Saturday, February 26, 2011

ஆமை என்பது ஒரு அவதாரம். தசாவதாரத்தில் ஒரு அவதாரம் ஆமை. ரமணர் போன்ற பெரிய சித்தர்களெல்லாம் ஆமை போல அடங்கியிரு என்பார்கள். ஐம்புலன்களும் ஆமை போல அடக்கமாக இருக்க வேண்டும். சலனமோ, சத்தமோ, ஆபத்தோ என்றால் தன்னுடைய உடல் உறுப்புகளை அந்த ஓட்டிற்குள் ஒடுக்கிக்கொள்ளும்.

அப்படிப்பட்ட ஆமை ஒரு இடத்திற்கு வருகிறதென்றால் அவர்கள் கொஞ்சம் ஒடுங்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். தெய்வத்தினுடைய வருகை ஒடுங்கும். ஆயுள் ஒடுங்கும். இதுபோன்ற சில விஷயங்களும் ஒடுங்கும். அதற்காகத்தான் அதுபோலக் குறிப்பிடப்படுகிறது.
அதனால்தான் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள். அமீனா என்பவர் நீதிமன்ற உத்தரவுப் படி வீட்டை காலி செய்பவர். இந்த இரண்டு பேருடைய வரவும் வீட்டிற்கு இருக்கக்கூடாது என்பார்கள். இதெல்லாம் ஒரு அறிகுறி என்று சொல்லலாம். ஆமை புகுந்தால் செல்வங்கள் குறையும், சொத்துக்கள் விற்கும்படி ஆகும். கஷ்டங்களைக் கொடுக்கும். செளகரியத்தைக் கெடுக்கும்



No comments:

Post a Comment