்தங்கள் என்ன?

பஞ்சாங்கத்தை எழுதும் போது யோகம், கரணம், அமிர்தாதி என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்களே அதனுடைய அர்த்தங்கள் என்ன? 
 இதெல்லாம் முற்றிலும் அறிவியல். பூமியை சூரியன் எந்த அளவிற்கு கடக்கிறதோ அதைப் பொறுத்துதான் இதெல்லாம். சந்திரன் பூமியில் இருந்து எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை அறிவதற்குதான் பிரதமை, திருதியை போன்ற திதிகளெல்லாம். அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் எந்த அளவில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை காட்டக்கூடியதுதான் இது.
இதே மாதிரிதான் யோகங்களும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் பூமி எந்த மாதிரியான அமைப்பில் இருக்கிறது என்பதை காட்டக்கூடியதுதான் யோகம். அதாவது, சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் இந்த மாதிரியெல்லாம் அமைகிறது.
இதெல்லாம் முற்றிலும் வானவியல் கணக்குமுறை. இதை அடிப்படையாக வைத்துதான் வானவியல் தொடர்பான வார்த்தைகளே நிறைய வருகிறது.
கரணம் என்பது?
யோகம், கரணம் என்பது என்னவென்றால், இதுவும் அதே மாதிரிதான். சந்திரனுக்கும், சூரியனுக்கும் நடுவில் இருக்கக் கூடிய இடைப்பட்ட பகுதி பாதைகளை வைத்துதான் நிஷ்கம்ப யோகம், கரணம் எல்லாம் குறிக்கப்படுகிறது.

ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்கிறார்களே? அர்த்தம் என்ன

ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்கிறார்களே? அர்த்தம் என்ன
ஆமை என்பது ஒரு அவதாரம். தசாவதாரத்தில் ஒரு அவதாரம் ஆமை. ரமணர் போன்ற பெரிய சித்தர்களெல்லாம் ஆமை போல அடங்கியிரு என்பார்கள். ஐம்புலன்களும் ஆமை போல அடக்கமாக இருக்க வேண்டும். சலனமோ, சத்தமோ, ஆபத்தோ என்றால் தன்னுடைய உடல் உறுப்புகளை அந்த ஓட்டிற்குள் ஒடுக்கிக்கொள்ளும்.

அப்படிப்பட்ட ஆமை ஒரு இடத்திற்கு வருகிறதென்றால் அவர்கள் கொஞ்சம் ஒடுங்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். தெய்வத்தினுடைய வருகை ஒடுங்கும். ஆயுள் ஒடுங்கும். இதுபோன்ற சில விஷயங்களும் ஒடுங்கும். அதற்காகத்தான் அதுபோலக் குறிப்பிடப்படுகிறது.
அதனால்தான் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள். அமீனா என்பவர் நீதிமன்ற உத்தரவுப் படி வீட்டை காலி செய்பவர். இந்த இரண்டு பேருடைய வரவும் வீட்டிற்கு இருக்கக்கூடாது என்பார்கள். இதெல்லாம் ஒரு அறிகுறி என்று சொல்லலாம். ஆமை புகுந்தால் செல்வங்கள் குறையும், சொத்துக்கள் விற்கும்படி ஆகும். கஷ்டங்களைக் கொடுக்கும். செளகரியத்தைக் கெடுக்கும்




 
ஆமை என்பது ஒரு அவதாரம். தசாவதாரத்தில் ஒரு அவதாரம் ஆமை. ரமணர் போன்ற பெரிய சித்தர்களெல்லாம் ஆமை போல அடங்கியிரு என்பார்கள். ஐம்புலன்களும் ஆமை போல அடக்கமாக இருக்க வேண்டும். சலனமோ, சத்தமோ, ஆபத்தோ என்றால் தன்னுடைய உடல் உறுப்புகளை அந்த ஓட்டிற்குள் ஒடுக்கிக்கொள்ளும்.

அப்படிப்பட்ட ஆமை ஒரு இடத்திற்கு வருகிறதென்றால் அவர்கள் கொஞ்சம் ஒடுங்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். தெய்வத்தினுடைய வருகை ஒடுங்கும். ஆயுள் ஒடுங்கும். இதுபோன்ற சில விஷயங்களும் ஒடுங்கும். அதற்காகத்தான் அதுபோலக் குறிப்பிடப்படுகிறது.
அதனால்தான் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள். அமீனா என்பவர் நீதிமன்ற உத்தரவுப் படி வீட்டை காலி செய்பவர். இந்த இரண்டு பேருடைய வரவும் வீட்டிற்கு இருக்கக்கூடாது என்பார்கள். இதெல்லாம் ஒரு அறிகுறி என்று சொல்லலாம். ஆமை புகுந்தால் செல்வங்கள் குறையும், சொத்துக்கள் விற்கும்படி ஆகும். கஷ்டங்களைக் கொடுக்கும். செளகரியத்தைக் கெடுக்கும்



