Thursday, July 21, 2011

அதிகாலை எழுவது!

அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை. இந்த நேரம் தேவர்களும் பித்ருக்களும் ஒன்று கூடும் நேரம் (இறந்த மூத்தவர்கள் அனைவருக்கும் பித்ருக்கள் என்று பெயர்). காலையில் அவர்களை நினைக்க வேண்டும். இன்று நான் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் தாங்கள் துணையாய் இருந்து வெற்றிக்கிட்டச் செய்ய வேண்டும் என்று மனதில் தியானித்து கடமைகளைத் தொடங்க வேண்டும்.
அதிகாலையில் கண் விழித்து பின் கடவுளை தியானித்து, நம் பெரியோர்களை நினைத்துக் கொண்டு அன்றுள்ள பொழுதைத் தொடங்கித்தான் பாருங்களேன். அதிகாலை எழுந்திருப்பதால் உடல் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருக்கும், மன அழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும், காரியங்கள் கச்சிதமாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்

No comments:

Post a Comment