Monday, February 14, 2011

திருக்குறிப்புத்தொண்டநாயனார்

திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணம்

கொந்தலர்பூம் பொழிற்கச்சிநகரே காலிக்
குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்து ளார்பால்
வந்திறைவர் நமக்கின்று தாரீ ராகின்
வருந்துமுட லெனவாங்கி மாசு நீத்த
கந்தைபுல ராதொழிய மழையு மாலைக்
கடும்பொழுதும் வரக்கண்டு கலங்கிக் கன்மேற்
சிந்தமுடி புடைப்பளவிற் றிருவே கம்பர்
திருக்கைகொடு பிடித்துயர்வான் சேர்த்தி னாரே.

தொண்டைமண்டலத்திலே, காஞ்சீபுரத்திலே, ஏகாலியர் குலத்திலே, சிவனடியார்களுடைய திருக்குறிப்பையறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்பையறிந்து அவர்களுக்கு தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்புத்தொண்டர் எனப்பெயர் பெற்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகுந்த விருப்பத்தோடு சிவபத்தர்களுக்கு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்து வருங்காலத்திலே, ஏகாம்பர நாதசுவாமி குளிர்காலத்தில் ஒரு சிவபத்தர் வேடங்கொண்டு மெலிந்த சரீரத்தையுடைய ஒரு வறியவர் போலாகி, அழுக்கடைந்த கந்தையுடன் அவரிடத்திற் சென்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வணங்கி, பல உபசார வார்த்தைகளைச் சொல்லி அவருடைய குறிப்பையறிந்து, "உந்தக் கந்தையைத் தந்தருளும்; ஒலித்துத் தருகின்றேன்" என்றார் சிவபத்தர் வேடங்கொண்ட கடவுள். "இந்தக் கந்தை அழுக்கு அதிகமாக ஏறப்பெற்றுத் தகுதியில்லாத தாயிருந்தாலும், குளிர் மிகுதியினால் வருத்த முறுகின்ற படியால் கைவிடுதல் கூடாது. அஸ்தமயனத்திற்கு முன் தருவீராகில், கொண்போய்ச் சீக்கிரம் ஒலித்துக்கொண்டு வாரும்" என்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் 'அடியேன் தாழ்க்காமல் ஒலித்து அஸ்தமயனத்திற்கு முன் கொண்டுவந்து தருகின்றேன்; தந்தருளும்" என்று சொல்ல; சுவாமி "விரைவிலே ஒலித்து உலர்த்தித் தராதொழிவீராயில், இந்தத் தேகத்துக்குத் துன்பஞ்செய்தீர்" என்று சொல்லி, அக்கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.
திருக்குறிப்புத்தெகண்டநாயனார் அதை வாங்கிக்கொண்டு ஒரு குளத்திற்சென்று, முன் சிறிதழுக்குப் போக்கி வெள்ளாவியில் வைத்து, பின் ஒலிக்கப்புகுந்தார். அப்பொழுது பரமசிவனுடைதி திருவருளினாலே நண்பக லொழிந்து பின்பகல்போலத் தோன்றும் படி மேகங்கள் இருண்டு ஆகாயவெளியெல்லாம் மறைத்து மழைபெய்தன. அது கண்டு, திருக்குறிப்புத்தொண்டர் சிவபத்தருக்குத் தாம் வாக்குச் செய்ததை நினைந்து, "இனி நான் யாதுசெய்வேன்" என்று கவலையுற்று. விரைவிலே மழைவிடவுங் கூடுமென்று அங்கே தானே நின்றார். அது விடவில்லை. பின் இராக்காலம் வர, திருக்குறிப்புத்தொண்டர் "குளிரினாலே திருமேனி நடுங்குகின்ற சிவபத்தருக்கு நான்செய்யவிரும்பிய பணிவிடை, ஐயையோ! தவறிப்போயிற்றே" என்று கீழே விழுந்தார். மழைவிடாது; சிவபத்தர் சுட்டிய காலமோ நீங்கிற்று. முன்னேயே ஒலித்தது வீட்டிலே காற்றினல் உலரும்படி கட்டிவிட்டேனுமில்லை. சிவபத்தரது திருமேனி குளிரினால் வருந்தும்படி தீங்குசெய்த சிறியேனுக்கு இனியதுவே செயல்" என்று எழுந்தார். "வஸ்திரங்களைப் புடைக்கின்ற கற்பாறையிலே எனது தலையைச் சிந்தும்படி சர்வவியாபகராகிய பரமசிவனுடைய திருக்கரம் அந்தக் கற்பாறையின் பக்கத்திலே தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது ஆகாயத்தினின்று சொரிந்த நீர்மழை நீங்கிப் பூமழை பொழிந்தது. பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய்க் காட்சி கொடுத்தருளினார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் மிகுந்த அன்பினோடு விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சலி செய்துகொண்டு நின்றார். பரமசிவன் அவரை நோக்கி, "உனது பத்திவலிமையை மூவுலத்தர்களுக்குந் தெரிவித்தோம். இனி நீ நம்முடைய உலகத்தையடைந்து பேரின்பம் பெற்று வாழ்ந்திரு" என்று திருவருள் புரிந்து சென்றருளினார்.














No comments:

Post a Comment