Friday, July 15, 2011

பதினாறு வகை உபசாரங்கள்!

பதினாறு வகை உபசாரங்கள்!
இறைவனை வழிபடும்போது பதினாறு வகையான உபசாரங்களைச் செய்கிறோம். அவையாவன:
1. அர்க்கியம் : கை அலம்ப நீர் அளித்தல்.
2. பாத்யம் : பாதங்களை அலம்புவதற்கு நீர் கொடுத்தல்.
3. ஆசமநீயம் : மும்முறை மந்திர நீர் அருந்துவது.
4. ஆசனம் : சுவாமி உட்கார ஆசனம் அளிப்பது.
5. அபிஷேகம் : சுவாமி நீராடுதல்.
6. வஸ்திரம் : சுவாமிக்குப் புதுத் துணி உடுத்துதல்.
7. கந்தம் : சந்தனம் போன்ற மணப் பொருட்களை இடுதல்.
8. புஷ்பம் : மலர் சூட்டுதல்.
9. தூபம் : சாம்பிராணிப் புகை.
10. தீபம் : விளக்குக் காட்டுதல்.
11. நைவேத்தியம் : அமுது படைத்தல்.
12. கர்ப்பூரம் : கர்ப்பூர ஆரத்தி செய்தல்.
13. சாமரம் : கவரி வீசுதல்.
14. ஆலவட்டம் : விசிறி சமர்ப்பித்தல்.
15. சத்ரம் : குடை எடுத்தல்.
16. தர்ப்பணம் : கண்ணாடி காட்டுதல்.

No comments:

Post a Comment