Monday, May 7, 2012

சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்?


சுவாமிக்கு முற்றின தேங்காய் உடைக்கிறோம். இதன் தாத்பர்யத்தை உணர்ந்து படைத்தால் சிறப்பு. தேங்காயில் இருக்கும் இளநீர் உலக ஆசைகளைக் குறிக்கும். அதன் கெட்டியான ஓட்டை நம்பி தண்ணீர் இருப்பது போல, நமது உடலும் நிலையானது என்று எண்ணுகிறோம். முற்றின தேங்காயில் நீர் வற்றிவிடுவது போல, ஆன்மிக சிந்தனை நம்முள் வளர உலக ஆசைகள் ஒருபோதும் தீண்டுவதில்லை. நீர் வற்றியபின், தேங்காய் கெட்டுப்போகாமல் காய்ந்து விடும். அதுபோல ஆசைகளைத் துறந்தவனும் பக்குவநிலை பெறுகிறான். முதிர்ந்த தேங்காய் இறைவனுக்குப் படைக்கப் படுவதைப் போல பக்குவ ஆன்மாக்களையும் கடவுள் ஏற்று அருள்புரிகிறார்.

No comments:

Post a Comment