Thursday, June 21, 2012

சுப்ரபாதம் என்றால் என்ன?'

சுப்ரபாதம் என்றால் என்ன?'' என்று பாரதியாரிடம் கேட்டார் அவரது நண்பரான கிருஷ்ணன் என்பவரின் தாய்.
""சுப்ரபாதமா? அப்படியென்றால் என்ன?'' ஒன்றும் தெரியாதவர் போல் பதிலளித்தார் மீசைக்காரர்.
அந்தத்தாய் மகனை வீட்டுக்குள் அழைத்தார்.
""ஏனடா! இந்த மீசைக்காரரை பெரிய கவிஞன் என்றாய். இந்த ஆளுக்கு சுப்ரபாதம் என்றால் என்ன என்று கூட தெரியலையே,'' அம்மா சலித்துக் கொண்டார்.
நண்பர் கிருஷ்ணனும், பாரதியும் வெளியே கிளம்பினர்.
செல்லும் வழியில், ""கிருஷ்ணா! அம்மா கேட்டார்களே! சுப்ரபாதம், அப்படியானால் என்ன?'' என்றார்.
""அதுவா! சமஸ்கிருதத்தில் சுப்ரபாதம். தமிழில் திருப்பள்ளியெழுச்சி. திருப்பதியில் பெருமாளை எழுப்புவார்களே! கவுசல்யா சுப்ரஜா என்று! இங்கே மாணிக்கவாசகர் திருவெம்பாவை, ஆண்டாள் திருப்பாவை பாடுகிறார்களே அதிகாலையில்...அது தான்.''
""அப்படியா!'' பாரதியார் கிளம்பி விட்டார்.
அடுத்தநாளே ஒரு பாடல் தொகுப்புடன் வந்தார்.
நண்பரின் அம்மாவிடம் காட்டினார்.
""அம்மா! நீங்கள் கடவுளை எழுப்பும் பாடல்களைப் பற்றி சொன்னீர்கள். இதோ! நான் பாரதஅம்மா (பாரதத்தாய்) குறித்தே
சுப்ரபாதம் பாடியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்,'' என்றார்.
அருமையான அந்தத் தொகுப்பை படித்த அம்மையார், இந்த மீசைக்காரர் நம்மிடம் ஒன்றும் தெரியாதது போல நடித்து விட்டு, வெளுத்துக் கட்டியிருக்கிறாரே என மனதுக்குள் புகழ்ந்தார்

No comments:

Post a Comment