Thursday, February 3, 2011

சாப்பிடும் திசையும் பலன்களும்

சாப்பிடுவதற்கு ஏற்ற திசை

ஒருநாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறோம். ஆனால், சாஸ்திரப்படி இருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் பாதி வயிறு உணவும், கால்வயிறு நீரும், கால்வயிறு காலியாகவும் இருப்பதே ஆரோக்கியமான உணவு முறை என்று கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். யோகிகள் ஒருவேளை உணவு சாப்பிடுவர். இருவேளை உணவு உண்பவன் போகி(அனுபவிக்கப் பிறந்தவன்). மூன்றுவேளை உணவு உண்பவன் ரோகி(நோயாளி). இன்னும் நான்கு, ஐந்துவேளை சாப்பிடுபவர்களைப் பற்றி சாஸ்திரங்கள் குறிப்பிடவில்லை. இனிமேல் நாம் தான் பெயரிடவேண்டும். சாப்பிடுவதோடு சாப்பிடும் திசைக்கேற்பவும் பலன்கள் உண்டாகின்றன. கிழக்கு நோக்கி சாப்பிட ஆயுள் விருத்தியாகும். மேற்கு நோக்கி உணவு உண்டால் செல்வம் பெருகும். தெற்கு நோக்கி அமர்ந்தால் புகழ் வளரும். வடக்கு நோக்கி தொடர்ந்து சாப்பிட்டால் நோய் உண்டாகும்.

No comments:

Post a Comment