சில குழந்தைகள் முன்னோர்களின் பிறப்பு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

சில குழந்தைகள் முன்னோர்களின் பிறப்பு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். மேலும் ஒத்த உருவத்தில் சிலர் பிறப்பதையும், அவர்களைப் போன்றே நடந்து கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களின் ஜாதகம், அவர்களின் ஜாதகத்தின் ஆதிக்கத்தில் இருக்குமா? இல்லை அவர்களுடைய ஜாதகத்தில் இவர்கள் பிறப்பார்களா?

 அறிவியல்பூர்வமாகச் சொல்லப்போனால் முன்னோர்களுடைய குரோமோசோம்ஸ், ஜீன்ஸ் காரணமாக இருப்பதைச் சொல்லலாம். மரபியல் கூறுகளின் அடிப்படையில் தொடர்கின்றன என்று சொல்லலாம்.
பொதுவாக லக்னத்தில் என்ன கிரகம் இருக்கிறதோ அது தோற்றத்தையும், நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கிறது. லக்னத்தில் சனி உட்கார்ந்திருந்தால் தாத்தா, பாட்டியைக் கொண்டுவரும். லக்னத்தில் புதன் இருந்தாலோ அல்லது பூர்வ புண்ணிய அதிபதி உட்கார்ந்திருந்தாலோ தாய்வழி உறவுகளில், தாய்மாமன் மாதிரி, அத்தை மாதிரி உறவுகளைக் கொண்டுவரும். அந்தக் குழந்தைகளுக்கு தாய்வழி உறவுகளுடைய ஜீன் அதிகமாக இருக்கும். முன்னோர்களைப் போல் இருந்தால், அது சனியினுடைய ஆதிக்கம் அதிகம் இருந்தால் கொண்டுவரும். அதாவது, தாத்தா, தாத்தாவினுடைய அப்பா, முப்பாட்டன்களைக் கொண்டுவருவது சனி. ஏனென்றால், அவர்தான் பழமைக்கும், மரபு சார்ந்த நடவடிக்கைகள், பண்பாடு சார்ந்த நடத்தைகள் போன்று பிறப்பதற்கு காரணம் சனிதான். இதையெல்லாம் நடைமுறையில் பார்க்கிறோம்.
ஒருவர் வந்திருந்தார். என்னுடைய அப்பா பிறந்த தேதி, நட்சத்திரத்திலேயே இவன் பிறந்திருக்கிறான். பார்ப்பதற்குக் கூட என்னுடைய அப்பா சாயலில்தான் இருக்கிறான். அந்தக் குழந்தைக்கு சந்திரன், சனி இரண்டும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இதுபோல சந்திரன், சனி சேர்க்கை இருந்தாலும் பாட்டன், பாட்டியைக் கொண்டுவரும். இதுபோல ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு அமைப்பிற்கு உரிய கிரகமாக இருக்கிறது.ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்:

சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
பதில்: கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது.


பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப்படும் சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர்.
அந்தக் காலத்தில் லிங்கத்தை அரண்மனையில் கூட வைத்து மன்னர்களால் வழிபட முடியும் நிலை இருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி அவற்றை கோயில்களில் வைத்து மன்னர்கள் வழிபட்டனர். இதுபோல் மக்களுக்காக அளிக்கப்பட்ட கோயில் சிலைகளை திருடுவதும், அதை வீட்டில் வைத்து வழிபடுவதும் கடும் பாவத்திற்கு ஆளாக்கும்.
சிவன் சொத்து குல நாசம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம், சிவன் சொத்தை அபகரித்துச் சென்றால் சம்பந்தப்பட்டவரின் குடும்பம் நாசமாகும் என்பதேயாகும். அப்படியிருக்கும் போது சிவன் சிலையை திருடிச் சென்று வீட்டில் வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் ஏழேழு ஜென்மத்திற்கும் பாவம் சுமக்க நேரிடும்.

தண்ணீரை தொடர்ந்து சிந்தச் செய்தால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்குமா?

தண்ணீரை தொடர்ந்து சிந்தச் செய்தால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்குமா?

வாஸ்து குறைபாடு உள்ளதாகக் கூறப்படும் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் தண்ணீர் தொடர்ந்து வழிந்து/சிந்திக் கொண்டிருக்கும் வகையில் அமைத்தால் அந்த குறைபாடு நிவர்த்தி ஆகும் எனக் கூறப்படுகிறது? இது உண்மையா?
பதில்: பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு. ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான். எனவே தண்ணீரை வீணக்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தண்ணீர் போல் பணம் செலவாகிறது என்று சொல்வதன் உள்அர்த்தம் கூட தண்ணீரை அதிகம் செலவழித்தால் பணம் தங்காது என்பதே. எனவே, தண்ணீரை வழிய விடுவதும், சொட்டு சொட்டாக சிந்த விடுவதும் எந்த வகையிலும் பரிகாரம் ஆகாது.
ஆனால், ஆலயங்களில் இதுபோன்ற செயல்களுக்கான பலன்கள் வேறு மாதிரியானவை. சிவன் கோயில்களில் கலசத்தில் உள்ள தீர்த்தம் சொட்டுச் சொட்டாக மூலவரின் மேல் விழச் செய்வது அதன் சக்தியை அதிகரிக்கும். இந்த விதி வீடுகளுக்கு பொருந்தாது.
பொதுவாக வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் தொடர்ந்து சிந்திக் கொண்டிருந்தால் அது தம்பதிகளுக்கு ஆகாது. கணவன்-மனைவிக்குள் பிரிவு, சண்டை, சச்சரவு, சிக்கல், கருத்து மோதலை ஏற்படுத்தும். எனவே, வாஸ்து குறைபாட்டை நீரை வீணடிப்பதன் மூலம் எந்த விதத்திலும் நிவர்த்தி செய்ய முடியாது.ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்




வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு வாசல்படியின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு வாசல்படியின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்?

வீட்டு வாசல்படியின் எண்ணிக்கை பொதுவாக ஒற்றைப்படையில் இருப்பது நல்லது. மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய வாய் (பேசுதல்) எவ்வளவு சக்தி வந்ததோ அதே அளவுக்கு ஒரு வீட்டின் வாயிலும் சக்தி வாய்ந்தது. வாயில் உள்ள பற்களுக்கு இணையாக படிக்கட்டுகள் கருதப்படுகின்றன. எனவே, படிக்கட்டுகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் அமைவது நல்லது.மேலும், வாசலின் குறுக்கே அமர்வது நல்லதல்ல. ஏனென்றால், அறிவியல் ரீதியாக வாசல், ஜன்னல் வழியாகவே காற்று வந்து செல்லும். அதனை மறைப்பது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆன்மிக ரீதியாகப் பார்க்கும் போது வாசலின் வழியாகவே லட்சுமி ஒருவர் வீட்டில் வாசம் செய்ய வருவார் எனக் கருதப்படுகிறது. எனவே வாசலின் குறுக்கே அமர்வது வீட்டிற்கு அரும் லட்சுமியை தடுப்பதற்கு சமம் எனக் கூறினர்.
அதுமட்டுமின்றி வீடு கட்டும் காலத்தில் வாசல்கால் நடும் போது பல்வேறு பூஜைகள் செய்து, நவரத்தினக் கற்கள், பஞ்சலோக பொருட்களை வைத்து அதற்கு தெய்வீகத் தன்மையை ஏற்படுத்துகிறோம். எனவே, அதன் மீது அமரும் போது லட்சுமியை அவமதித்ததாக கருதப்படுகிறது.ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:


ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.
ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம்.
தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும்.ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:


சொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு?

சொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு?

யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது சொந்தமாக வீடு கட்டும் யோகம் கிட்டும். ஜோதிடத்தில் சுக்கிரனை கட்டிடக்காரகன் என்றும், 4வது வீட்டை கட்டிட ஸ்தானம் என்றும் கூறுவர்.
பொதுவாக 4ஆம் அதிபதியின் தசை, புக்தி அல்லது சுக்கிரன் வலுவாக இருந்து அதன் தசை, புக்தி நடக்கும் காலகட்டங்கள் மற்றும் யோகாதிபதி, ஜீவாதிபதி, லக்னாதிபதியின் தசா புக்திகள் நன்றாக இருக்கும் காலகட்டத்தில் வீடு கட்டுவதற்கான வாய்ப்பு, வசதி, வருமானம் கிட்டும்.
இதுமட்டுமின்றி பூமிக்காரகன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது. பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:


வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?

வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?

பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த இடம் அதிர்வுகள் ஏற்படாதவாறு இருத்தல் அவசியம்.
எனவேதான் தலைவாசலுக்கு அருகே பூஜையறை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தலைவாசல் வழியாகவே அனைத்து தரப்பினரும் வந்து செல்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நல்மனது படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் சென்று வரும் இடம் (இறுதிச் சடங்கு) சிறப்பானதாக இருக்காது.
இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்து வீட்டு விலக்கு பெற்ற பெண்களும் தலைவாசல் வழியாகவே வீட்டில் நுழைய நேரிடும். எனவேதான், பூஜையறையை தலைவாசலுக்கு அருகே வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினர்.
பழங்காலத்தில் ஈசானியம் அல்லது வடமேற்கு பகுதியில் பூஜையறை அமைத்தனர். அந்த திசையில் பூஜையறை அமைப்பது வாஸ்துப்படி நல்லது.ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்


Thursday, February 24, 2011

பூஜை செய்யும் வழிமுறைகள்

பூஜை செய்யும் வழிமுறைகள்

* நெற்றியில் திருநீறோ குங்குமமோ அல்லது திருமண்ணோ இல்லாமல் பூஜை செய்யக்கூடாது. காரணம் இவை இறை சின்னங்கள். இவை நம் மனதை ஒருமுகப்படுத்தி பூஜையில் ஈடுபட உதவும்.
* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.
* பூஜைக்குப் பயன்படும் மலர்கள் புழு அல்லது பூச்சியின் தாக்கத்திற்கு ஆளாகாததாக இருக்கவேண்டும். ஒரு வேளை அவை புழு,பூச்சி அரித்துக் காணப்படுமாயின் அவற்றை பூஜைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்தோடு நல்ல மலர்களின் காம்புகளை ஆய்ந்து அவற்றில் தலைமுடியோ அல்லது வேறு பொருட்களோ இல்லாதவாறு சுத்தப்படுத்த வேண்டும்.
* பூஜைக்கு தேவையான பொருட்களை நினைவில் வைத்து முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜையின் போது பொருட்களை சேகரிப்பதைத் தவிருங்கள்.
* தீபம், மணி, வெற்றிலை, தேங்காய், சங்கு, பழம். பூக்கள் இவற்றை வெறுந்தரையில் வைக்கக்கூடாது.
* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.
* பூஜை நடுவில் எழுந்தி போகக்கூடாது.

* மந்திரம் தவிர்ந்த வேறு பயனற்ற பேச்சுக்கள் எதையும் பூஜையின் போது பேசலாகாது. மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் இறைவனை இறைஞ்சி வணங்குங்கள்.





திருவாசகம்

திருவாசகம்

திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது
மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப்பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துஎண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ளசிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரத்தை நாடுகிறவர்கள்பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கைகொள்ளல், அருளைப் பெறல்,அதில்ஆழ்ந்துதோய்தல்,இறைவனைக்காணல்,அவனோடுதொடர்புகொள்ளல்,அவனிடமிருந்துபெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப்பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல்ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.
நமசிவாய
திருவாசகத்தின் முதல் வரி நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை விளக்குகிறது.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
"நமசிவாய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.

முக்தியின் வகைகள்

முக்தி


1. ஸாலோக்யம் என்றால் என்ன?

2. ஸாரூப்யம் என்றால் என்ன?

3. ஸாந்நித்யம் என்றால் என்ன?

4. ஸாயுஜ்யம் என்றால் என்ன?

விடைகள்

1. இறைவனைக் காணுதல்

2.இறையருள் பெருதல்

3. இறைவன் அருகில் இருத்தல்

4. இறைத்தன்மை பெருதல்

கேள்வி-பதில்கள்


கேள்விகள்:

1.ருது எனறால் என்ன?


2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?

3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?

4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?

5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?

6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?

7. பிறக்க முக்தி தரும் இடம் எது?

8. இறக்க முக்தி தரும் இடம் எது?

9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?

10. நினைக்க முக்தி தரும் இடம் எது?

விடைகள் :

1.இரண்டு மாத காலம்

2.ஆறு மாத காலம்

3.அமுதம் சிந்திய இடம்

4.ஒன்றரை மணி நேரம்

5.முப்பத்திமூன்று

6.ஒட்டியாணம்

7.திருவாரூர், ஸ்ரீ சைலம்.

8.காசி

9.சிதம்பரம்

10.திருவண்ணாமலை

கேள்விகள்:


1. நமஸ்காரப் பிரியர் யார்?

2. அலங்காரப் பிரியர் யார்?

3. அபிஷேகப் பிரியர் யார்?

4. நைவேத்தியப் பிரியர் யார்?

