Thursday, June 30, 2011

ஆன்மிக கதைகள் 111அருகில் வந்த ஐயப்பன்

மணிகண்டனுக்கு நீண்டநாட்களாக சபரிமலைக்குப் போக வேண்டுமென்று ஆசை. அவனுடைய அப்பா, அந்தக் காலத்தில் ஐம்பது தடவைக்கு மேல் மலைக்குப் போனவர். நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த அவர், ""மணிகண்டா! உன்னைப் போலவே எனக்கொரு தங்கமகன் பிறக்க வேண்டும்'' என்று வேண்டினார். கோயில் முகப்பில் மணிகளைக் கட்டி நேர்த்திக்கடனும் நிறைவேற்றி வந்தார். சில ஆண்டுகளிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. "மணிகண்டன்' என்ற பெயரையே சூட்டினார். மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது இறுதிக் காலத்திற்குப் பிறகு, மணிகண்டன் சபரி மலைக்குப் போக எவ்வளவோ முயற்சித்தான். அவன் ஒரு கடையில் தான் வேலை பார்த்தான். கிடைக்கிற வருமானம், குடும்பத்தை ஓட்ட தான் சரியாக இருந்தது. ஐயப்பன் கோயிலுக்குப் போய் வர வேண்டுமானால், ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும். அந்தளவுக்கு அவனுக்கு வசதியில்லை.
ஒருநாள், கடை முதலாளி அழைத்தார். ""டேய்! பத்தனம்திட்டையிலே நம்ம ஏஜன்ட் ஒருத்தர் இருக்காரு. நீ அங்கே போய், நான் கொடுக்கிற இந்த செக்கை கொடுத்துட்டு சரக்கை அனுப்பச்சொல்லிட்டு வந்துடு! நேரில் போனாத்தான் நன்றாக இருக்கும்,'' என்றார்.
பத்தனம்திட்டை வரை போகிற எனக்கு,
கொஞ்சம் தள்ளியிருக்கிற சபரிமலைக்குப் போய் வர நேரம் என்னாகி விடும். நான் விரதம் இருக்கலே! அதனால் என்ன! பதினெட்டாம் படியிலே ஏற முடியாட்டியும், இன்னொரு வாசல் வழியா உள்ளே போகலாமுனு சொல்றாங்களே! எப்படியோ! அந்த ஐயப்பனை ஒரு தடவை பார்த்துட்டா போதும்! ஐயப்பா! நீ தான் எனக்கு வழிகாட்டணும்!'' என்று வேண்டிக்கொண்டான்.
இரண்டு நாள் கழித்து அவன் பத்தனம்திட்டைக்குப் புறப்பட வேண்டும். மணிகண்டனின் மனைவி மஞ்சுளா, அவன் புறப்படுவதற்குரிய ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அத்துடன் கணவனின் நீண்டநாள் ஆசையான சபரிமலை பயணமும் நிறைவேறப் போகிறதே என்று அவளுக்கும் சந்தோஷம்!
மறுநாள் முதலாளி மணிகண்டனை அழைத்தார்.
இவன் பரபரப்புடன் ஓடினான்.
""டேய் மணிகண்டா! எனக்கு நீண்டநாளாக சபரிமலைக்குப் போக வேண்டும் என்று ஒரு ஆசை.
பத்தனம்திட்டைக்கு போக வேண்டியிருக்கு இல்லையா! நானே கிளம்பலாமுனு இருக்கேன்! என்னுடன் நீயும் வா! பத்தனம்திட்டையில் இருந்து கொஞ்சம் போனால் பம்பை வந்துடும். நம்ம காரிலேயே போயிடலாம். வரும் போது சரக்கை காரிலேயே ஏத்திட்டு வந்துடலாம். உதவிக்கு நீ வந்தா தான் சரியாயிருக்கும்,'' என்றார்.
மணிகண்டனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
""ஐயப்பா! பத்தனம்திட்டையில் இருந்து அரக்க பரக்க <உன்னைப் பார்க்க வரவேண்டுமென இருந்தேன். இப்போ, என்னைக் காரிலேயே வர வைத்து விட்டாய். அதிலும் முதலாளி கூட. பைசா செலவு ஆகாது. அவரே எல்லாம் பார்த்துக் கொள்வார். உன் கருணையே கருணை,"" என்று மகிழ்ந்தான்.
அவர்கள் கிளம்பினர். பத்தனம்திட்டையில் சரக்குகளை தயாராக வைத்திருக்குமாறு ஏஜன்டிடம்
சொல்லிவிட்டு சபரிமலைக்குச் சென்றார்கள். ஐயப்பனைப் பார்க்க கடும் கூட்டம் அலை மோதியது. எப்படி வரிசையில் செல்வது எனத்தெரியமால் திண்டாடிய வேளையில், ஒரு போலீஸ்காரர் வந்தார்.
""உங்ககிட்டே இரு முடி இல்லை அல்லவா!
தரிசனத்துக்காகத்தானே வந்தீர்கள்! முன்னாலே வாங்க!' என்று இழுத்துக் கொண்டு போனார். அவர் யாரென்றே தெரியவில்லை. கொஞ்சநேரத்தில் அவர் காணாமல் போய்விட்டார். இவர்கள் சன்னதி எல்கையை அடைந்து விட்டனர். அந்த நேரம் பார்த்து ஒரு கூட்டம் உந்தித்தள்ள இவர்கள் ஐயப்பன் சன்னதி முன் நின்றனர். போலீசார் உந்தித்தள்ளியவர்களை ஒதுங்கச் சொல்லி பந்தோபஸ்து செய்யவே, இவர்களுக்கு இரண்டு நிமிடம் ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
வாழ்க்கையில் பெற்ற பெரும்பேறாகக் கருய அவர்கள், முதலாளி, தொழிலாளி என்பதை மறந்து கோரசாக "சுவாமியே சரணம் ஐயப்பா' என முழங்கினர். ஐயப்பன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment