Tuesday, July 19, 2011

கால் பெரு விரல் ரேகையை வைத்து ஜாதகம் சொல்லலாமா?

சாமுத்திரிகா லட்சணத்தில் கண் பற்றி, அதாவது உள் விழி, திரண்டிருக்கும் விழி, அதன்பிறகு முட்டியில் இருக்கும் கோடுகளை வைத்தெல்லாம்  நிறைய சொல்லியிருக்கிறார். முட்டியில் சிலருக்கு மூன்று கோடுகள் இருக்கும், சிலருக்கு முழு கோடு இருக்கும், சிலருக்கு அரை கோடு இருக்கும். இதை வைத்து சிலவற்றை சொல்ல முடியும். அதுபோல பெரு விரலிலும் ரேகைகள் உண்டு. காலிற்கு பிரதானம் பெரு விரல்தான். பெரு விரல் இல்லையென்றால் ஊன்றி நடப்பது என்பது கடினம். வழுக்கு பாதையில் கூட பெரு விரலை ஊன்றி வைத்து நடந்து வா என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், அதில் முழுமையான ஜாதகத்தை எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது.

சாமுத்திரிகா லட்சணப்படி அங்க அவையங்களை வைத்து ஓரளவிற்கு நிகழ்காலம், எதிர்காலத்தை பற்றிச் சொல்லலாம். துல்லியமாகவோ, மொத்தமாகவோ சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது துல்லியமாகவும் இருக்காது. ஓரளவிற்கு சிலவற்றைச் சொல்லலாம். அதிலும் லட்சக்கணக்கான ரேகைகளைப் பற்றி அவர்கள் படித்திருக்க வேண்டும். அப்படி படித்திருந்தால்தான் ஓரளவிற்கு சொல்ல முடியும். இல்லையென்றால் மிக மிகக் கடினம். அதனால், 10 முதல் 20 விழுக்காடு பலன்கள் வரை கால் பெரு விரல் ரேகையை வைத்து சொல்லலாம். மொத்தமாகச் சொல்ல முடியாது.

No comments:

Post a Comment