விடைகள்:

1.சூரிய பகவான்

2.விஷ்ணு பகவான்

3.சிவபெருமான்

4.விநாயகர்

கேள்விகள்:
தாண்டவம்:
1. சிவபெருமான் காளிகா தாண்டவம் ஆடுவது எப்போது?
2. சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
3. சிவபெருமான் சங்கார தாண்டவம் ஆடுவது எப்ப்போது?
4. சிவபெருமான் திரிபுர தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
5. சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
6. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
7. சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
நடனம்:
8. அஜபா நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
9. உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
10. தரங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
11. குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
12. பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
13. கமல நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
14. ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

பதில்கள்:
சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச் செய்யும் போது காளிகா, சந்தியா, சங்கார (சம்ஹார) தாண்டவம் ஆடியதாகக் கூறப்படுகிறது.
சிவதாண்டவம்
1. காளிகா தாண்டவம் - படைத்தல் செய்யும் போது.
தலம் - நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி. ஆடிய இடம் - தாமிர சபை (Copper)
2. சந்தியா தாண்டவம் - காத்தல் செய்யும் போது.
தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை. ஆடிய இடம் - வெள்ளி அம்பலம் (Silver)
3. சங்கார தாண்டவம் - அழித்தல் செய்யும் போது.
தலம்- மதுரை என்கிறார்கள் சிலர்.தெரிந்தால் சொல்லவும்.
4. திரிபுர தாண்டவம் - மறைத்தல் செய்யும் போது.
தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம். ஆடிய் இடம் - சித்திர(Art) சபை.
5. ஊர்த்தவ தாண்டவம் - அருளல் செய்யும் போது.
தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் - இரத்தின(gem) சபை.
6 ஆனந்த தாண்டவம் - இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம்.
தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம். ஆடிய இடம் - கனக (Sky) சபை.
7. கௌரி தாண்டவம் - பார்வதிக்காக ஆடிய போது.
தலம்- திருப்பத்தூர்.
சிவநடனம்
8. அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர். இது சம்பந்தப்பட்ட மிக சுவாரஸ்யமான கதையைப் பின்னூட்டப் பகுதியில் பார்க்கவும்.
9. சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.
10.தரங்க நடனம் என்பது கடல் அலைபோல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார்.
11. குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் - திருக்காறாயில்.
12. பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.
13. கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.
14. ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் - திருமறைக்காடு (வேதாரண்யம்)




துன்பங்கள் எத்தனை வகைப்படும்?

 யாகங்களில் சிறந்தது எது?
அஸ்வமேத யாகம்

 விரதங்களில் சிறந்தது எது என்று கருதப்படுகிறது?
ஏகாதசி விரதம் (வைணவம்) ; சோமவார விரதம் (சைவம்)


 துன்பங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை

1.ஆதியாத்மிகம் : நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள்.
2.ஆதிதைவிகம் : முன்வினையால் எற்படும் துன்பங்கள்.
3.ஆதிபௌதிகம் : இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.
முருகப் பெருமானைப் ப்ற்றி கூறும் ஆகமம் எது?
முருகப் பெருமானைப் பற்றி கூறுவது காமிகம் என்ற ஆகமம் ஆகும். அதனை தமிழில் 'குமார தந்த்ரம்' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் விஸ்வநாத சிவாசாரியார் அவர்கள்.











. யாகங்களில் சிறந்தது எது?


2. விரதங்களில் சிறந்தது எது என்று கருதப்படுகிறது?


. துன்பங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

5. முருகப் பெருமானைப் ப்ற்றி கூறும் ஆகமம் எது?



பதில்கள்:

1. அஸ்வமேத யாகம்



2.ஏகாதசி விரதம் (வைணவம்) ; சோமவார விரதம் (சைவம்)



3. வைஷ்ணவி ஆலயம் என்று படித்தேன். 'கூகிலில்' தேடினால் அப்படியொரு கோவிலைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் அதே ஊரில் துர்கை ஆலயம் சக்தி வாய்ந்த ஒன்று எனக் கண்டறிந்தேன். அவை இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடும் என நம்புகிறேன்.



4. துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை

1.ஆதியாத்மிகம் : நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள்.
2.ஆதிதைவிகம் : முன்வினையால் எற்படும் துன்பங்கள்.

3.ஆதிபௌதிகம் : இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.
5. முருகப் பெருமானைப் பற்றி கூறுவது காமிகம் என்ற ஆகமம் ஆகும். அதனை தமிழில் 'குமார தந்த்ரம்' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் விஸ்வநாத சிவாசாரியார் அவர்கள்.

கண்ணீர் விட்டழுத கண்ணன்!

கண்ணீர் விட்டழுத கண்ணன்!

மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டு "இனி நான் என் உயிர் வாழ வேண்டும்?' என்று அரற்றிக்கொண்டு இருந்தானாம். அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தால் அவனுக்கு கீதையை உபதேசித்த கண்ணன் அங்கு அழுதுகொண்டு நின்றாராம். அவர் கண்ணீர்தான் அர்ஜுனன் தலையில் விழுந்ததாம்.
அப்பொழுது அருஜுனன் கண்ணனை பார்த்து "நான்தான் சாதாரண மனிதன், மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன், எனதுமகனை இழந்ததால் அழுகிறேன்; ஆனால் நீர் தெய்வமாயிற்றே! இதை எல்லாம் கடந்தவர் அல்லவா? நீர் ஏன் அழுகிறீர்? என்று கேட்டாராம்.
அதற்க்கு கண்ணன் "இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன். உலகில் உள்ள எல்லாமே மாயை, எதுவும் யாருக்கும் சொந்தமில்லை, இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொரு வருடையது ஆகும். எனவே எதற்க்காகவும், எந்த ஒரு இழப்பிற்க்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே, இந்த மனுக்குலத்தை எப்படி திருத்த? என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன்" என்றாராம்!
மனிதனுக்கு என்னதான் நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னாலும் அது மிக விரைவிலேயே மறந்து போய்விடும். "உங்களை சபிப்பைவரை ஆசீர்வதியுங்கள்" என்ற வசனத்தை எத்தனை முறை படித்தாலும் ஒருவர் சபித்தால் உடனே அவர்களை திருப்பி சபிக்கத்தான் மனிதன் முயல்வானே தவிர உடனே அவனை ஆசீர்வதிக்கும் அளவுக்கு அவனது மனது இடம்கொடுப்பதில்லை. ஆகினும் நாம் சிரத்தைஎடுத்து
முயன்று இறைவனின் கட்டளைகள்படி செய்ய பிரயாசப்பட வேண்டும்
"மாயை மாயை எல்லாம் மாயை" என்று பிரசங்கி சொன்னது போல இந்த உலகம் ஒரு மாயை, இது நிலையானது அல்ல, இங்குள்ளது எல்லாமே ஒருநாளில் அழிந்துவிடும், இங்குள்ள யாரும் நிலையானவர் அல்ல, என்பதை அனைவரும் அறிந்து உலகப் பற்றினை துறந்து தேவனின் மேல் பற்றுகொண்டு அவரின் சித்தம் ஒன்றை செய்வதுதான் நோக்கமாக கொண்டு வாழவேண்டும் என்பதை போதிக்கும் நல்ல கருத்தாக இதை எடுத்துகொள்ளலாம்!









