Tuesday, July 26, 2011

பலிபீடம்

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரத்திற்கு முன்னதாக உள்ள பலிபீடத்தை தொடாமல் வணங்க வேண்டும். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவு, இந்த பீடத்தில் வைக்கப்படும். இவ்விடம் சுத்தமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, நம் மனதாலும், உடலாலும் செய்த பாவங்களை இந்த இடத்திலேயே பலியிட்டு விட வேண்டும். அவ்வாறு செய்த பின், மீண்டும் அதே தவறைச் செய்ய மாட்டேன் என மனதால் பலிபீடத்தின் முன் சத்தியம் செய்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், நான் கோயில் கோயிலாய் அலைந்தும் பலன் தர மறுக்கிறாயே, சோதனை மேல் சோதனை தருகிறாயே, என புலம்பி பயனில்லை.

No comments:

Post a Comment