Wednesday, March 21, 2012

கோயிலுக்கு சென்று தேங்காய்உடைத்து வீட்டுக்கு எடுத்து வந்தால்


தேங்காயை கவிழ்த்து போடுங்க!
கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வீட்டுக்கு எடுத்து வந்தால் அதை கவிழ்த்து போட வேண்டும். நேராக வைப்பதை அமங்கலமாக முன்னோர் கருதினர். ஒருவர் இறந்து விட்டால் தேங்காய் உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி நிமிர்த்திய நிலையில் தீபமேற்றுவது வழக்கம். அதைப் போல பிரசாதக்காயை நிமிர்த்தி வைக்கக்கூடாது. இதில் ஒரு அறிவியல் தத்துவமும் உண்டு. உடைத்த தேங்காயை பூச்சிகள், பல்லிகள் முகர்ந்து பார்க்கும். இதனால் நோய்க்கிருமிகள் பரவும், நம் முன்னோர் உணவுப் பொருட்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கச் சொன்னதன் காரணம் நம்மை நோயில் இருந்து காத்துக் கொள்ளத்தான்.

No comments:

Post a Comment