Monday, May 7, 2012

பாம்பின் காலை பாம்பு தானே அறியும்,


ஒருவருக்கு நன்மை கிடைக்கும் என்றால், பொய் சொன்னாலும் தவறில்லை என்பதை சீதை, அனுமன் ஆகியோரே செய்து காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையைக் காவல் செய்தவள் லங்கிணி. அனுமன் இலங்கையில் நுழைந்ததும், ""ஏ குரங்கே! நீ யார்?எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?''என்று அதட்டினாள்.
ராமனின் மனைவி சீதையைத் தேடி வந்திருக்கும் உண்மையைச் சொன்னால் பிரச்னை ஆகுமல்லவா! எனவே, ""இங்கே இருக்கும் வனப்பகுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அதைச் சுற்றிப் பார்க்க வந்தேன்,'' என்று பொய் சொன்னார். சீதையைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, அவர் அசோகவனத்தை துவம்சம் செய்தார். ராட்சஷியர் அலறியடித்து சீதையிடம் வந்து, ""இந்த குரங்கு யார்? ஏன் இப்படி வனத்தை அலங்கோலப்படுத்துகிறது?'' என்று கேட்டனர்.
"ராமனின் தூதன் இவன்' என்ற உண்மையைச் சொன்னால், அனுமனுக்கு பிரச்னை வரும் என்பதால், ""ராட்சஷர்களான உங்களுக்கே தெரியாவிட்டால் எனக்கு எப்படி தெரியும்? பாம்பின் காலை பாம்பு தானே அறியும்,'' என்று பதிலளித்து விட்டு அமைதியாக இருந்து விட்டாள்.

No comments:

Post a Comment