Monday, July 25, 2011

முன்னோர் வழிபாடு செய்ய மிக ஏற்ற தலங்கள்

காசி, கயா, பத்ரிநாத், திருக்கோகர்ணம், ராமேஸ்வரம் ஆகிய தலங்கள் முன்னோர் வழிபாடு செய்ய மிக ஏற்ற தலங்களாக உள்ளன.
* காசியில் 64 ஸ்நான கட்டங்கள் இருக்கின்றன. இதில் எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம்.
* கயாவில் உள்ள ஆலமரத்தடியில் விஷ்ணு பாதம் இருக்கிறது. இங்கு தர்ப்பணம் செய்தால், முன்னோர்களில் யாரேனும் சிரார்த்தம் செய்யாமல் இறந்திருந்தாலும் கூட, அவர்களும் ஆயுள் முழுவதும் சிரார்த்தம் செய்த பலனை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
* இமயமலையில் உள்ள பத்ரிநாத்தில், தர்ப்பணம் செய்வது மிக மிக புண்ணியம்.
* கர்நாடக மாநிலம் திருக்கோகர்ணத்தில் கடலோரமுள்ள மகாபலேஸ்வரர் கோயில் முன்பு கடலில் நீராடி, தர்ப்பணம் செய்வதும், கோயிலிலிலுள்ள கோடி தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் கொடுப்பதும் சிறப்பு.
* தமிழகத்தில் ராமேஸ்வரம் மிக முக்கிய புண்ணியத்தலம். இங்கே தினமும் தர்ப்பணம் கொடுக்கலாம். கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தத்திலும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தத்திலும் நீராடி திவசம் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment