Tuesday, June 19, 2012

வயதானவர்கள் நல்லொழுக்கம், கட்டுப்பாடு கொண்டவர்களாக வாழத் தொடங்க வேண்டும். (15.6.12)





கட்டுப்பாடில்லாத காளை எல்லாரையும் முட்டித்தள்ளி விடுவது போல, காளைப்பருவத்தில் வாலிபர்களும் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறார்கள். காளைக்கு மூக்கணாம் கயிறு போட்டாக வேண்டும். அப்போது தான் அது தனக்கும் உபயோகமாக, மற்ற பேருக்கும் <உபயோகமாக உருவாக முடியும். நல்லபடியாக வளர்ச்சி பெறாமல், தாங்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற கவலை மட்டும் வாலிபர்களுக்கு இருந்துவிட்டால் போதும். பிரியப்பட்டு தானே மூக்கணாங்கயிறு என்னும் கட்டுப்பாட்டை போட்டுக் கொண்டு விடுவார்கள். மற்றவர்கள் போடுவதற்கும் இஷ்டப்பட்டு விடுவார்கள்.
அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டை எப்படி உண்டு பண்ணுவது? பெரியவர்கள் தான் விடாமல் பிரியத்துடனும், பொறுமையுடனும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் சொல்ல வேண்டுமானால் சொல்பவர்களும் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் உபதேசத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? அதனால், வாலிபர்களை உத்தேசித்தாவது வயதானவர்கள் நல்லொழுக்கம், கட்டுப்பாடு கொண்டவர்களாக வாழத் தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment