Tuesday, July 26, 2011

எது என்னுடையது?

துறவி ஒருவரிடம் பாடம் கற்க நான்கு சீடர்கள் வந்தனர்.
எல்லோரிடமும் அவர் "உங்கள் வீட்டிலிருந்து ஒரே ஒரு செம்பு மட்டும் கொண்டு வாருங்கள். மற்ற உபயோகங்களுக்கு ஆசிரமப்போருல்கலையே உபயோகித்து கொள்ளலாம்" என்றார். சீடர்கள், சில சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள். துறவிக்கு முதுமை நெருங்கியதும், தனக்கு பின் ஆசிரம பொறுப்பை ஒப்படைக்க, சீடர்கள் நால்வரில் தகுதியானவர் யார் என பரிசோதிக்க விரும்பினார்.
ஒருநாள் அவர்களை அழைத்து "உங்களது வீட்டிலிருந்து கொண்டுவந்த உங்கள் செம்பை எடுத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். நால்வரில் மூவர் மட்டும் சென்று தங்கள் அறையில் இருந்த செம்பை எடுத்து வந்துகாட்டினர்.
நான்காவது சீடன் சொன்னான்; " குருவே! நான் தப்களிடம் பாடம் கேட்க வந்த சில நாட்களிலேயே "நான்", "எனது" என்ற எண்ணம் போய்விட்டதே! ஆகவே என் வீடு என்று எதை சொல்வது? எங்கிருந்து எதை எப்படி எடுத்து வருவது ?" என்றான்.
குரு அவனிடமே ஆசிரம பொறுப்பை ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment