Thursday, July 28, 2011

தர்ப்பைப்புல்லின் மகத்துவம் தெரியுமா

சுபகாரியங்களோ அல்லது மற்ற காரியங்களோ எது செய்ய வேண்டுமானாலும், தர்ப்பை அணிவது இந்துமதத்தின் மரபு. தர்ப்பையை வலதுகை மோதிர விரலில் அணியவேண்டும். இதற்காக தர்ப்பையில் மோதிரம் போன்ற வளையம் செய்யப்பட்டிருக்கும். தர்ப்பையின் நுனிப்பகுதிதான் முக்கியமானது. இது மின்காந்தப் பாதையில் வரும் தடைகளை நீக்குகிறது. ஒரு டாக்டர் தர்ப்பையை பரிசோதித்தபோது அது அறுபது சதவிகித எக்ஸ்ரே கதிர் வீச்சுகளை வாங்கிக் கொள்வதைக் கண்டாராம். ஆகவே, தர்ப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தர்ப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது. தர்ப்பை ஒரு வகைப்புல். இதை எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம் என்று எண்ணுவது தவறு. இது தானாக வளர வேண்டும். அனேகமாக இந்தியா முழுவதும் இது விளைகிறது.
ஒரு புல்லைக் கொண்டு செய்யும் தர்ப்பம் இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் அமாவாசை தர்ப்பணம் போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தர்ப்பம் கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுகின்றது. அக்னிகுண்டத்துக்கு நாலுபக்கமும் தர்ப்பை வைக்கப்படுகிறது. சுத்தி புண்யாஹவாசன நேரத்தில் கையில் பிடித்துள்ள தர்ப்பையின் நுனி தண்ணீர் பாத்திரத்தில் பட்டு அதிர்வுகளை மந்திர உச்சாடணத்தோடு சேர்ந்து நீக்குகின்றன. தர்ப்பைப்புல்லை எடுப்பதற்கும் சில மந்திரங்கள் உண்டு. பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்றுதான் இந்த புல்லை சேகரிக்க வேண்டும். தர்ப்பையைக் கொண்டே வேத காலங்களில் தவறான அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தினார்கள் என்பது இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு தெரிய வேண்டிய ஒன்று

No comments:

Post a Comment