Saturday, July 23, 2011

தட்சிணாமூர்த்தி மவுனமானது ஏன்?

பிரம்ம புத்திரர்கள் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் நான்குவேதம், ஆறுசாஸ்திரம், 64 கலைகள், 96 தத்துவங்கள், ஆகமங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தனர். இவ்வளவு கற்றிருந்தும் அவர்களுக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. கயிலைக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். சிவபெருமான் அவர்கள் முன்னே தோன்றி இன்னும் என்ன வேண்டும் எனக்கேட்டார். மனம் அமைதி பெற அருள் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர். அவர்களது வேண்டுகோளின்படி சிவபெருமான் அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் விளக்கிக் கூறினார். சனகாதி நால்வரும் மகிழ்ச்சியுற்று ஞான மார்க்கத்தை போதிக்க வேண்டினர். அதற்கு சிவபெருமான், விளக்கத்தால் உணர்வதல்ல ஞானம் அனுபவத்தால் உணர்வது என்று கூறி, சின் முத்திரை காட்டி தெற்குமுகமாக மவுன நிøயில் கல்லால மரத்தடியில் ஞான சொரூபமாக அமர்ந்தருளினார். அதாவது ஆணவம், கன்மம் (புண்ணிய பாவங்கள்), மாயை (இவ்வுலக வாழ்வே நிலையானது என்ற எண்ணம்) ஆகியவற்றை ஒடுக்கி விட்டால் (விரித்த மூன்று விரல்கள்), சுட்டுவிரலான ஜீவாத்மா (உயிர்கள்) பெருவிரலான பரமாத்மாவை (இறைவன்) அடைந்து விடலாம் என்பதே அவர் போதித்த ஞானத்தில் விளக்கம்.

No comments:

Post a Comment