ஆன்மீக கேள்வி – பதில்கள்

ஆன்மீக கேள்வி – பதில்கள்
சிவபெருமான்சந்திரனைச்சடைமுடியில்ஏன்தரித்துக்கொண்டிருக்கிறார்.அதுவும்ஒருகலையுள்ளதாயிருக்கினறதேயல்லது சோடசகலை யுள்ளதாகயிருக்கவில்லையே?
தக்கன்தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோதுஇவர்களெல்லாரிடத்திலும் ஒரே தன்மையானஇஷ்டமுள்ளவனாய்இருஎன்றுசொல்லிஅவ்வண்ணமாகயிருந்த சந்திரன் தன் ஸ்திரீகளுள் மிகுந்த சவுந்தரியமுள்ளகார்த்திகை உரோகணி யென்னும் இரண்டு ஸ்திரீகளிடத்தில் மாத்திரம்மிகுந்தஇஷ்டமுள்ளவனாய் மற்ற இருபத்தைந்து ஸ்திரீகளிடத்திலும்இட்டமில்லாதவனாயிருந்தான். அவர்கள் மனம்வருந்தித் தக்கனிடத்தில்சொல்லிக்கொண்டார்கள். அவன் கோபங்கொண்டவனாய்ச் சந்திரனுடைய சோடசகலைகளும்அழிவுறும்படிச் சபித்தான். அந்தச்சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப்பதினைந்து கலை குறையக்கண்ட சந்திரன் துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில்
சொல்ல, இந்தச்சாப மென்னால் நீக்கத்தக்கதல்ல வென்னப் பிரமதேவனிடத்தில் போய்ச் சொல்லிக்கொண்டான். “நான் சொன்னாலுந் தக்கன் இந்தசாபத்தை நிவர்த்திசெய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விண்டுவிடத்தில்விண்ணப்பஞ்செய்துகொள்" எனச் சந்திரன் அப்படியே செய்ய, தன்னால் முடியாதுஸ்ரீ கைலாசகிரிக்குப்போய்ப் பரமசிவனிடத்தில் விண்ணப்பஞ்செய்துகொண்டால்இந்தச் சாபம் நிவர்த்தியாகுமென்று விண்டு சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டுசந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தோத்திரம்செய்தான். பரமசிவன் கிருபை கூர்ந்து சந்திரனிடத்தி லிருந்த ஒருகலையினையுந் தமதுமுடியில்தரித்துக்கொண்டு இது உன்னிடத்திலிருந்தால்தக்கன் சாபம் இதனையுமழித்துவிடும். இனி நம்முடைய திருமுடியிலிருக்கிறகலையைத் தொடராது. இந்தக் கலையழியாமலிருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோலநாளுக்கு நாளொவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படிநிறைந்தாலும் வளர்ந்ததுபோல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாகஇருக்குமென்று அநுக்கிரகஞ் செய்தார். சந்திரன் சந்தோஷத்துடன் சுவாமியைத்தோத்திரஞ்செய்து விடைபெற்றுக்கொண்டு தன் பதவியிற்போய் சேர்ந்தான்.
பரமசிவன் ஒரு திருக்கரத்தில் மான் தரித்துக் கொண்டிருப்பதற்குக் காரண மென்ன?
அந்தமான் தாருகாவனத்து ரிஷிகளால் அனுப்பப்பட்டது. அவர்களேன்
அனுப்பினார்களெனில் பரமசிவன் பிக்ஷ¡டன மூர்த்தமாகத் தாருகாவனத்துக்கெழுந்தருளினபோது ரிஷிபத்தினிகள் கண்டு மோகித்துத் தங்கள் கற்புகுலைந்தார்கள். அதைக்கண்டு தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடையவர்களாய் ஒருவேள்விசெய்து அதிலுண்டான புலியை நோக்கிச் சிவனைக் கொல்லும்படியேவஅதனைக்கொன்று தோலை யாடையாக அணிந்து கொண்டார். பின்னுமந்தவேள்வியில்மானுண்டாகிவர அதனையிடக்கையில்வைத்துக்கொண்டருளினார்.பின்புமழுவுண்டாய்வந்தது. அதனை ஆயுதமாக வைத்துக்கொண்டனர். பின்புசர்ப்பங்களுண்டாய்வர அவைகளை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். பின்முயலகனென்னு மசுரனுண்டாகிவர அவனைக் கீழேதள்ளி முதகிலேறி நின்றார்.
மந்திரங்களை யேவினார்கள்; அவகைள் டமருக ரூபங்கொண்டு வர திருக்கரத்தில்வைத்தருளினார்.
விஷ்ணு மீன் கண், ஆமையோடு, பன்றிக்கொம்பு, எலும்புமாலை, கையில் கபாலம் இவைகளை ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார்?
விஷ்ணுகடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை அபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனைவதைத்த இரத்த வெள்ளங்குடித்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக்
கலக்கியபோது தேவர்கள் கயிலையிற்சென்று தாங்கள்வந்த காரியத்தை விண்ணப்பஞ்செய்துகொள்ளச் சுவாமி கிருபை கூர்ந்து ஒரு வயிரவரையனுப்ப அவர்போய் வலைவீசியந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால்தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார். அமிர்தமுண்டாகும்படித்
தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத்தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலிலாழ அதைக்கண்டுதேவர்கள் விஷ்ணுவைத் தோத்திரஞ்செய்ய அவர்வந்து ஆமையாகி மந்தரகிரிதன்முதுகில் நிற்கும்படித் தாங்கின காலத்தில் மமதை கொண்டு கடலைக் கலக்கஅதைக்கண்ட தேவர்கள் கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். சுவாமி
