Tuesday, June 19, 2012

உலகிலேயே "எடை அதிகமான ஊர்!

பரம்பொருளான விஷ்ணு அயோத்தியில் ராமராக அவதரித்த போது தேவதைகள் எல்லாம் பூலோகத்தில் ஒன்றுகூடினர். கையில் தராசை வைத்துக் கொண்டு அயோத்தியை ஒரு தட்டிலும், வைகுண்டத்தை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தனர். வைகுண்டம் மேலே இருக்க, அயோத்தி இருந்த தட்டு கீழே இருந்தது. ராமர் பிறந்த இடம் புனிதமானது என்பதால் அயோத்தியின் எடை அதிகரித்தது. ராமாயணத்தில், வால்மீகி முனிவர் அயோத்தியின் பெருமையைப் பாடியுள்ளார். நம்மாழ்வாரும் இவ்வூர் பெருமையைப் புகழ்ந்திருக்கி றார். ""இவர்களெல்லாம் சொல்லியபிறகு அடியேன் அற்ப புத்தி கொண்டவன். என்னால் இவ்வூர் பெருமை பற்றி என்ன சொல்லிவிட முடியும். இருந்தாலும் சொல்கிறேன்' என்று அயோத்தி பற்றி கம்பர் வர்ணிக்கிறார்.

No comments:

Post a Comment