Monday, April 25, 2011

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?
விளக்கமளிப்பவர்:தவத்திரு.வேதாத்திரி மகரிஷி அவர்கள்

கணவன்,மனைவி, அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள் சேர்ந்து இருப்பதுதான் குடும்பம் எனப்படுகிறது.
பொருள் ஈட்டும் திறன்,வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக, நிறைவாக நன்கு நடைபெறும்.


குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது.வயது முதிர்ந்தவர்(பெற்றோர்கள்)களால் பொருள் ஈட்ட முடியாது.வாலிபப் பருவத்தினர்தான் உழைத்துப் பொருள் ஈட்ட முடியும். அதை குழந்தைகளும்,முதியோர்களும் கூடித் துய்த்து குறைவின்றி வாழ வேண்டும்.இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது.இந்த இயற்கை நியதியானது பெற்றோர்,மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும் போது அதைத்தான் குடும்பம் என்கிறோம்.
குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்ககி அறத்தை கணவன் மனைவி இருவருமே உயிர் போலக் காக்க வேண்டும்.இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும், செழிப்பும்,இன்பமும் அமையும்.

No comments:

Post a Comment