Thursday, July 28, 2011

சப்தவிடங்கத்தலங்கள்

சப்தவிடங்கத்தலங்கள் திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ளன. சப்தம் என்றால் ஏழு. டங்கம் என்றால் உளி. வி என்றால் செதுக்காதது. உளியால் செதுக்காத சுயம்பு மூர்த்தங்கள் உள்ள தலங்கள் இல்லை. இந்த ஏழு தலங்களிலும் தியாகராஜரே அருள்பாலிப்பார். அவருக்கு வெவ்வேறு பெயரும், நடனமும் உண்டு.
1. திருவாரூர் - வீதிவிடங்கர் - அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது.)
2. நாகப்பட்டினம் - சுந்தரவிடங்கர் - பாராவாரகரங்க நடனம் (கடல் அலைகள் அசைவதுபோல் ஆடுவது.)
3. திருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குட நடனம் (கோழி நடப்பது போல் ஆடுவது.)
4. திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல் ஆடுவது.)
5. திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம் (நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல் மெல்ல ஆடுவது.)
6. திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்ஸபாத நடனம் (அம்ஸம் என்பது அன்னம், பாதம் என்பது கால், அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.)
7. திருநள்ளாறு - தகவிடங்கர் - உன்மத்த நடனம் (பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல் ஆடுவது.)

No comments:

Post a Comment