Thursday, April 21, 2011

காயத்ரி மந்திரத்தின் மகிமை

காயத்ரி மந்திரத்தின் மகிமை
வசிஷ்டரிடம் சவால் விட்டு ராஜரிஷிப்பட்டம் பெற்ற க்ஷத்திரியர் விஸ்வாமித்திரர்.அவரால் இந்த பூமிக்குக் கிடைத்ததுதான் காயத்ரி மந்திரம்.
காயத்ரிதேவி ஐந்துமுகங்களுடன் சூரிய மண்டலத்தின் மத்தியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறாள்.உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தும் ஓம் என்ற ஓம்கார மந்திரத்திலிருந்தே தோன்றின.
புதிய பிரபஞ்சத்தையே உருவாக்கிடும் சக்தி காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.எல்லாவிதமான சமஸ்க்ருத மந்திரங்களுக்கும்,ஒவ்வொரு கடவுள்களின் காயத்ரி மந்திரத்துக்கும் சக்தி தருவது காயத்ரி மந்திரமே.

இந்த காயத்ரி மந்திரத்தை வீட்டில் ஜபித்தாலே அளவற்ற புண்ணியம் உண்டாகும்.
கடலோரம்,அரசமரத்தடியில், பசுக்கள் இருக்கும் கொட்டகையில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபித்தால் அதன் பலன்கள் ஏராளம்.
ஏதாவது ஒரு அம்பாள் சன்னதியில் ஜபித்தால்(மனதுக்குள் சொன்னால்)அதனால் கிடைக்கும் பலன்களை கூறவே ஒரு வருடம் ஆகும்.எல்லா அம்பாளும் அன்னை காயத்ரிதேவியின் அம்சமாகும்.

No comments:

Post a Comment