கிருபைகூர்ந்து விநாயகரையனுப்ப அவர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக்கடநீரை யெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய்விட்டது. பின்பு விநாயகர் நீரைச்சிந்தினார். அந்த நீருடன் ஆமையும்வெளிவந்து விழுந்து மதிமயங்கிக்கிடக்க அதை விநாயகர்கண்டு அதன் ஓட்டினைத்தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக்காணிக்கையாகக் கொடுக்கக்கண்டு மகிழ்ந்து தேவர்கள் வேண்டுதலினால் தலைமாலையுடன் அந்த ஆமையோட்டையும்மார்பில்தரித்துக்கொண்டருளினார்.ரணியாட்சனென்னும் ஒரு அசுரன் பிரமதேவனை தோத்தித் தவஞ்செய்துவரம்பெற்றுக்கொண்டு போகிறவன் பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். பரமசிவன் திருவுளமிரங்கிச்சுப்பிரமணியரையனுப்ப அவர்போயந்தப் பன்றியின் தலையை வேலினால் குத்தியமுக்கி யதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்கஅதை முன்போலத் தரித்துக்கொண்டார். பிரம விஷ்ணுக்களை யுண்டாக்கி யவர்களில்
பிரமனைக் கொண்டு சிருட்டித்தும் விஷ்ணுவைக் கொண்டு இரக்ஷ¢த்தும் பின்புசங்கரித்தும் பலவாறு இம் முத்தொழில்களைச் செய்கையில் பிரம விஷ்ணுக்களைமுடிவான காலத்தில் சங்கரித்து அவர்கள் எலும்புகளையும் சிரங்களையும்மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக்கொண்டதேயல்லது பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டதேயல்ல. முன்பொருகற்பமுடிவில் இவர்களையெல்லாம் நெற்றிக்கண் பொறியால்நீறுபடுத்தியந்தப்பொடியைத் தமது திருமேனியில் தரித்துக்கொண்டருளினார். இதுவும்அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்கிற காருண்யமேயாம்.
முன்னொருகாலம்பிரமா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்துதலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலையணிந்திருப்பதனால் சிரமாலியென்றும் கபாலந்தரித்துக்கொண் டிருப்பதனால்கபாலியென்றும் பெயருண்டாயது.
பரமசிவன்கண்டத்தில் விஷம் பொருந்தி யிருப்பதற்குக் காரணமென்ன?
தேவர்கள்அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக்கண்டு தேவர்கள் முறையிட அவர்களை இரக்ஷக்கும் பொருட்டு விஷத்தைக்கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன்,
நீலகண்டன் எனப்பெயர்பெறுவர்.
பரமசிவனுக்கு ரிஷபவாகன முண்டானதற்குக் காரணமென்ன?
தருமதேவதையானதுபிரமவிஷ்ணு முதலானவர்களெல்லாம் அழிந்துபோவதைக்கண்ட தானவ்வாறுமாண்டுபோகாமல் என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்கிற எண்ணங்கொண்டுரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்திற்சென்று பணிந்து “கர்த்தனே!நானிறவாமலிக்கும்படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டு" மென்று தோத்திரஞ்
செய்ய சுவாமி கிருபைகூர்ந்து அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்
இன்னும் யார் ரிஷப மானது?
விஷ்ணு திரிபுரசம்ஹாரகாலத்தில் ரிஷபமாகிக் கயிலாயபதி தன்னை வாகனமாகக் கொண்டருளும் பேறுபெற்றார்.
பரமசிவன் வீணாதண்டம் வைத்திருக்கக் காரணமென்ன?
விஷ்ணுவாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்கமுயலுகையில் சிவபெருமான் திருவுளமிரங்கி வைரவரையனுப்ப, அவரந்தவிஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்துஎம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாகவைத்துக்கொண்டார்.
பரமசிவனுக்குச் சிம்ஹாசனம் இருப்பதற்குக் காரணம் என்ன?
இரணியனைக்கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்கயிலாயபதிக்கு விண்ணப்பித்துக்கொள்ள, அவர் சரபரூபமெடுத்து அச்சிம்மத்தின்
தலையைப்பிளந்து இரத்தத்தைக் குடித்துக்கொன்றனர். தேவர்களதன்
தோலையுரித்துச் சுவாமிக்குத தவிசாக வைத்துச் சுவாமியை வேண்டிக்கொள்ளஅவரும் அவ்வாறே அங்கீகரித்தனர்.
பரமசிவன் யானைத்தோல் போர்த்திருப்பதற்குக் காரணமென்ன?
யானைரூபமாகத்தோற்றிய கஜாசுரனென்பவன் பிரமதேவனை நோக்கித் தவஞ்செய்துதேவர்களையெல்லாம்வென்று ஜயம்பெற வேண்டுமென்கிற வரங்கேட்டான். பிரம தேவன்அப்படியே வரங்கொடுத்துப், பரமசிவனெதிரில் போகாதே, போனால் இந்தவரமழிந்துபோமென்று சொல்லக் கேட்டுக்கொண்டு போனவன் தேவேந்திரன்முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டுபயந்து ஓடிக் காசி சேர்ந்தார்கள். அங்குமவர்களைத் தொடர்ந்து சென்றான்.அவர்கள் கண்டு பயந்து மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப்
பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். கஜாசுரனுக்குக் காலமுடிவு நேரிட்டதனால்பிரமதேவன் சொன்னதை மறந்து அங்குஞ் சென்று முனிவர்களைக் கொல்லவேண்டுமென்றுஉறுமுகிறபோது சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தைமிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
சிவபெருமான் கொக்கிறகைத் தரிக்கக் காரணமென்ன?
குரண்டாசுரனென்னும்ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக்கொரித்து, தேவர்களைவருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகையணிந்தருளினார்.