Saturday, February 5, 2011

தியானம் என்பதற்கும் யோகம் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?


தியானம் என்பதற்கும் யோகம் என்பதற்க்கும் உள்ள வேறுபாடு என்ன?
யோகம் என்பது இணைதல் என்ற பொருள் படும்.
யாரருடன் இணைவது...?
இறைவனுடன்.
உடல் மனம் அனைத்தையும் இறைவனுடன் இணைத்தலே யோகம்.
இறைவனை அடைய உடல் நலம் மன வளம் இரண்டும் தேவை.
உடல் நலத்திற்கு ஆசனங்களையும் மனவளத்திற்குத் தியானங்களையும் வகுத்தனர்.
தியானம் செய்வதால் மட்டுமே ஒருவன் இறைவனை அடையமுடியாது.
ஆராய்ச்சி செய்யவேண்டும்; அனைத்தையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்;எண்ணங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்; ஒவ்வொன்றும் எப்படி இறைநிலையிலிருந்து பிரிந்து வந்திருக்க முடியும் என்ற ஆராய்ச்சி; அனைத்திலும் இறைவனைக் காணும் ஆராய்ச்சி... இந்தப் பரிபூர்ண நிலையே யோகம் எனப்படுவது.
சிலர் நினைப்பது போல் யோகா என்றால் உடலை வளைத்து செய்யும் ஆசனங்கள் அல்ல; அப்படிப் பார்த்தால் காலையில் நம் வீட்டு டீவிப் பெட்டியில் யோகா கற்றுக்கொடுக்கும் மாஸ்டர் ஏன் இறைநிலையை உணரவில்லை...?
மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனம் கீழ்க்கண்ட அதிர்வெண்களில் இயங்குகின்றது

14 - 40 Cycles / Sec Beta

8 - 13 Cycles / Sec Alpha

4- 7 Cycles / Sec Theta

1 - 3 Cycles / Sec Delta
இந்த அதிர்வெண் இயக்கங்களை EEG(Electro Encephologram) மூலம் மிகவும் எளிதாக அறியலாம். மருத்துவர்களுக்குத் தெரியும்.
நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை. 40 ஐ தாண்டினால் மரணம்; அகால மரணம்.
20 க்கு மேலே தாண்டினாலே உடல் நலம் பாதிக்கப்படுகின்றது. இரத்தக் கொதிப்பிற்கு ரத்தினக் கம்பள வரவேற்பு...
ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. இது தியானம் செய்வதாலும் அல்லது எந்த ஒரு செயலையும் ரசித்து ருசித்துச் செய்வதாலும் மனம் இந்த நிலையை அடைகின்றது. இங்கே உடல்நலம் சரி செய்யப்படுகின்றன.
தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை; ஆழமான அமைதி.
டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இங்கே நுண்ணியக்க(querrying) அதிர்வுகளாக உள்ளது. இது இறைநிலையுடன் தொடர்புகொள்ளத் தக்க வல்லமை கொண்டது...
இதுதான் இறுதியில் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தினைக் கீழ்க்கண்டவாறு கொள்ளலாம்:

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகளைக் கொண்டதே யோகம் என்பது. இதில் தியானம் என்பது ஒரு படி அவ்வளவே.

No comments:

Post a Comment