Tuesday, February 15, 2011

சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார் புராணம்

சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார் புராணம்


பாரணவும் புலனந்தக் கரண மொன்றும்
படராமே நடுநாடி பயிலு நாதங்
காரணபங் கயன்முதலா மைவர் வாழ்வுங்
கழியுநெறி வழிபடவுங் கருதி மேலைப்
பூரணமெய்ப் பரஞ்சோதிப் பொலிவு நோக்கிப்
புணர்ந்தணைந்த சிவாநுபவ போக மேவுஞ்
சீரணவு மவரன்றோ வெம்மை யாளுஞ்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ளாரே.

உச்சுவாசம் நிச்சுவாசம் இரண்டையும் அடக்கி, சுழுமுனா மார்க்கத்திலே பிராணவாயுவை நிறுத்தி, விஷயங்களின் வழி மனசைப் போகவொட்டாமல் திருப்பி, ஒரு குறிப்பிலே நிறுத்தி, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை யென்னும் ஆறாதாரங்களின் அந்தர்மாதிருகாக் கிரமத்தை அறிந்து, அவ்வவ்வாதாரங்களின் அதிதேவதைகளைத் தியானித்து, அவ்வாறாதாரங்களினும் அசபாசத்தி சிவான் மிகையாய் நிற்கும் முறைமையைப் பார்த்து, மூலாதாரந் தொடங்கி விநாயகர் முதலாகிய தேவதைகளைப்பொருந்தி அபிமுகம் பண்ணிக்கொண்டு ஆறாதாரத்துக்கும் மேலாகிய பிரமரந்திரமளவும் அசபையுடன் சென்றணைந்து, அந்தப் பிரமரந்திரத்திலே அதோ முகமாய்ச் சகஸ்ரதளமாய் இருக்கிற தாமரை முகையைச் சோதி சோதிபதோச்சாரணத்தாலே உதிக்குஞ் சிவார்க்கனாலே அலரச்செய்து, அந்தத் தாமரைப் பூவின் கேசராக்கிரத்திலே உள்ள சந்திரமண்டலத்தை ஆகுஞ்சனஞ்செய்தலினாலே மூலாக்கினியை அக்கினிபீசாக்கர உச்சாரணத்தினாலே எழுப்பி, நாடிசக்கரத்தைப் பேதித்து, அவ்வக்கினியினாலே சந்திரமண்டலத்தை இளகப்பண்ணி, அந்த அமிர்தத்தைச் சர்வநாடிவழியாக நிரப்பி, அவ்விடத்தில் உண்டாகிய சுகோதயத்தில் அந்தமயமான ஞானாமிதாவத்தையை அடைந்து நின்று, சோம சூரியாக்கினிப்பிரகாசாதிகளாகிய பிரத்தியேகப் பிரகாசங்ளெல்லாஞ் சூரியோதயத்திலே நக்ஷத்திராதிப்பிரகாசங்கள் அடங்கினாற்போலத் தன்னிடத் தடங்கச் சர்வதோமுகமாய் ஸ்வய பரப்பிரகாசமாய் இருக்கின்ற பூரணப்பிரகாசத்தைப் பாவிக்கின்றவர்களே சித்தத்தைச் சிவன்பாலே வைத்தாரென்று சொல்லப்படுவார்கள்.



No comments:

Post a Comment