Monday, April 25, 2011

கலியுகம் எப்படி இருக்கும்?




கலியுகம் எப்படி இருக்கும்?



























கலியுகத்தில் என்னென்ன நடக்கும், மக்கள் எப்படி இருப்பார்கள், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கண்ணன் கூறியுள்ளார்."மனிதர்கள்எல்லாவற்றையும்அடையவேண்டும் என வெறியுடன் இருப்பார்கள். பணத்தாசையுடன் அலைவர். துறவிகள்கூட பணத்திற்காகத் தவறுகள் செய்வார்கள். ஆண்கள் மனைவிக்கு மட்டும் கட்டுப்பட்டு பெற்றோரை உதாசீனம் செய்து தூஷிப்பார்கள். மனைவிவழி
உறவினர்களிடம் மட்டுமே உறவாடுவார்கள். திருமணத்தில் முறை இருக்காது. சிறிதளவு சொத்துக்குக்கூட உறவினர் களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். ஒருவருக் கொருவர் கெடுதல் செய்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.கலியுகத்தில்இப்படிச் செய்த பாவங்கள் விலக வேண்டுமானால், கிருத யுகத்தில் கடுமையான தியானத்தாலும் யோக நிஷ்டை யாலும் பெற்ற புண்ணியத்தை- திரேதா யுகத்தில் யாகங்கள் செய்வ தன் மூலம் கிடைத்த புண்ணி யத்தை- துவாபர யுகத்தில் அர்ச்சனாதிபூஜைகள் செய்ததன் மூலம் கிடைத்த புண்ணியத்தை கலியுகத்தில் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தும், கண்ணன் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயும் சிறிதளவு பிரயாசை யாலேயே அடைந்துவிடலாம்.ஆனால்,சிலரைத்தவிரபெரும்பாலோர்நன்னடத்தையில்லாமல், பொய், சூது, கொலை, கொள்ளை,வஞ்சனை, சோம்பல், தூக்கம், அளவற்ற சாப்பாடு, பணவெறி, மனைவி சொல் கேட்டல்,பெற்றோ ரைப் புறக்கணித்தல் போன்ற விபரீதங்கள் நிறைந்த வாழ்க்கையைத்தான் கலியுகத்தில் வாழ்கின்றனர்.இப்படி தர்மம், நீதி, நேர்மை நசிந்து அராஜகம் அதிகமாகும்போது நல்லவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் பகவான் "கல்கி அவதாரம்' எடுப்பார்.

"பரித்ராயண சாதுனாம் வினாசாயச் துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே, யுகே.'

எப்போதெல்லாம்உலகில் அதர் மம் அதிகமாகிறதோ அப்போதெல் லாம் அதனை அழித்து தர்மத்தையும் அமைதியையும் நிலைநாட்ட விஷ்ணு அவதாரம் எடுப்பார்.

No comments:

Post a Comment