Tuesday, February 22, 2011

பகவத்கீதையில் உணவு.

பகவத்கீதையில் உணவு.

ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்
குன்றா நலனும் உடல் வலிவும்,
இனிமை, கனிவு, இவற்றை நல்கும்
உணவே ஸாத்விகர் நாடுவதாம்.

கசப்பு, புளிப்பு, உவர்ப்பாம் இவற்றொடு
சூடுகாரம் உறைப்புகளும்
எரிச்சல் துன்பம் நோய்தரும் பாங்குள
உணவே ராஜஸர் நாடுவதாம்.

காலம் கடந்தும் சுவையிலா உணவும்
நாற்றம் வீசும் பழையனவும்
எச்சில் உணவும் அசுத்த உணவும்
தமோ குணத்தார் வேண்டுவதாம்.

No comments:

Post a Comment