Thursday, July 12, 2012

இந்த லோகமும் ஒரு கானல்நீர்,''


பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ""ஹா ஹா'' என்று தாகம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்காது. ஆனால், அங்கே ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அது தான் "கானல்நீர்' என்பது. பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று பிரதேசம் லேசாகி விடுகிற போது, தூரத்தில் இருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே பிரதிபிம்பம் தெரிகிற மாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்தில் இருந்து பார்க்கிற போது, வெறும் மணற்பாங்கான பூமி, ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட கானல்நீரை மான்கள் "ஜலம்' என்று நினைத்து தேடித் தேடி ஓடி கடைசியில் ஓட முடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல் பரிதாபமாக உயிர் விடுகின்றன.
இதுபோல "லோகம் மாயை' என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ""அதெப்படி மாயை? லோகம் தான் கண்ணுக்குத் தெரிகிறதே?'' என்று கேட்டால்,"" கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால், அது நிஜமாகி விடுமா? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல்நீர்,'' என்று அத்வைத கிரந்தங்களில் சொல்லியிருக்கிறது.

1 comment:

  1. " கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால், அது நிஜமாகி விடுமா?

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete