Friday, July 13, 2012

உண்ண கூடாத உணவுகள் எவை?

உண்ண கூடாத உணவுகள் எவை தெரியுமா? சில உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும் என ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அவை .. கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்த சோறு, வரகு முதலான தான்யங்களினால் அமைந்தது, வாயினின்று விழுந்த பொருளுடன் சம்பந்தமுடையது, வாயில் போட்ட கவளத்தில் மீந்திருப்பது, கெட்டவர்கள் கண்ணால் பார்த்த உணவு, தீய்ந்து போனது, துணி, தும்மல் ஆகியவை பட்டது, நாய் முதலிய பிராணிகளால் முகர்ந்தது, உண்டது, ஏகாதசி போன்ற உண்ணாநோன்பு விரதகாலத்தில் சமைத்தது ஆகிய உண்டிகள் தள்ளப்பட வேண்டியவை. மேலும், பிராணிகள், மனிதர், முகர்ந்து பார்த்த உணவு, பிணியாளர்கள், ரோகமுடையவர்கள் ஸ்பர்சித்தது, விருப்பமில்லாமல் இன்முகமாக அளிக்கப்பட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை விழுந்தது, ஸந்யாசிகள் கொடுத்தது, அவர்கள் பாத்திரத்திலிட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியன வாய்பட்ட உணவும் விலக்கப்பட வேண்டியவை. வாயில்லா வாயிலினால் வந்தசோறும்,வரகு முதலாகா தென்றுரைத்த சோறும்வாயினின்றும் விழுமவைதான் பட்டசோறும்வாய்க் கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்,தீயவர்கள் படுஞ்சோறும் தீதற் சோறும்சீரையுரை தும்மலிவை பட்டசோறும்நாய் முதலானவை பார்க்குந் தீண்டும்சோறுநாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே.

No comments:

Post a Comment