Wednesday, February 9, 2011

வள்ளுவர் வாக்கு

வள்ளுவர் வாக்கு
அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை
பிறிதொரு உயிரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கொள்ளாத இடத்தில் அறிவினால் ஆகும் பயன் தான் ஏதும் உண்டா!
ஒருசிறிய எடுத்துக்காட்டு என்னவெனில், ஊரே வியக்கும் வண்ணம் மிகப்பெரிய வீடுகட்டி அந்தஸ்தில் தான் எத்தகையவன் என்று உற்றாருக்கும் ஊருக்கும்
எடுத்துக் காட்டும் மனிதர்கள், கடும் மழையில் சிறு நாய்க் குட்டி அந்த
வீட்டின் ஒரு ஓரத்தில் ஒதுங்கினால் அடித்து விரட்ருவார்கள். வாழ
இடமில்லாமல் அலையும் ஒரு ஜீவன் தானே என்ற ஒரு சிறிய பரிவு கூட இந்தமனிதர்களிடம் இருக்கவில்லையெனில் இவர்களது அறிவு இந்த சமூகத்திற்க்கு என்னநன்மையைச் செய்து விடப்போகிறது!

No comments:

Post a Comment