யோகங்கள்
எல்லா அதிருஷ்டங்களும் துரதிஷ்டங்களும் நமது முன் ஜன்ம வினைப்பயனே! இந்த வினைப்பயன்களைச் சரிவர நடத்துவது நமது கோள்கள் தான். அந்தக்கோள்களையும் நடத்திவைப்பது அந்த இறைவன்தான்.
கடவுளின் அருள் இருக்க வினைப்பயன்களும் மாற வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமைகள் அனைத்தும் கண்களுக்குத்தெரியாத ஒரு சக்தியின் மூலமே நடக்கிறது சின்னப்பூச்சியிலிருந்து ஆறறிவு மனிதன் வரை அவனது திருவிளையாடல் நடந்து வருகிறது. அதிலிருந்து தப்பவே முடியாதா என்று கேட்கலாம். இதிலிருந்து தப்ப அந்தச்சக்தியை உணர்ந்து போற்றி, சமர்ப்பணம் செய்து, எல்லா காரியங்களையும் அவன் நடத்திக்கொடுப்பதுப் போல் உணர்ந்தால் வாழ்க்கையின் நிலமை மாறும் . தவிர பரிகாரம் என்ற ஒன்றும் மிகவும் சிரத்தையாகச் செய்ய நாம் தீமையிலிருந்து விடுபட முடியும்.
ஜோசியத்தில் முக்கியமான ஒன்பது யோகங்கள் உண்டு. ராஜ யோகம், பாத்திர யோகம், ஹம்ஸ யோகம், ருசுக யோகம், அனபயோகம், சுனப யோகம், மாளவி யோகம், சக்கர்யோகம், கஜகேசரி யோகம்.
யோகம் என்றால் இரு கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை. அவைகள் இருக்கும் இடங்கள் ,,.இவைகளைக்கொண்டுச் சொல்லப்படுகிறது.
இந்த யோகங்களில் ஜாதகருக்கு எந்தப் பலனையும் கொடுக்காமல் சக்தியை இழக்க வைக்கும் ஒரு யோகம் "காலசர்ப்ப யோகம்" அதாவது ராகு கேது இருவருக்கும் இடையே மற்ற கிரகங்கள் மாட்டிக்கொண்டு விட்டால் "காலசர்ப்ப யோகம்" வந்துவிடுகிறது.
நடுவில் இருக்கும் கிரகங்கள் உச்சமாக இருந்தாலும் சரி ஆட்சியாக இருந்தாலும் சரி அவைகளின் சக்தி சிறிது குறைந்து விடுகிறது. இதனால் கிடைக்க வேண்டிய முழுபலன்கள் கிடைப்பதில்லை. இந்த ஜாதக அமைப்பில் முப்பது வயதுக்கு மேல் நல்ல பலன் கிடைக்கும் நல்ல யோகம் கிட்டும். ஆனால் இவர்கள் ஆரம்ப வயதில் கொஞ்சம் போராட்டம் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.
இது அமைந்திருக்கிற லக்னத்தைப் பொருத்தும் நடந்துவரும் தசாபுக்திகளைக்கொண்டும் தெரிந்துக்கொள்ள முடியும்.
கிரகங்களில் ராகு மிகவும் வலிமையானவர். கொடுக்கும் நேரம் வந்தால் அதிருஷடம் இவரால் கூரையைப் பொத்துக்கொண்டு வரும். அதேபோல் பெரிய பணக்காரனை ஓட்டாண்டியாக்கவும் அவருக்கு முடியும். அப்படிப்பட்ட ராகு ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமைந்துவிட்டால் ஆண்டியும் அரசனாவான்.
இந்தக்காலசர்ப்ப தோஷத்திற்கும் ஜாதகத்தில் 2, 5, 7, 8 போன்ற இடத்தில் நின்று ராகு கெட்டிருந்தாலும் பரிகாரம் செய்ய வேண்டிய இடம் திருநாகேச்வரம். காளஹஸ்தி, திருப்பாம்புரம் காஞ்சிபுரத்தில் இருக்கும் மஹாகாளேச்வர் கோயில் போன்ற இடங்கள்.
எல்லா அதிருஷ்டங்களும் துரதிஷ்டங்களும் நமது முன் ஜன்ம வினைப்பயனே! இந்த வினைப்பயன்களைச் சரிவர நடத்துவது நமது கோள்கள் தான். அந்தக்கோள்களையும் நடத்திவைப்பது அந்த இறைவன்தான்.
கடவுளின் அருள் இருக்க வினைப்பயன்களும் மாற வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமைகள் அனைத்தும் கண்களுக்குத்தெரியாத ஒரு சக்தியின் மூலமே நடக்கிறது சின்னப்பூச்சியிலிருந்து ஆறறிவு மனிதன் வரை அவனது திருவிளையாடல் நடந்து வருகிறது. அதிலிருந்து தப்பவே முடியாதா என்று கேட்கலாம். இதிலிருந்து தப்ப அந்தச்சக்தியை உணர்ந்து போற்றி, சமர்ப்பணம் செய்து, எல்லா காரியங்களையும் அவன் நடத்திக்கொடுப்பதுப் போல் உணர்ந்தால் வாழ்க்கையின் நிலமை மாறும் . தவிர பரிகாரம் என்ற ஒன்றும் மிகவும் சிரத்தையாகச் செய்ய நாம் தீமையிலிருந்து விடுபட முடியும்.
ஜோசியத்தில் முக்கியமான ஒன்பது யோகங்கள் உண்டு. ராஜ யோகம், பாத்திர யோகம், ஹம்ஸ யோகம், ருசுக யோகம், அனபயோகம், சுனப யோகம், மாளவி யோகம், சக்கர்யோகம், கஜகேசரி யோகம்.
யோகம் என்றால் இரு கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை. அவைகள் இருக்கும் இடங்கள் ,,.இவைகளைக்கொண்டுச் சொல்லப்படுகிறது.
இந்த யோகங்களில் ஜாதகருக்கு எந்தப் பலனையும் கொடுக்காமல் சக்தியை இழக்க வைக்கும் ஒரு யோகம் "காலசர்ப்ப யோகம்" அதாவது ராகு கேது இருவருக்கும் இடையே மற்ற கிரகங்கள் மாட்டிக்கொண்டு விட்டால் "காலசர்ப்ப யோகம்" வந்துவிடுகிறது.
நடுவில் இருக்கும் கிரகங்கள் உச்சமாக இருந்தாலும் சரி ஆட்சியாக இருந்தாலும் சரி அவைகளின் சக்தி சிறிது குறைந்து விடுகிறது. இதனால் கிடைக்க வேண்டிய முழுபலன்கள் கிடைப்பதில்லை. இந்த ஜாதக அமைப்பில் முப்பது வயதுக்கு மேல் நல்ல பலன் கிடைக்கும் நல்ல யோகம் கிட்டும். ஆனால் இவர்கள் ஆரம்ப வயதில் கொஞ்சம் போராட்டம் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.
இது அமைந்திருக்கிற லக்னத்தைப் பொருத்தும் நடந்துவரும் தசாபுக்திகளைக்கொண்டும் தெரிந்துக்கொள்ள முடியும்.
கிரகங்களில் ராகு மிகவும் வலிமையானவர். கொடுக்கும் நேரம் வந்தால் அதிருஷடம் இவரால் கூரையைப் பொத்துக்கொண்டு வரும். அதேபோல் பெரிய பணக்காரனை ஓட்டாண்டியாக்கவும் அவருக்கு முடியும். அப்படிப்பட்ட ராகு ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமைந்துவிட்டால் ஆண்டியும் அரசனாவான்.
இந்தக்காலசர்ப்ப தோஷத்திற்கும் ஜாதகத்தில் 2, 5, 7, 8 போன்ற இடத்தில் நின்று ராகு கெட்டிருந்தாலும் பரிகாரம் செய்ய வேண்டிய இடம் திருநாகேச்வரம். காளஹஸ்தி, திருப்பாம்புரம் காஞ்சிபுரத்தில் இருக்கும் மஹாகாளேச்வர் கோயில் போன்ற இடங்கள்.
No comments:
Post a Comment