Monday, February 28, 2011

கலியுகம் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா?

கலியுகம் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா?
கலியுகம் மட்டுமின்றி பல்வேறு ஜோதிடத்தில் யுகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற 4 யுகங்கள் பற்றியும் பண்டைய ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.
இதில் கிருகயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் என்றும், திரேதாயுகத்திற்கு 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் என்றும், துவாபரயுகத்திற்கு 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள், தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் எனறும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகத்தில் 5,110 ஆண்டுகளே முடிந்துள்ளது.
மேற்கூறிய 4 யுகங்களிலும் கலியுகம் மிகச் சக்தி வாய்ந்தது. கலி என்றால் சனி. கலியுகம் என்றால் சனியுகம் என்றும் நம்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடந்து வரும் அசம்பாவிதங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பூமிப்பகுதியை கடல் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். அடுத்தடுத்து சுனாமி வரும்.
கலியுகத்தில் மக்களின் மனநிலை எப்படியெல்லாம் மாறும், மனசாட்சிக்கு இல்லாமல் ஒருவரை ஒருவர் அழித்து வாழ்வது என்பது பற்றி சில வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment