Thursday, July 28, 2011

கண்ணனின் அருள் கிடைக்க வேண்டுமா?

கண்ணனின் அருள் கிடைக்க வேண்டுமானால் அவன் அருளிய கீதையையும், அவரது லீலா வினோதங்களைக் குறித்து எழுதப்பட்ட ஸ்ரீமத்பாகவதம், ஆண்டாள் எழுதிய திருப்பாவை, ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அவற்றைப் படிப்பவர்கள் கிருஷ்ண உணர்வை வெகுவிரைவில் எட்டி விடுவார்கள். கிருஷ்ணன் கோயிலுக்குச் செல்லும் போது, வெறுங்கையுடன் செல்லாமல், முடிந்த அளவுக்கு தீபமேற்ற எண்ணெய், மலர்கள், பழவகை, பாயாசம், வெண்ணெய் அல்லது நெய்யில் செய்த பண்டங்களை எடுத்துச் செல்ல வேண்டும். பகவத்கீதையின் 12ம் அத்தியாயமான பக்தி யோகத்தில், பகவான் எத்தகைய பக்தனை விரும்புகிறான் என்பதைப் பற்றி படிக்க வேண்டும். இதையெல்லாம் படிக்குமளவு கல்வியறிவும், நைவேத்யம் படைக்குமளவு பொருள் வசதியும் இல்லாதவர்கள், ஒரு துளசி இலையை அவனுக்கு அர்ப்பணம் செய்தால் போதும். ஓடிவந்து அருள் செய்வான் சின்னக்கண்ணன்.

No comments:

Post a Comment