Monday, February 7, 2011

பிடிக்காதது நடந்துவிட்டதா?

பிடிக்காதது நடந்துவிட்டதா? இதோ! ஒரு எளிய பரிகாரம்

நம் வாழ்வில், நமக்கு பிடிக்காத சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. அப்படி நடந்து, அவற்றுக்கு பரிகாரம் செய்யாமல் விட்டுவிட்டால், அதற்கும் தண்டனை உண்டு என்கிறது சாஸ்திரம். இதற்கு ஒரு கதையே இருக்கிறது. சததனு என்ற மன்னன் இருந்தான். அவனுடைய மனைவி சைப்யை. கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்பவள். இவர்கள் ஒருநாள் உலா செல்லும் போது, எதிரே ஒருவன் வந்தான். அவன் அவர்களது
குலகுருவுக்கு நண்பன். ஆனால், எந்த தர்மத்தையும் கடைபிடிக்காத மகாகெட்டவன். கெட்டவர்களைப் பார்ப்பதே கேடு என்று நம்பிய காலம் அது. குருவின் நண்பன் என்பதால் சததனு அவனைப் பார்த்து "சுகமாக இருக்கிறீர்களா?' என நலம் விசாரித்து விட்டு சென்றான். அவனுடன் வந்த சைப்யையோ, அவனைப் பார்த்ததனால் ஏற்பட்ட பாவம் தீர, மூன்றே மூன்று எளிய பரிகாரங்களை அந்த இடத்திலேயே செய்தாள். என்ன தெரியுமா? சுட்டெரிக்கும் சூரியனை அண்ணாந்து பார்த்தாள். நிலத்தைக் குனிந்து பார்த்தாள். அங்கே நின்ற ஒரு பசுவைப் பார்த்தாள். அவளது பாவம் நீங்கிவிட்டது. சூரியன் பாவங்களை சுட்டெரித்தது. பூமி அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட கோபத்தை தடுத்து, பொறுமையைத் தந்தது. பசுவிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் அவளுக்கு அருள் செய்தனர்.
இதனால், அவள் மறுபிறவியிலும் இளவரசியாகவே பிறந்தாள். மன்னன் அதை பெரிதுபடுத்தாமல் போய்விட்டான். அதன் விளைவு, நல்லவனாக இருந்தும் அடுத்த பிறவியில் மிருகமாகப் பிறந்தான். இந்தக் காலத்தில் இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டிய நிலை நம் எல்லோருக்குமே இருக்கிறது...அப்படித்தானே!

No comments:

Post a Comment