Tuesday, February 15, 2011

முழுநீறுபூசியமுனிவர் புராணம்

முழுநீறுபூசியமுனிவர் புராணம்


கற்பமநு கற்பமுப கற்ப மென்றிக்
கடனணைந்த திருநீறுங் கனற்க ணீறும்
பொற்புடைய வரனாசா னங்கி யாறு
பொல்லாத பூமியெதிர் புனைத லாகா
வற்புதமாந் திரிபுண்ட மதியின் பாதி
யகிலாங்கத் தீபமிகு மழகார் வட்ட
முற்பொலிய வுடலணியு முறையா ரன்றோ
முழுநீறு பூசவல்ல முனிவர் தாமே.

உற்பத்தியினாலே கற்பம் அநுகற்பம் உபகற்பம் என மூவகைப்படும். விபூதியையாயினும், நித்தியாக்கினியில் எடுத்த விபூதியையாயினும் சிவபெருமான் முன்னும் அக்கினிமுன்னும் குருமுன்னும் அசுத்தநிலத்தும் வழி நடக்கும்போதும் பூசாது, உத்தூளனம் திரிபுண்டரம் பிறைவடிவம் முக்கோணம் வட்டமாகச் சிவாகமவிதிப்படி அன்போடு பூசுகின்றவர்கள் முழுநீறுபூசிய முனிவரென்று சொல்லப்படுவார்கள்.



No comments:

Post a Comment