Monday, February 14, 2011

காரி நாயனார்

காரி நாயனார்
திருக்கடவூரிலே, தமிழ்மொழியிலே மிகவல்ல காரி நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சொல்விளங்கப் பொருண் மறைந்து கிடக்கும்படி தம்பெயரினாலே தமிழ்க் கோவை பாடி, தமிழ்நாட்டு மூவேந்தரிடத்துஞ்சென்று, அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விளங்கச் சொல்லி அவர்களிடத்திற்பெற்ற திரவியங்களைக்கொண்டு, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவித்தும், சிவனடியார்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுத்து, அவர்களிடத்திற்பெற்ற திரவியங்களைக் கொடுத்தும், திருக்கைலாசமலையை மறவாத கருத்தினராகி, உலகமெங்குந் தம்முடைய சிவகீர்த்தியை நிறுத்தி, பரமசிவனது திருவருளைப் பெற்று, மனம்போல உடம்புந் திருக்கைலாசமலையை அடையப்பெற்றார்.




No comments:

Post a Comment