Saturday, February 12, 2011

கோபம் எதனால் தோன்றுகிறது


கோபம் முதலானவை எதனால் தோன்றுகின்றன? எப்படி அழிகின்றன? என்ற வினாவிற்கு பீஷ்மர் தந்த பதில்

கோபம்,மோகம்,காமம்,சோகம், பிறருக்குத் தீங்கு செய்ய எண்ணும் எண்ணம் ஆகியவை உயிர்களுக்குப் பலமான வைரியாகும்.இவை மனிதர்களைச் செந்நாய்கள் போலச் சூழ்ந்து அழிக்கும்.துன்பத்திற்கு இவைதாம் காரணம் என உணர்தல் வேண்டும்.இவை பற்றி விரிவாகக் கூறுகிறேன் கேட்பாயாக..

கோபம் பேராசையில் இருந்து தோன்றுகிறது.பொறுமையால் அது அழியும்.புலனடக்கம் இன்மையால் காமம் உண்டாகிறது.மனிதன் அறிவு பெற்று வெறுப்புக் கொள்வானாயின் அப்போது காமம் அழியும்.மோகம் அறியாமையால் உண்டாகிறது.அறிஞர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் அது அழியும்.பொருள் மீது கொண்ட ஆசை விலகுமாயின் அப்பொருளை இழத்தலால் ஏற்படும் சோகம் விலகும்.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் கோபத்தாலும்,பேராசையாலும் உண்டாகும்.அவற்றுள் கோபத்தால் உண்டாவது உயிர்களிடத்துத் தோன்றும் அன்பால், அருளால் அழியும்.பேராசையால் தோன்றுவது அறிஞரின் தத்துவ உபதேசத்தால் அழியும்' என்றார் பீஷ்மர்

No comments:

Post a Comment