Monday, February 7, 2011

கடவுளுக்கு நெருக்கமாவது எப்படி? -

கடவுளுக்கு நெருக்கமாவது எப்படி? -
* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.
* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும்; எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது.
* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.
* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடி யாகச் செய்வது சிறந்தது. பிறருக்காக வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான்

No comments:

Post a Comment