Sunday, July 29, 2012

அவரவர் பார்வையில் உலகின் செயல்கள் வித்தியாசப்படுகின்றன

துறவி ஒருவர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து உலகையே மறந்த நிலையில் இருந்தார். அப்போது, ஒரு திருடன் வந்தான். ""இந்த ஆசாமியும் நம்மைப் போல் திருடன் போல! இரவெல்லாம் விழித்து விட்டு இப்போது தூங்குகிறான்,'' என்று சொல்லியபடியே போய்விட்டான். அடுத்து ஒரு மொடாக்குடியன் வந்தான். போதையில்,"" இவன் நம்மை மாதிரி குடித்துவிட்டு கண்ணை விழிக்க முடியாமல் திணறிப் போய் உட்கார்ந்திருக்கிறான். நான் எவ்வளவு குடித்தாலும் நிதானமாக இருக்கிறேன்,'' என்று தன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டு போய்விட்டான். அடுத்து வந்த துறவிக்கு தான், அவர் தியானத்தில் ஆழ்ந்து போயிருந்தது புரிந்தது. அவரவர் பார்வையில் உலகின் செயல்கள் வித்தியாசப்படுகின்றன. தங்களைப் போலவே மற்றவர்களையும் உலகம் கருதுகிறது. பக்தியைக் கூட பாவத்தொழிலாகப் பார்க்கிறது. நமது உலக ஆசைகள் பக்தியையும், தூய்மையையும் நமக்குத் தெரியவிடாமல் மூடிவிடுகிறது. நம்மை நாம் என்று ஒழுக்கசீலர்களாக மாற்றிக்கொள்கிறோமோ, அப்போது உலகத்தில் உள்ளவர்களின் ஒழுக்கம் நம் கண்ணில் படும்.

No comments:

Post a Comment