Monday, February 14, 2011

சோமாசிமாறநாயனார்

சோமாசிமாறநாயனார் புராணம்


அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்
அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்
உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்
உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்
நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்
நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே
இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

சோழமண்டலத்திலே, திருவம்பரிலே, பிராமணகுலத்திலே சோமாசிமாறநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபித்தலை நித்திய நியமமெனக் கொண்டவர் எந்தக் குலத்தினராயினும், எந்தக் குணத்தினராயினும், பரமசிவன் மேல் அன்புடையவர்களாயின், அவர்களே நம்மை ஆள்பவர் என்னும் மெய்யறிவினையுடையவர் அவ்வன்பர்கள் தம்முடைய வீட்டுக்கு எழுந்தருளிவந்தால், அவர்களை எதிர் கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர். பரமசிவனுக்குப்பிரீதியாகிய யாகங்களை, புகழ் பயன் முதலியன கருதாது நிஷ்காமியாக வேதவிதிப்படி செய்பவர், அவர் திருவாரூரிற் சென்று, சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்திநாயனாரை அடைந்து, அவருடைய திருவடிகளிலே பக்தி பண்ணி, அதனாலே சிவபதத்தைப் பெற்றார்.





No comments:

Post a Comment