Thursday, July 12, 2012

உதைத்த பாதம் நொந்ததோ'


பிருகுமுனிவருக்கு சிவனைப் போல மூன்று கண்கள் உண்டு. சிவனுக்கு நெற்றியில் கண். இவருக்கு பாதத்தில் ஞானக்கண். இதைக்கொண்டு, பின்னால் நடக்கப்போவதை முன்பே அறிவிக்கும் சக்தி பெற்றிருந்தார். ஒருமுறை, மகாவிஷ்ணுவின் பொறுமையைச் சோதிப்பதற்காக வைகுண்டம் வந்தார். சயனக்கோலத்தில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த விஷ்ணு, முனிவர் வந்தநோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவரைக் கண்டு கொள்ளாதது போல் நடித்தார். பிருகுவுக்கு கோபம் வந்து விட்டது. ""ஒரு முனிவன் உன்னைத் தேடி வந்தும் என்னை நீ அவமதித்தாய்,'' என்று காலால் விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். துயில் கலைந்து எழுவது போல் நடித்த பெருமாள், "உதைத்த பாதம் நொந்ததோ' என்று கைகளால் தாங்கிப் பிடித்தார். மும்மூர்த்திகளில் பொறுமை மிக்கவர் விஷ்ணுவே என்பதை பிருகு அறிந்து கொண்டார். பரம்பொருளையே எட்டி உதைத்த தோஷத்தால், பிருகுவின் காலில் இருந்த ஞானக்கண் மறைந்தது.

No comments:

Post a Comment