Saturday, February 12, 2011

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?


சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

கோயிலுக்கு கிளம்பும் முன் இதை வாசியுங்க!

கோயிலில் மூலவருக்கோ, பிரகாரத்திலுள்ள மற்ற சுவாமிகளுக்கோ அபிஷேகம் செய்யும் போது உட்பிரகாரத்தில் வலம் வருவது கூடாது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி நாளில் வில்வ இலைகளைப் பறிக்கக்கூடாது. அங்கவஸ்திரம், துண்டு ஆகியவற்றை தோளில் இருந்து எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். கொடி மரம், நந்தி, பலிபீடம், கோபுரம் நிழல்களை மிதிப்பது கூடாது. நந்திக்கு குறுக்கே செல்லக்கூடாது. பிரகாரத்தை வலம் இடமாகச் சுற்றிக் கொண்டு போகக் கூடாது. கோயிலுக்குள் வீண்கதைகளையோ, தகாத வார்த்தைகளையோ பேசக்கூடாது. கோயிலுக்குள் தூங்குவது கூடாது. விளக்கில்லாத போதோ, திரையிட்டிருக்கும் போது தெய்வங்களை வணங்குவது கூடாது. கோயிலுக்குச் சென்று திரும்பியதும் கால் கழுவக் கூடாது. சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி முன்பு அமைதியாக வணங்க வேண்டும். கைதட்டுதல், நூலைப் போடுதல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது.





No comments:

Post a Comment