Monday, February 14, 2011

செருத்துணைநாயனார்

செருத்துணைநாயனார் புராணம்

இரைத்தணையார் புனற்பொன்னி மருத நன்னாட்
டெழிலாருந் தஞ்சைநக ருழவ ரேத்துஞ்
செருத்துணையார் திருவாரூர் சேர்ந்து வாழ்வார்
செல்வமிகும் பல்லவர்கோன் றேவி வீழ்ந்த
மருத்துணையார் மலரெடுத்து மோப்பக் கண்டு
வனமலிபூங் கத்தியா லவண்மூக் கீர்ந்த
கருத்துணையார் விறற்றிருந் தொண்டினையே செய்து
கருதலரு மமருலகங் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, மருகனாட்டிலே, தஞ்சாவூரிலே வேளாளர் குலத்திலே, சைவசிரோமணியாகிய செருத்துணை நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருவாரூரை அடைந்து, காலந்தோறும் வன்மீகநாதரை வணங்கித் திருத்தொண்டுகள் செய்துகொண்டிருந்தார். இருக்கு நாளிலே. அங்கே சுவாமி தரிசனஞ் செய்யவந்த கழற் சிங்கநாயனாருடைய மாதேவி பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தாள் என்று நினைத்து, கத்தியினாலே அவளுடைய மூக்கை அரித்தார். பின்னும் நெடுங்காலத் திருத்தொண்டின் வழி நின்று சிவபதத்தை அடைந்தார்.



No comments:

Post a Comment