Friday, July 22, 2011

சிவாலயத்தின் கழுத்தும் நந்தியும்

சிவனது வாகனமாகவும், வாயிற்காப்பாளராகவும் உள்ள நந்தி அவரது கழுத்துப் பகுதியாக குருதப்படுகிறது. சிவாலயத்தில் சிவன் சன்னதியை தலையாக எண்ணிக் கொண்டால், கழுத்துப்பகுதியில் நந்தி இருப்பது தெளிவாகும். தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்தபோது, கயிறாகப் பயன்பட்ட வாசுகி எனும் பாம்பு களைப்பில் தன்னையறியாமல் விஷத்தை கக்கியது. தேலோகத்தை காக்க சிவபெருமான் அவ்விஷயத்தை விழுங்க, கழுத்தைபிடித்த பார்வதி தேவியார் விஷம் உடலில் இறங்காமல் நிறுத்தினார். கழுத்தில் குமிழ் போன்று விஷம் நின்றது. இதுவே, ஆண்களுக்கு தொண்டையில் இருக்கும் குரல் நாணாக இருக்கிறது. அறிவியல் ரீதியாக தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் தைராய்டு, இரு கொம்புகளுடன் உள்ள நந்தி போல இருக்கும். இதன் காரணமாக, சிவன் கோயிலின் கழுத்துப்பகுதியில் நந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

நந்தி ஏன் இறைவனை தாங்குகிறது

இளமை, செல்வம், சுகபோகங்கள் யாவும் நிலையற்றவை. நாம் செய்த நற்செயல்களின் பலன் மட்டுமே என்றும் நம்முடன் வரும். ஒருவனுக்கு தர்மமே உற்ற துணை என்பதை மணிமேகலை காப்பியம் அறமே மிக்க விழுத்துணையாவது என சிறப்பித்துக் கூறுகிறது. திருவள்ளுவரும் அறத்தால் வருவதே இன்பம் என்று உண்மையான இன்பம் தர்மத்தாலேயே உண்டாகும் என்று குறிப்பிடுகிறார். ஆகவே, வாழ்நாளை வீணாக கழிக்காமல், தர்மம் செய்து பயனுள்ளதாக கழிக்க வேண்டும். சிவபெருமானை தாங்கும் நந்திதேவர், தர்மத்தின் அம்சம் என்பதால் அதற்கு அறவிடை என்றும் பெயருண்டு. விடை என்றால் காளை. ஆக கடவுளையே தாங்கும் பேறு தர்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒருவன் தர்மத்தை காப்பானேயானால் தர்மம் அவனைக் காக்கும். இதனை தர்மோ ரக்ஷதி: தர்மம் ரக்ஷித: என்பார்கள். இதிலிருந்து தர்மத்தை பாதுகாப்பவர்கள் தன்னையே காத்தவர்களாகிறார்கள்.

No comments:

Post a Comment