Thursday, September 6, 2012

கந்தனின் 16 நாமங்கள்

சிவ- பார்வதி தம்பதி களுக்கு இரு புதல்வர்கள். இருவருமே பெற்றோரை மிஞ்சிய புதல்வர்களாக புராணங்களில் புகழப்படு கின்றனர். சீதாராமனுக்கு லவன், குசன் என்று இரு புதல் வர்கள். அவர்கள் ராம னையே எதிர்த்துப் போர் புரிந்தனர். அவர்கள் கூறும் தனது சுயசரித ராமாயணத்தை ராம பிரானே விரும்பிக் கேட்டார். என்றாலும் லவ குசர்கள் தகப்பனாரை விஞ்சவில்லை. கிருஷ்ண னுக்கு பல பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் யாரும் கண்ணனை மிஞ்சியதாகப் புராண மில்லை. பிரம்மாவுக்கும் நிறைய மானச புத்திரர்கள் உண்டு. நாரதரும் அவர் புதல்வர்தான். ஏன், பிரம்மனே மகாவிஷ்ணுவின் புதல்வர்தான். அவர் மகாவிஷ்ணுவைவிட உயர்ந்தவர் என்று கூறமாட்டோம். நாரதரை எந்த புராணத்தில் கண்டாலும், தகப்பன் பிரம்மனைவிட உயர்ந்தவர் என்று கூறமாட்டோம். ஆனால் சிவ- பார்வதி புத்திரர்களான கணபதி, கந்தன் இருவருமே ஷண்மதத்தில் ஒருவராக உயர்த்தப்பட்டுள்ளனர். கணபதியை வணங்காது சிவ- பார்வதிகூட இயங்க முடியாது. அது கணபதிக்கு சிவன் தந்த வரம். ஒருசமயம், சிவனே அந்த விரதத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போயிற்று. அதனால் நிகழ்ந்ததை, "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா' என்று அருணகிரிநாதர் பாடுகிறார். திரிபுராசுரனை வதைக்க தேர் ஏறிச் சென்றபோது சிவபெருமான் கணபதியை வணங்காமல் சென்றார். அதனால் சிவனது ரத அச்சு முறிந்த தாம். இது நடந்த இடம் அச்சிறுபாக்கம்- சென்னை அருகில் உள்ளது. லலிதா ஸஹஸ்ர நாமம், "காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஸ்வரா மஹாகணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா பண்டாசுரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷினி' என்று கூறுகிறது. அதாவது, பண்டாசுர வதத்திற்கு லலிதை, விக்ன யந்திரத்தை உடைக்க கணபதியை நினைக்க வேண்டியதாயிற்று. வைகாசி விசாகம் இவ்வருடம் 3-6-2012 அன்று வருகிறது. வைகாசி விசாகப் பெருமை என்ன? பரமேஸ்வரனிடம் வரம்பெற்ற சூரபத் மாதியர்களை பிரம்மா, விஷ்ணுவால் அழிக்க முடியாது. எனவே சிவனே மறுவுருவமாக- சிவஜோதியே ஸ்கந்தனாக, ஷண்முகனாக, கார்த்திகேயனாக, சரவணபவனாக, குமரனாக வைகாசி விசாக தினத்தில் அவதரிக்க வேண்டியதாயிற்று. ஸ்கந்த அவதார லீலைகளை வியாசரின் ஸ்காந்தம் என்னும் புராணம் விவரமாகக் கூறும். மற்ற புராணங்களிலும், மகாபாரதம், ராமாயணத்திலும் கந்தனின் லீலா பராக்ரமங்களைக் காணலாம். 17 புராணங்களும் சேர்ந்து மூன்று லட்சம் சுலோகங்கள் கொண்டவை என்றால், ஸ்காந்தம் மட்டும் ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. வியாசரால் நைமிசாரண்யத்தில் கூறப்பட்டது. சிவ ரஹஸ்ய காண்டம் 13,000 சுலோகங்கள், ஏழு காண்டங்கள் உள்ளன. சிவகுருநாதன், சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்று சிவப்புதல்வன் புகழப்பட்டுள் ளான். காரணம் என்ன? "வேதத்தை ஆதாரமாகக் கொண்டு சிருஷ்டி செய்கிறேன்' என்று அகம் பாவத்துடன் கூறிய பிரம்மனிடம், "வேதத்தைக் கூறும்' என்றான் முருகன். பிரம்மன், "ஓம்' என்று ஆரம்பிக்க, "நிறுத்தும்; ஓம் என்றீரே. அதன் பொருள் என்ன?' என்று கேட்டான். பதில் கூறமுடியாமல் திணறிய பிரம்மனின் தலையில் குட்டி, சிறையில் அடைத்து, சிருஷ்டி தொழிலை தானே மேற்கொண்டான் கந்தன். சிவபெருமான், "ஓம் என்னும் பிரணவப் பொருளை நீ அறிவாயோ' எனறு கந்தனைக் கேட்க, "உபதேசம் கேட்கும் முறையில் கேட்டால் உரைப்போம்' என்று கூற, சிவனும் பணிந்து கேட்க, சிவகுமாரன் சிவகுருநாதனா னான் அல்லவா! தகப்பனையே மிஞ்சிய புதல்வன் ஆனான் கந்தன். வியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, கந்தனின் உன்னதமான 16 பெயர்களைக் கூறி, அதற்கு பலஸ்ருதியும் கூறுகிறார். "ஸுப்ரமண்யம் ப்ரணமாம்யஹம் ஸர்வக்ஞம் ஸர்வகம் ஸதா அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம் நாம ஷோடஸ ப்ரதமோ ஞான சக்த்யாத்மா த்விதியோ ஸ்கந்த ஏவச அக்னிபூஸ்ச த்ருதீயஸ்யாத் பாஹுலேய: சதுர்த்தக: காங்கேய: பஞ்சமோ வித்யாத் ஷஷ்ட: சரவணோத்பவ: ஸப்தம: கார்த்திகேய: ஸ்யாத் குமாரஸ்யாத் அத அஷ்டக: நவம: ஷண்முகஸ்சைவ தஸம: குக்குடத்வஜ: ஏகாதச: சக்திதர: குஹோ த்வாதச ஏவச த்ரயோதஸோ ப்ரம்மசாரி ஷாண்மாதுர: சதுர்தச: க்ரௌஞ்சபித் பஞ்சதசக: ஷோடஸ: சிகிவாஹன:' முருகனின் 16 நாமங்களைக் கூறுவதற்கு முன்பும் பின்பும் பலஸ்ருதி கூறுகிறார். கோரிய பொருட்களை அடைவதற்காக, எல்லாம் அறிந்தவனும் எங்கும் உள்ளவனுமான சுப்ரமண்யனை நமஸ்கரித்து முருகனின் 16 நாமங்களைக் கூறுகிறேன். 1. ஞானசக்த்யாத்மா- ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக இருப்பவன். 2. ஸ்கந்தன்- சத்ருக்களை அழிப்பவன்; (ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக- பற்றுக்கோடாக இருப்பவன்; சிவஜோதியாக வெளிப்பட்டவன். 3. அக்னி பூ- அக்னியில் உண்டானவன்; அக்னியால் ஏந்தப்பட்டவன்;அக்னி ஜோதியாக எழுந்தவன். 4. பாஹுலேயன்- வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன். 5. காங்கேயன்- கங்கை நதியில் உண்டானவன். 6. சரவணோத்பவன்- நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின் மறுவுருவம் சரவண மடுவாம்- அதனில் தோன்றியவன்). 7. கார்த்திகேயன்- கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன். 8. குமாரன்- குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்) இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்; மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்; அஞ்ஞானம் அழித்து ஞானம் ஈபவன். 9. ஷண்முகன்- ஆறு முகம் உடைய வன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன். (அருணகிரியின் திருப்புகழ் பாடல் களைப் படித்தால் இது உண்மையென்று விளங்கும்). 