Thursday, July 21, 2011

வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், பிரயாணம் கிளம்பும் போதும் சகுனம் பார்த்துத்தான் செல்ல வேண்டுமா?

சகுனம் பார்ப்பது என்பது சாத்திரங்களில் உள்ள விஷயம்தான். ஒரு நல்ல விஷயத்திற்காக நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போது சுமங்கலிப் பெண்கள், மங்கலப் பொருட்கள் போன்றவை எதிரில் வந்தால் காரியம் ஜெயமாகும் என்றும், எண்ணெய், இரும்பு ஆயுதங்கள் போன்ற பொருட்களை எடுத்து எதிரில் யாராவது வந்தால் செல்லும் காரியம் ஜெயமாகாது மற்றும் ரத்தக்காயங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே அனுபவ உண்மையும் கூட. நமது நன்மைக்காகத்தான் இவை கூறப்பட்டுள்ளன. பஞ்சாங்கங்களில் சகுனம் பார்ப்பது சம்பந்தமான விஷயங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment