Monday, July 25, 2011

இளையோர் கருத்து

பாண்டவர் படைக்கு யாரைத் தலைமைத் தளபதி ஆக்குவது என்று ஆலோசனை நடந்தபோது, சகாதேவனின் கருத்தை முதலில் கேட்டார், தருமர். மூத்தவர்களுக்கு முன்னால் இளையவர்களுடைய கருத்தைத் தெரிந்து கொள்வது அக்கால வழக்கம். முதியவர்கள் முதலில் பேசிவிட்டால், மாற்றுக் கருத்து இருந்தாலும் மரியாதை காரணமாக இளையவர்கள் மவுனமாக இருந்து விடக்கூடும் அல்லவா?

No comments:

Post a Comment