10. குக்குடத்வஜன்- கோழியைக் கொடி யாகக் கொண்டவன்; சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத் திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது. 11. சக்திதரன்- வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு ஆயுதமாயினர்). 12. குஹன்- பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக குஹன், அதிகார குஹன் என்பர். (லய குஹன்- உயிரை ஒழிவில் ஒடுக்கி "ஒழிவில் ஒடுக்கம்' என்ற பதவி தருபவன். யோக குஹன்- ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன். அதிகார குஹன்- பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.) 13. ப்ரம்மசாரி- வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன். 14. ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக உடையவன். 15. க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்; அஞ்ஞானம் என்கிற மலையை- இருளை ஞானம் என்கிற வாளால் தகர்ப்பவன். 16. சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம் முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான். மேலும் இந்த 16 நாமங்களை உச்சரிப்பதால் வரும் பலன்களை வியாசர் கூறுகிறார். "ஏதத் ஷோடஸ நாமானி ஜபேத் ஸம்யக் ஸதாதரம் விவாஹே துர்கமே மார்கே துர்ஜயே சததைவ ச கவித்வே ச மஹாஸாஸ்த்ரே விக்ஞானார்த்தி பலம் லபேத் கன்யார்த்தி லபதே கன்யாம் ஜயார்த்தி லபதே ஜயம் புத்ரார்த்தி புத்ரலாபம் ச தனார்த்தி லபதே தனம் ஆயு: ஆரோக்ய வஸ்யம் ச தன தான்ய ஸுகாவஹம்' அன்புடன் எப்போதும் இந்த 16 நாமங்களை ஜெபித்தால், திருமணத்திலும், செல்ல முடியாத வழியில் செல்லும்போதும், வெல்ல முடியாத கடினமான காரியத்திலும், கவிஞன் ஆவதிலும், மகத்தான உயர்ந்த சாஸ்திரங்களிலும் வேண்டிய பலனை அடையலாம். கன்னிகை வேண்டுபவன் கன்னிகையையும்; வெற்றியை வேண்டுபவன் வெற்றியையும்; பிள்ளைப் பேறு வேண்டுபவன் புத்திரர்களையும்; பொருள், தனம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், யாவரையும் வசீகரிக்கும் தன்மை, பொருள், தான்யம், சுகம், யாவும் பெற்று இன்புறுவான்.. பிரம்ம- நாரத சம்வாதமாக சுப்ரமண்ய ஸஹஸ்ர (1,000) நாமங்களுக்கு பலஸ்ருதி யாது கூறப்படுகிறது? "இதிதாம்னாம் ஸஹஸ்ராணி ஷண்முகஸ்ய ச நாரத ய: படேத் ஸ்ருணுயாத் வாபி பக்தி யுக்தேன சேதஸா ஸஸத்யோ முச்யதே பாபை: மனோ வாக்காய ஸம்பவை: ஆயுர் வ்ருத்திகாம் பும்ஸாம் ஸ்தைர்ய வீர்ய விவர்தனம் வாக்யேன ஏகேன வக்ஷ்யாமி வாஞ்சிதார்த்தம் ப்ரயச்சதி தஸ்மாத் ஸர்வ ஆத்மனா ப்ரம்மன் நியமேன ஜபத் ஸுதி:' அன்புடன் இந்த 1,000 பேர்களைப் படித் தாலோ கேட்டாலோ மனம், வாக்கு இவற்றால் உண்டான பாவங்கள் அழியும். வாழ்நாள் அதிகரிக்கும். உடல் பலம் அதிகரிக்கும். ஒரு நாமம் சொன்னாலும் கேட்ட பொருள் அடைய லாம். ஆக, யாவரும் நியமத்துடன் இதனை ஜெபம் செய்ய வேண்டும். 16 நாமங்கள் சொல்வதன் பலன், 1,000 நாமங்கள் சொல்வதைவிட அதிகமாக உள்ளதே! ஆக 16 நாமங்களே மிக உன்னதம் போலும்!

No comments:

Post a Comment